Saturday, December 19, 2015

Karthar en nambikkai thurugamaanavar



கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா 4

வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

En meetpar uyirodu kaiyile

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்

Sonnapadi uyirthelunthar

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும்
என்றும் அழியாதது மாறாதது

கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Maritha yaesu uyirthuvittar

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார்
அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு

அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம்

கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

Maraname un koor enge

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணத்தை ஜெயித்த
மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்கு தந்து விட்டார்

சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்

பயமில்லை மரண பயமில்லை
ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார்.

அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்குள் வாழ்வோர்
கிறிஸ்துவுக்குள் மரித்தோர்
எதிர்கொண்டு சென்றிடுவோம்

பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்

Geetam geetam jeya jeya


கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் -தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு

அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர் - நம்
மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்

Karthar uyirthelundar innum


கர்த்தர் உயிர்த்தெழுந்தார் - இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே

மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்

பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்.

Allelujah paaduvom arparithu pottruvom


ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்

உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடு எழுந்த இயேசுவை
என்றென்றும் ஆராதிப்போம்

Raajathi Raajavai Kondaduvoam

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் -நம்

வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு -அந்த

கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லை
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழ்வார்

வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே
அந்த சாத்தான் மேலா அதிகாரம் தந்தார்
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி
முறியடிப்பேன் -நம்
கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் -அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்

முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்துக் கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலை நிறுத்திமகிழ்வார்

Paralogame Ummai Thuthipadhal

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தவே அங்கே வாழ்கியீர்
உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் -2

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒனறாக கூடித் துதிக்கிறோம்

உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2

உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே -2

துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2

Sarva vallavar en sonthamanor


சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்

ஆ...இது அதிசயம் தானே
ஓ......இது உன்மை தானே

கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் ராஜா

சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ள்த்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

பரலோகத்தில் எனது பெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவ்ன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்

உயிரொடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அல்லேலூயா ஓசன்னா -4

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்

UMMAI POTRI PADUVOM LYRICS

உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே

பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே

செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே

எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ

Yesappa unga namathil

இயேசப்பா உங்க நாமத்தில்
அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது

உந்தன் வல்லமைகள் குறைந்து
போகவில்லை-உந்தன்
உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை

துன்பங்கள் தொல்லைகள்
வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவ மகிமையைக் கண்டிடுவோம்

மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்

சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்

Neerae en thanjam

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே என் ராஜா

நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுவதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனதெல்ல வற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே

இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே

Ummai pol nal nesarundo

உம்மைப் போல் நல் நேசருண்டோ
உன்னதர் நீர் அல்லவோ
கர்த்தரின் அன்பை நினைக்கும்போது
எந்தன் கவலைகள் மாறிடுதே

கல்வாரி சிலுவை நோக்கிடும் போது
கல்மனம் கலங்கிடுதே
பரிசுத்தர் போற்றும் பரம ராஜன்
என் பாவங்கள் நீக்கினாரே

நான் ஒரு கழுதை நீரோ என் தேவன்
நான் உம தடிமையல்லோ
வழி நடத்தும் என் அருமை நாதரே
வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன்

நேசரின் அன்பை அறிந்திடும் போது
நெஞ்சம் மகிழ்ந்திடுதே
இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை
என்றென்றும் துதித்திடுவேன்

என் இயேசு ராஜன் வருகையின் போது
எக்காளம் தொனித்திடுதே
நீதியில் நடத்தும் நல்ல மேய்ப்பனை
நிச்சயம் சேர்ந்திடுவேன்

Maaratha nal visuvasam

மாறாத நல் விசுவாசம் - பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி வழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும்

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல்படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும்

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார்

Deva ummai naan nambuven


தேவா உம்மை நான் நம்புவேன்
அதிகாலை தேடினேன்
தேவனே இவ்வேளையில்
நீங்கா உமது கிருபை பொழியும்

காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்

காலை விழிப்பினால் உந்தன்
நேச மொழியதை - கேட்டுமே
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே

கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே
படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே

தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
உந்தன் பாதம் அமர்ந்துமே
தியானம் செய்குவேன்

மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே

Aarathikka ummai aarathikka


ஆராதிக்க உம்மை ஆராதிக்க
இன்று ஆராதிக்க கூடியுள்ளோம்
ஊற்றுமய்யா நிரப்புமய்யா
உன்னத பரலோக அபிஷேகத்தால்

உன்னதரே உம்மை ஆராதிப்போம்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
வல்லவரே உம்மை ஆராதிப்போம்
வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
புகலிடமே உம்மை ஆராதிப்போம்
புகழ்ச்சியே நீரே உம்மை ஆராதிப்போம்

அற்புதரே உம்மை ஆராதிப்போம்
அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
பரிகாரியே உம்மை ஆராதிப்போம்

ARATHANAI AARATHANAI THUTHI LYRICS

ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே

தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை
வல்ல பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை

ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனை
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை

அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
அனுகூலமானவரே உமக்கு ஆராதனை
கன்மலையே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை

Mannuyire kaakath thannuyir vidukka

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் வந்தார்

இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார் வந்தார்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

நித்திய பிதாவின் நேய குமாரள்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்

தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்

Yudha Rajasingam


யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன்
தெறிபட்டன் நொடியில் முறிபட்டன

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

ENTHAN YESU ENAKKU NALLAVAR LYRICS

எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்

YEHOVAH SHALOM HALLELUJAH LYRICS

யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
யேகோவாயீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)

சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

JEEVAN BELAN SUGAM PAARIL LYRICS

ஜீவன் பெலன் சுகம் பாரில்
நலன் யாவும் வாழ்வில்
ஒளி நீரே வழியும் இனி நீரே

தேடினேன் ஓடினேன்
இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
நாடினேன் வந்திட்டேன்
பாதம் பணிந்தும்மைப் போற்றவே

தந்தை போல் மன்னித்து
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
சொந்தமாக்கி என்னை மீட்டீரே

மனம் போல் நடந்தேன்
துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
என்னையா தேடினீர்
பாவியான என்னை போஷித்தார்

Yesu raja um namathai

இயேசு ராஜா உம் நாமத்தை
சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
உந்தன் அன்பை என் உள்ளத்தில்
எண்ணி எண்ணி துதிபாடுவேன்

ஆமென் ஆமென் அல்லேலுயா

பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
பரமனே உம் அன்பு மிகப்பெரியது
பாரினில் நிகரேதும் இல்லாதது

வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
வார்த்தையினாலே என்னைத் தேற்றி
வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்

உலகமே என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
நீதியின் தேவன் என்னோடு உண்டு
நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்

Belan ondrum illai deva

பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும்

மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் பெலப்படுத்தும்

சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
சோதனை வெல்ல உதவும்
மாய உலகத்தை ஜெயிக்க
என்னையும் பெலப்படுத்தும்

சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
வழுவாமல் காத்து நடத்தும்
கழுகு போல் செட்டைகள் அடித்து
உயரே எழும்ப செய்யும்

Anuppum deva um aaviyinai

அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே இப்போ அனுப்பும்

சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

பெந்தேகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே

மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட

சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே

இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட