Wednesday, November 20, 2019

ORUMURAI PAARKANUM ENAKKAI

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையை மகிமையை
இம்மானுவேல் பிறந்தாரே-2

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே

IMMANUEL PIRANTHARAE

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையை மகிமையை
இம்மானுவேல் பிறந்தாரே-2

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே

UMMAI POLAVE MAATRIDUM ENNAIYE

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2
-உம்மை போலவே

உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2
-கவர்ந்து

உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2
-கவர்ந்து

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4
-உம்மை போலவே

EN KANMALAIYUM MEETPARUMAANA KARTHAVE

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்-2

1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது-2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்-2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

3.இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால்-2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

4.தங்கம் பொன்னைவிட 
அதிகமாய் விரும்புகிறேன்-2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

SONTHAMAKUVOM SUDHANDHARIPPOM

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் 
இந்தியா இயேசுவுக்கே
காஷ்மீர் முதல் குமரி வரை 
இந்தியா இயேசுவுக்கே 

இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . 
இந்தியா இயேசுவுக்கே . . . . 
எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 

1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே 
பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே 
ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே 
இமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

2 . டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கே 
உத்தர் பிரதேசம் இயேசுவுக்கே 
மத்திய பிரதேசம் இயேசுவுக்கே 
பீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே 

3 . அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே 
அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே 
நாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கே 
மிசோராம் திரிபுரா இயேசுவுக்கே

4 . மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே 
ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே 
மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே 
கர்நாடகம் கேரளா இயேவுக்கே 

5 . ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே 
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே 
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே 

( இதே இராகத்தில் பின்வருமாறு பாடலாம் )

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் 
தமிழ்நாடு இயேசுவுக்கே
சென்னை முதல் குமரி வரை 
தமிழ்நாடு இயேசுவுக்கே
இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . 
தமிழ்நாடு . . . இயேசுவுக்கே 
எங்கள் தமிழ்நாடு இயேசுவுக்கே 

1 . சென்னை திருவள்ளூர் இயேசுவுக்கே 
வேலூர் காஞ்சிபுரம் இயேசுவுக்கே 
திருவண்ணாமலை இயேசுவுக்கே 
விழுப்புரம் கடலூர் இயேசுவுக்கே 

2 . கிருஷ்ணகிரி தர்மபுரி இயேசுவுக்கே 
சேலம் நாமக்கல் இயேசுவுக்கே 
ஈரோடு நீலகிரி இயேவுக்கே 
கோவை திருப்பூர் இயேசுவுக்கே 

3 . பெரம்பலூர் அரியலூர் இயேசுவுக்கே 
நாகை காரைக்கால் இயேசுவுக்கே 
கரூர் திருச்சி இயேசுவுக்கே 
கள்ளக்குறிச்சி இயேசுவுக்கே

4 . தஞ்சாவூர் திருவாரூர் இயேசுவுக்கே 
திண்டுக்கல் புதுக்கோட்டை இயேசுவுக்கே 
தேனி மதுரை இயேசுவுக்கே 
சிவகங்கை விருதுநகர் இயேசுவுக்கே

5 . இராமநாதபுரம் இயேசுவுக்கே 
தூத்துக்குடி முத்துநகர் இயேசுவுக்கே 
திருநெல்வேலி இயேசுவுக்கே 
கன்னியாகுமரி இயேசுவுக்கே 

NITCHAYAMAGAVEH NEER ENNAI AASIRVATHIPEER

நிச்சயமாகவே நீர் என்னை ஆசீர்வதிப்பீர்
நிச்சயமாகவே நீர் என்னை பெருகப்பண்ணுவீர்

நம்புவேன் வார்த்தையை
ஆராதிப்பேன் இயேசுவை - (2)

1. திரளான நன்மைகள் எனக்குத் செய்தீர் 
தூய மனதுடன் நன்றி சொல்வேன்... (2)
கடந்ததை நினைத்துப்பார்க்கிறேன்
இழந்ததை திருப்பிக்கொள்ளுவேன்...(2)
( நம்புவேன் இயேசுவை ) 

2. மகிமையான வாழ்க்கையை 
எனக்குத் தந்தீர்
மகிழ்ச்சியோடு நன்றி சொல்வேன்... (2)
எந்தன் சந்ததியை ஆசீர்வதிப்பீர்
எந்தன் சந்தானத்தைப் 
பெருகப்பண்ணுவீர்....(2)
( நம்புவேன் இயேசுவை )

3. நிறைவான வாக்குத்தத்தங்கள்
எனக்குத் வைத்தீர்
மன நிறைவோடு நன்றி சொல்வேன்..(2)
உண்மையாக ஆராதிப்பேன்
நிச்சயமாக ஆசீர்வதிப்பீர்..... (2)
( நம்புவேன் இயேசுவை )

IRAIVA UNTHAN ARASU MALARA ULAIKKA

இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்
ஏழை எளியோர் ஏற்றங் காண என்னைத் தருகின்றேன்
இதயம் மகிழ்ந்து ஏழை என்னை பலியாய் ஏற்றிடுவாய்
கனிவாய் மாற்றிடுவாய்

1. உலகம் யாவும் வெறுமை என்று
உன்னைப் பணிந்தேன் தஞ்சம் என்று
குயவன் கையில் களிமண் போல
உனது பணிக்காய் என்னைத் தந்தேன்
உனக்காய்த் தானே வாழுகின்றேன்
எந்தன் உயிரும் உந்தன் சொந்தம்
தடைகள் மலையாய்ச் சூழ்ந்து கொண்டால்
தயக்கமின்றி எழுந்து நடப்பேன்
ஆபேல் தந்த உயர்ந்த பலி போல்
அன்பே உனக்காய் காணிக்கையாகிறேன்

2. துடுப்பை இழந்த படகைப் போல
தனித்து தவித்துக் கலங்கும் நேரம்
விழியைக் காக்கும் இமையைப்போல
அன்பின் கரத்தால் அணைத்துக் காப்பாய்
முடவன் போல என்னை மாற்ற
தினமும் உழைக்கும் மனிதருண்டு
மண்ணில் விழுந்து மடிந்த பின்னும்
முளைக்கும் விதைபோல் உயிர்த்து எழுவேன்
மழையைத் தேடும் பயிரைப்போல
அன்பே உனையே தேடிவந்தேன்

PAAR ENGUM MAGILDHU AADA

பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய்
மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனை போற்றுவோம்

விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற 
தேவ மைந்தன் இன்று பிறந்தார்

மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே

வானில் புது விடிவெள்ளி
தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை
கூறியதே
ஞானிகளும் பின்சென்று
காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

KODAKODI STHOETHTHIRAM YEREDUPPOM

இயேசுவில் கெம்பீரிப்போம்!
கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
தூய முகம் கண்டு கெம்பீரிப்போம்