Monday, October 12, 2015

UNNAIYE VERUTHUVITTAL ULIYAM

1. உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.
சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம்

2. சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும்.

3. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே

4. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்

5. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்

6. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.
இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே

UM ARUL PERA YESUVE NAAN

1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்,
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்,
ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

UM RAJJIYAM VARUNKAALAI KARTHARE

1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.

2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
நம் பெலனற்ற கையை நீட்டினார்.
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.

3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

UMMALE THAN EN YESUVE

1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.

2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

UMMAL AAGATHA KAARIYAM ONDRUM

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)
எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)
ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2

ULARTHA ELUMBUGAL UYIR PETRU ELA

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் . இன்று
அசைவாடும்
ஆவியான தேவா

1. நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் - அசை

2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

9. நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே

OOTRU THANNIRE ENTHAN DEVA AAVIYE

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே
கனிதந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட

3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

ETHANAI NANMAIGAL ENAKKU SEITHIR

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் - நான்
நன்றி ராஜா....நன்றி ராஜா

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்

3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா

ETHANAI NAATKAL SELLUM YESUVIN

1. எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?

ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்

2. சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?

3. தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?

4. கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?

5. உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?

ENTHANAI NAAVALPAADUVEN


1. எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை!
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை!

2. பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்!
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.

3. உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்;
புலம்பல் நீங்கும் பூரிப்பால்,
நிர்ப்பாக்கியர் நம்புவார்.

4. ஊமையோர், செவிடோர்களும்
அந்தகர், ஊனரும்,
உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!
நோக்கும்! குதித்திடும்!

5. என் ஆண்டவா, என் தெய்வமே,
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.

ENTHAN PUGALIDAME UMAKKU

எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா

1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
உமக்கு கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு ராஜா

2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
ஆலோசனை தினம் தருகின்றீரே
நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
உமக்கு கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு ராஜா

EN AATHMA NESA MEIPPARE

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் (3) ஜெபம் செய்யும்போது
ஆண்டவர் பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம் - 2

2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்

en aathmavum sariramum en

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

1. இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்


2. அப்பா உம் திருசித்தம் - என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்


3. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

EN YESU RAJAVUKKE ENNALUM STHOTHIRAM TAMIL LYRICS

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் - நான்

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்...ஆ...ஆ

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் - நான்

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே...ஆ...ஆ

yen yesuve ummai naan nesikkiren

1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்