Friday, September 23, 2022

Thoolil Irunthu uyarthineer

தூளிலிருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்

அல்லேலுயா

1. காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர்
தடைகளை தகர்ப்பவரே
உம் தயவை காண செய்தீரே

2. நிந்தை சொற்கள் நீக்கிட
உம் இரக்கத்தை விளங்க செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்திரா அற்புதம் செய்தீர்
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே

Aranji parthalum Why Me?

ஆராஞ்சு பார்த்தாலும்
காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும்
ரீசனு இல்ல - 2

கண்ணுல என் கண்ணுல
கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல
புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம்
அவரே போதும்னு தோணுது

என் இயேசு என் காதலே - 2

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்
பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும்
சொல்லால தள்ளும் குழிக்குள்ள - 2

ஓங்கி வரும் மரம்கன்று
வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில்
நிக்காம போவேன் பயமில

என் இயேசு என் காதலே - 2

காதலே காதலே காதலே காதலே


Balipeedamae Balipeedamae, karaigal

பலிபீடமே பலிபீடமே - 2
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே- 2
          - பலிபீடமே பலிபீடமே

1. பாவ நிவிர்த்தி செய்யப்
பரிகார பலியான பரலோக பலிபீடமே - 2
இரத்தம் சிந்தியதால் இலவசமாய்
மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே - 2
          - பலிபீடமே பலிபீடமே

2. மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே - 2
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே- 2
          - பலிபீடமே பலிபீடமே

3. ஈட்டியால் விலாவில்
எனக்காகக் குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே - 2
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி
நான் நன்றி சொல்வேன் - 2
          - பலிபீடமே பலிபீடமே

4. எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே - 2
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே - 2
          - பலிபீடமே பலிபீடமே


Song Description: Tamil Christian Song Lyrics, 

Azhaganavar, Ovvoru Naatkalilum.

அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்

இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்

அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்

இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்

தாலாட்டுவார்
என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால்
அரவணைப்பார்

தாலாட்டுவார்
என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால்
அரவணைப்பார்
அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்

இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்

ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே

ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே

நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்

என்னை நேசிக்கும்
நேசத்தின் தேவனை
என்னை நேசித்த
நேசத்தின் ஆழமதை

என்னை நேசிக்கும்
நேசத்தின் தேவனை
என்னை நேசித்த
நேசத்தின் ஆழமதை

பெரும் கிருபையை
நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ

பெரும் கிருபையை
நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ

இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு

பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நேசித்தோர் வெறுக்கையில்

பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நேசித்தோர் வெறுக்கையில்

நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை

வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக

நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்

Alagaanavar Yesu Alagaanavar

அழகானவர் இயேசு அழகானவர் - 2
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Yennakaga Allava neer yupham seitheer

எனக்காக அல்லவா
நீர் யுத்தம் செய்தீர்?
என் பாவம் போக்கவா
நீர் சிலுவையில் ஏறினீர்? -2

அழகான கண்ணீர்
நான் சிந்தும் பொழுது
உம் சுத்தக்கையால்
என்னை ஏந்திக்கொண்டீர்
நான் மரண விளிம்பில்
நடக்கும் பொழுது
உம் தோளில் என்னை
தூக்கி சுமந்தீர்

எனக்காக அல்லவா
நீர் யுத்தம் செய்தீர்?
என் பாவம் போக்கவா
நீர் சிலுவையில் ஏறினீர்?

காதல் எங்கே?
இச்சை எங்கே? நட்பு எங்கே?
பெத்த பாசமும் எங்கே?
காதல் எங்கே?
காமம் எங்கே? நட்பு எங்கே?
பெத்த பாசமும் எங்கே?

நான் குனிந்த நாட்களில்
நடந்து நடந்து
நிமிர்ந்து நாட்களில்
சுமந்து சுமந்து
சாய்ந்த நாட்களில்
தோளை பிடித்து 
உயர்த்தின தேவன் நீர் - 2
எனக்காக அல்லவா
நீர் யுத்தம் செய்தீர்?
என் பாவம் போக்கவா
நீர் சிலுவையில் ஏறினீர்? - 2

அழகான கண்ணீர்
நான் சிந்தும் பொழுது
உம் சுத்தக்கையால்
என்னை ஏந்திக்கொண்டீர்
நான் மரண விளிம்பில்
நடக்கும் பொழுது
உம் தோளில் என்னை
தூக்கி சுமந்தீர்

பேயின் தந்திரம் அடக்கின
அற்புத தேவன் 
வாழ் நாளெல்லாம்
வாழ வைக்கும் அதிசய தேவன்

En Irudhayam thoiyum pothu

என் இருதயம் தொய்யும் போது
பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான
கன்மலையில் என்னைக்
கொண்டுபோய் விடும்

என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும் - 4

நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
பெலத்த துருகமுமாயிருந்தீர்
பெலத்த துருகமுமாயிருந்தீர்

என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே

நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே - 2
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே

என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும் - 4

என் இருதயம் தொய்யும் போது
பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்

எனக்கு எட்டாத உயரமான கன்மலையில்
என்னைக் கொண்டுபோய் விடும்




Tanglish


En Irudhayam thoyyum pothu
Boomiyin kadaiyantharathil irunthu
Nan ummai nokki kupiduven
Enaku ettatha uyaramana kanmalaiyin
Ennai kondu poi vidum

En kukural ketidum
en vinnapathai gavaniyum - 4

Neer enaku neer enaku yesuve
Neer enaku neer enaku
Neer enaku adaikalamum 
En sathuruvukku ethire
Belatha thurugamum ayiruntheer

En kukural ketidum
en vinnapathai gavaniyum - 4

En kanmalai neere en kottaiyum neere
En thurugamum neere 
En devanum neere
Nan nambiyirukum kedagamum
En ratchagarum neere
Ratchaniya kombum aanavare 
Uyarntha adaikalam aanavare

En kukural ketidum
en vinnapathai gavaniyum - 4