Monday, December 21, 2015

yesu umathainthu kaayam


இயேசு உமதைந்து காயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக

லோகம் தன் சந்தோஷமான
நகர வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான் இயேசுவே
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்
அப்போ மோசங்கள்கலையும்

எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்க நுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்

நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும் இயேசுவே
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக

இயேசு உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக் கொள் வீராக.

En manathu thudikkuthu


என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்

ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்

என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்

என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக
வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்
குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்

ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக
நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்

MAGIMAI ADAIYUM YESU RAJANE LYRICS


மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக

உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா

கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக