Friday, January 25, 2019

UMMAII ARATHIPPEN LYRICS

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் (2)

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வாரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்

தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்து
என்னை மீண்டும் நடக்கவைத்தீரே

பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே

SINGASANAM VEETRIRUKKUM THOOYATHI THOOYAVARE LYRICS

சிங்காசனம் வீற்றிருக்கும் தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே x 2
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் 
தூயவர் உமக்கே செலுத்துகிறோம் (எங்கள்) x 2

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி
வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை

ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர்

ENNAI ALAITHAVAR NEER ALLAVA LYRICS

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா

என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

NAAN SIRUMAIYUM ELIMAIYUMMANAVAN LYRICS

நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே

நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே

நன்றி நன்றி நன்றி ராஜா

நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர்

குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே

பெலவீனமான என்னை
உந்தன் பெலத்தால் இடைகட்டினீர்
வழியை செவ்வைபடுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர்

UMMAI NESIKKIREN YEN YESUVE LYRICS

உம்மை நேசிக்கிறேன் 
என் இயேசுவே  [x 2 - 2 Lines]
என் ஆவி, ஆத்மா, சரீரம், 
உம் பாதத்தில நான் படைக்கிறேன் 
என்னை உந்தன் கையில் ஏற்று
மாற்றிடும் உம் பிள்ளையாய்  [x 2 - 4 Lines ]

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே  [x 2 - 2 Lines]

சரணங்கள்

1. என் வாழ்வில் என்ன நடந்தாலும் 
நான் உம்மை நேசிக்கிறேன்
மரணத்தின் பாதை சென்றாலும் 
நான் உம்மை நேசிக்கிறேன்
என்னை, கொன்று போட்டாலும்
நான் உம்மை, நேசிக்கிறேன்
நன்மை செய்யா விட்டாலும்
நான் உம்மை, நேசிக்கிறேன் 

உம்மை நேசிக்கிறேன் 
என் இயேசுவே [x 2]

2. எனக்காய் காயம் அடைந்தவரே 
நான் உம்மை நேசிக்கிறேன்
என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே 
உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மீண்டும் வருபவரே 
உம்மை நேசிக்கிறேன்
என்னை உம்மோடு சேர்த்துக் கொள்வீர் 
உம்மை நேசிக்கிறேன்

உம்மை நேசிக்கின்றேன் 
என் இயேசுவே [x 2]

KARTHAVE DEVARGALIL UMAKKOPPANAVAR LYRICS


கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

AATHUMAME EN MUZHU ULLAME LYRICS

ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

சரணங்கள்
1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே

2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் , மேலான - ஆத்துமமே

4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே - ஆத்துமமே

UNNIL NARKIRIYAI THODAGINAVAR LYRICS


உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
உன்னை இறுதிவரை நடத்திடுவார்
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-3
1. சோதனை, வேதனைகள், வரட்டுமே!
சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
2. சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!
சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
3. சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!
யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

SUMMER VANTHALE KALAKAL THANE LYRICS


Summer வந்தாலே கலக்கல் தானே
CGC -க்கு போனாலே Colourful தானே
பாடல் பாடி மகிழ
வசனம் கதை கேட்க } – 2
கற்றுகொள்ள போகலாம்
சீக்கிரம் வாங்க } – 2
இயேசுவுக்காய் வாழ
இயேசுவைப் போல மாற
இயேசப்பாவின் நோக்கத்தை
நிறைவேற்ற வாங்க
ரம்… பம்… பம்… பம்… பம்
-ப-ப-ப-ப….பம்…பம்…
CGC ஆரம்பம்
டம்…டம்…டம்…டம்…
ஊரெல்லாம் கொண்டாட்டம்

THULLUTHAYYA UM NAAMAM SOLLA LYRICS


துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா –உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

UNTHAN AAVI ENTHAN LYRICS


உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1. உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும்
2. பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்

ULAGIN OLIYE YESUVE LYRICS

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்
இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்
1. பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு
2. பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு
3. தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு

ULAGILE URAVILE ENGUME NAAN LYRICS


உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல
தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல
தந்தை போல அதை காட்டிலும் மேல 
1. காலம் காலமாய் மனிதன் மாறுறான்
எந்த காலமானாலும் நீங்க மாறல-2
முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை
முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது
உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2 
2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே
பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2
ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2
ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2

APPAVUM NEERE ENGA AMMAVUM NEERE LURICS

அப்பாவும் நீரே எங்க 
அம்மாவும் நீரே
பேர் சொல்லி அழைத்தீரே 
என்னை அள்ளி அணைத்தீரே
இந்த உலகில் உம்மைத்தவிர
எனக்கு எவரும் இல்லையே – இந்த
உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே
1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
தந்தை முகம் பார்த்ததில்லை
சொந்தமென்றும் பந்தம் என்றும்
சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
நீர் எனக்குத் தந்தையானீர்
நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்
2. தீங்கு வரும் நாளினிலே
செட்டைகளின் மறைவினிலே
பத்திரமாய் பாதுகாக்கும்
பாசமுள்ள ஆண்டவரே
நீர் செய்த நன்மைகளை
நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்
3. இல்லை என்று சொல்லி
அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
பிள்ளைகள் நாம அழுதா
அப்பா மனம் பொறுப்பதில்லே
நீர் மட்டும் இல்லையென்றால்
நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்

DEVAREER NEER SAGALAMUM SEIYA LYRICS


தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்

தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே

தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார்

THAIPOLA THETRI THANDHAI POLA LYRICS

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

DEVA KUMAARA DEVA KUMAARA LYRICS

தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்

உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான்
இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே

தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்

KALANGATHE ENN MAGANE LYRICS

கலங்காதே என் மகனே(ளே)
திகையாதே என் மகனே(ளே)
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்-2

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2

கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்

உனக்காய் உலகில் வந்தேன்
உனக்காய் ஜீவன் தந்தேன்
எந்தன் இரத்தம் சிந்தி
உன்னை வாங்கிக்கொண்டேன்-2

என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)
எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2

கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்

உனக்காய் யாவையும் செய்வேன்
உன்னோடென்றும் வருவேன்
எந்தன் தோளில் ஏந்தி
உன்னை சுமந்து செல்வேன்-2

என் சிறகுகளால் உன்னை மூடிக்கொண்டேன்
என் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டேன்-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2

கலங்காதே என் மகனே(ளே)
திகையாதே என் மகனே(ளே)
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்-2