Sunday, July 26, 2015

AKKINI NERUPPAI IRANGIVAARUM

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்
அபிஷேகம் தந்து வழி நடத்தும்
முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே (யாத் 3:2)
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே (1 இரா 18:38)
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
ஏசாயா நாவைத் தொட்டது போல‌
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே (ஏசா 6:7,8)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
அக்கினி மயமான நாவுகளாக‌
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே (அப் 2:3)
ஆவியின் வரங்களால் நிரப்பீனிரே 
இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட ( யாத் 13:21)
எங்களை நிரப்பும் ஆவியினால்

ADIMAI NAAN AANDAVARE ENNAI

அடிமை நான் ஆண்டவரே என்னை

ஆட்கொள்ளும் என் தெய்வமே
 
   தெய்வமே தெய்வமே
   அடிமை நான் ஆட்கொள்ளும் (லூக் 1:38)
 
1. என் உடல் உமக்குச் சொந்தம் இதில்
    எந்நாளும் வாசம் செய்யும் (1கொரி 6:19)
 
2. உலக இன்பமெல்லாம் நான்
    உதறித் தள்ளி விட்டேன்
 
3. பெருமை செல்வமெல்லாம் இனி
    வெறுமை என்றுணர்ந்தேன்
 
4. வாழ்வது நானல்ல என்னில்
    இயேசுவே வாழ்கின்றீர் (கலா 2:20)
 
5. என் பாவம் மன்னித்தருளும் உம்
    இரத்தத்தால் கழுவி விடும் (1 யோ 1:7)
 
6. முள்முடி எனக்காக ஐயா
    கசையடி எனக்காக (யோ 19:1,2)
 
7. என் பாவம் சுமந்து கொண்டீர் என்
    நோய்கள் ஏற்றுக் கொண்டீர் (மத் 8:17)

ATHIKAALAI STHOTHIRABALI

அதிகாலை ஸ்தோத்திரபலி

அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் (2)
 
1. எபிநேசர் எபிநேசர் 
   இதுவரை உதவி செய்தீர்
   எபிநேசர் எபிநேசர் (1 சாமு 7:12)
 
2. பரிசுத்தர் பரிசுத்தர்
   பரலோக ராஜாவே
   பரிசுத்தர் பரிசுத்தர் (ஏசா 6:3)
 
3. எல்ஷடாய் எல்ஷடாய்
   எல்லாம் வல்லவரே
   எல்ஷடாய் எல்ஷடாய் (ஏசா 9:6)
 
4. எல்ரோயீ எல்ரோயீ
   என்னை காண்பவரே
   எல்ரோயீ எல்ரோயீ (ஆதி 16:13,14)
 
5. யேகோவா யீரே
   எல்லாம் பார்த்துக் கொள்வீர்
   யேகோவா யீரே (ஆதி 22:14)
 
6. அதிசய தெய்வமே
   ஆலோசனை கர்த்தரே
   அதிசய தெய்வமே (ஏசா 9:6)
 
7. யேகோவா ஷம்மா
   எங்களோடு இருப்பவரே
   யேகோவா ஷம்மா (எசே 48:35)
 
8. யேகோவா ஷாலோம்
   சமாதானம் தருகிறீர்
   யேகோவா ஷாலோம் (நியா 6:24)
 
9. யேகோவா நிசியே 
   எந்நாளும் வெற்றி தருவீர்
   யேகோவா நிசியே (யாத் 15:26)
 
10. யேகோவா ரஃபா
    சுகம் தரும் தெய்வமே
    யேகோவா ரஃபா (யாத் 15:26 )

ANAITHAYUM SEITHU MUDIKKUM AATRAL ULLAVARE

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

 நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2)
 
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
    எனக்கென முன்குறித்த எதையுமே
    எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14)
    உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
 
2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு
    காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
    நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17)
 
3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்
    நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12)
    உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 
 
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10)
    காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை
   அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
 
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
    இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
    என் கண்கள் தானே அந்நாளில் காணுமே (யோபு 19:25)
 
    எப்போது வருவீரையா
    என் உள்ளம் ஏங்குதையா

UMMAI PAADAATHA NATKALUM ILLAYE


உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2   (உம்மை பாடாத)
                     
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்
அதனால் நான் சுத்தமானேனே -2
பொண்ணாக விளங்கச் செய்தீரே   (உம்மை பாடாத)
                    
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2    (உம்மை பாடாத)                      

என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2    (உம்மை பாடாத)  

NEERE YELLAM NEERE YELLAM

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம்  யேசுவே -2
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம்  யேசுவே -2


ஆராதிப்பேன்  ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்  யேசுவை -2
இன்பமோ துன்பமோ  சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன்  யேசுவை -2

நேசிப்பேன்  நேசிப்பேன்
நேசிப்பேன்  யேசுவை -2
 நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ
நேசிப்பேன்  யேசுவை -2

பின்தொடர்வேன்  பின்தொடர்வேன்
பின்தொடர்வேன்   யேசுவை -2
வெற்றியோ  தொல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன்   யேசுவை -2

UMMAI VIDA VERU YAARIDAM

உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா-2

வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ-2
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

பணம் இல்லையோ
பொருளில்லையோ
உடையில்லையோ
உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

IDAYATHIN KAAYATHAI AATTRIDUM

இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசையா -2
கரை கானா படகைபோல
தடுமாறும் வாழ்கையையா -2

யோவானை போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா -2

பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2

காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே  -2

ENNAI UM KAIYIL

என்னை உம் கையில்
படைத்தேன்  முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்  -2

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

என்னை உம் கையில்

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிருத்திடுமே ...

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

என்னை உம் கையில்

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் -2

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

என்னை உம் கையில்

Thanthaiyae Um Kaiyil En Aaviyai Oppadaikkintren

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும்
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்.

என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்
நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

Aani Konda Un Kayangalai

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2

வலது கரத்தின் காயமே - 2
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே - 2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே - 2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே - 2
திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே - 2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

Aandavarae Neero En Pathangalai Kazhuvuvathu


ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

நான் செய்வது இன்னதென்று
உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

ENGU POGIREER YESU THAIVAME LYRICS


எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் --எங்கு போகிறீர்

தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சுமத்தினேன்
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உன் விலாவில் குத்தினேனே
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரி துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

Siluvaiyil Nintru Paainthodum Rattham

சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா  --(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா  - சிலுவையில்

கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
குருதியும் வடியுதே சிரசினின்று --(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார்  --(2)   -சிலுவையில்

சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2)  -சிலுவையில்

Thayai Seivai Naatha

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் -தயை செய்வாய்

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் -தயை செய்வாய்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் -தயை செய்வாய்

Manitha O Manitha

மனிதா ஓ மனிதா
நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே  திரும்புவாய் -2
நினைவில் வை நினைவில் வை
நினைவில் வை  ஓ மனிதா

இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம்
இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம்
இருள்தனைக் களைவோம்  அருள்தனை அணிவோம்

கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும்
சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும்
சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்

PADUGAL NEER PATTA POTHU LYRICS

கெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய் நாதனே
மட்டில்லாக் கருணை என்மேல்
வைத்திரங்கும் இயேசுவே

பாடுகள் நீர் பட்ட போது
பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடி பாவம் தீர்த்து மோட்சம்
கொள்ளுவிக்க வல்லதே -கெட்டுப் போனோம்

துஷ்ட யூதர் தூணினோடு
தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்தபோது
காய்ந்த செந்நீர் எந்துணை -கெட்டுப் போனோம்

சென்னிமேல் கொடிய யூதர்
சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தால்
சர்வ பாவம் நீங்குமே -கெட்டுப் போனோம்

Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ -இயேசுவின்

அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு -இயேசுவின்

அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2
சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு -இயேசுவின்

எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2
எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு - இயேசுவின்

கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு
கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு
விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2
விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு  -இயேசுவின்

NAN PAAVI YESUVE LYRICS

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் 
என்னைத் தேற்றும் இயேசுவே -2

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே -2

புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை கட்டும் இயேசுவே -2

சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2

நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே -2

Nenjathilae Thooimaiyundo

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!
இயேசு வருகின்றார்.!
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாரம் - உன்னை
கொடிய இருளில் சேர்க்கும் -2
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் - உன்னை
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு - உன்னில்
கோடி இன்பம் காட்டும் - 2
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

Kalvaari Pookalai Em Karangalil Yenthi

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் - 2
காணிக்கை உமக்களிக்க - 2
குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் - உள்ளம்
ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

Kal Manam Karaiya Kankalum Panikka


கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)

என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2


நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா

Ennai Nesikkintraya

என்னை நேசிக்கின்றாயா - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா


வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா

பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ

Manithanae Nee Mannaga Irukkintai

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே


பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

Arokkiya Thayae Amma

ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2

சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2
உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்
-ஆரோக்கியத் தாயே

உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய்   -ஆரோக்கியத் தாயே

Kodi Vinmeen Vanathilae

கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த - 2
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2

Naalam Naalam Punitha Naalam

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்  (2)

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம்  (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்  (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்  (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம்  (2) -நாளாம் நாளாம்