Wednesday, May 23, 2018

ATHIKAALAIYIL UM THIRUMUKAM THEDI LYRICS

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி 
அர்ப்பணித்தேன் என்னையே 
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் 
அப்பனே உமக்குத் தந்தேன் 
    ஆராதனை ஆராதனை 
   அன்பர் இயேசு ராஜனுக்கே 
   ஆவியான் தேவனுக்கே 
  
1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் 
  உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் 
  என் வாயின் வார்த்தை எல்லாம் 
  பிறர் காயம் ஆற்ற வேண்டும் 
  
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் 
  என் இதயத் துடிப்பாக மாற்றும் 
  என் ஜீவ நாட்கள் எல்லாம் 
  ஜெப வீரன் என்று எழுதும் 
  
3. சுவிசேஷ பாரம் ஒன்றே 
  என் சுமையாக மாற வேண்டும் 
  என் நேச எல்லையெங்கும் 
  உம் நாமம் சொல்ல வேண்டும் 
  
4. உமக்குகந்த தூய பலியாய் 
  இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் 
  ஆட்கொண்டு என்னை நடத்தும் 

  அபிஷேகத்தாலே நிரப்பும்

ATHI KAALAI STHOTHIRA PALI LYRICS

அதிகாலை ஸ்தோத்திர பலி 
அப்பா அப்பா உங்களுக்குத் தான் 
ஆராதனை ஸ்தோத்திர பலி 
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2 

1. எபிநேசர் எபிநேசர் 
இதுவரை உதவி செய்தீர் 
இதுவரை உதவி செய்தீர் 
எபிநேசர் எபிநேசர் 

2. பரிசுத்தர் பரிசுத்தர் 
பரலோக ராஜாவே 
பரலோக ராஜாவே 
பரிசுத்தர் பரிசுத்தர் 

3. எல்ஷடாய் எல்ஷடாய் 
எல்லாம் வல்லவரே 
எல்லாம் வல்லவரே 
எல்ஷடாய் எல்ஷடாய் 

4. எல்ரோயி எல்ரோயி 
என்னை காண்பவரே 
என்னை காண்பவரே 
எல்ரோயி எல்ரோயி 

5. யேகோவா யீரே 
எல்லாம் பார்த்துக் கொள்வீர் 
எல்லாம் பார்த்துக் கொள்வீர் 
யேகோவா யீரே 

6. அதிசய தெய்வமே 
ஆலோசனை கர்த்தரே 
ஆலோசனை கர்த்தரே 
அதிசய தெய்வமே 

7. யேகோவா ஷம்மா 
எங்களோடு இருப்பவரே 
எங்களோடு இருப்பவரே 
யேகோவா ஷம்மா 

8. யேகோவா ஷாலோம் 
சாமாதானம் தருகிறீர் 
சாமாதானம் தருகிறீர் 
யேகோவா ஷாலோம் 

9. யேகோவா நிசியே 
எந்நாளும் வெற்றி தருவீர் 
எந்நாளும் வெற்றி தருவீர் 
யேகோவா நிசியே 

10. யேகோவா ரஃப்பா 
சுகம் தரும் தெய்வம் 
சுகம் தரும் தெய்வம் 
யேகோவா ரஃப்பா

ADHIKAALAI NERAM AANDAVAR SAMUGAM LYRICS

1.   அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்
2.   வடதிசை வாழும் என் குடும்பம்
உடன் என் நினைவில் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார்
3.   இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்
4.    தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

ADHIKAALAI NERAM APPA UM PAADHAM LYRICS

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
 
1.   கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
 
2.   பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
 
3.   நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
 
4.   நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
 
5.   மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
 
6.   விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

ASAINTHITAEN NAAN ASAINTHITAEN LYRICS


அசைந்திடேன் நான் அசைந்திடேன் 
நேசரின் அன்பினில் அசைந்திடேன்
விலகிடேன் நான் விலகிடேன் 
விசுவாச ஓட்டத்தில் விலகிடேன்
கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்
காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன்
1. ஒடுங்கிக் கிடந்த நான்
ஒருபோதும் விழவில்லை
அலைந்து திரிந்த நான்
குறைந்து போகவில்லை
2. கண்ணீரை காண்கின்ற தேவன் - என்
கண்ணீரைக் கணக்கில் வைத்தார்
சோர்ந்து போன என்னை - தம்
கரத்தினால் அணைத்துக் கொண்டார்.
3. என்னைக் கவர்ந்த நேசம் - உம்
தழலாய் தோன்றிடுதே
எத்தனைச் சூழ்ச்சிகளும் - உம்
அன்பை அணைக்காதே
4. ஜீவ கிரீடம் தருவீர் - நீர்
ஜீவ வெளிச்சம் ஆவீர்
நீதீயின் சால்வை தருவீர் - என்னை
நேசக் கொடியால் காப்பீர்

AGILAMENGUM SELLUVOM LYRICS


அகிலமெங்கும் செல்லுவோம்
1. அகிலமெங்கும் செல்ல வா
    ஆண்டவர் புகழை சொல்ல வா
    மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
    கீழ்படிந்து எழுந்து வா - 2
 
ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா
2. தேவை நிறைந்த ஓர் உலகம்
    தேடி செல்ல தருணம் வா
    இயேசுவே உயிர் என முழங்கவா
    சத்திய வழியை காட்ட வா - 2
3. நோக்கமின்றி அலைந்திடும்
    அடிமை வாழ்வு நடத்திடும்
    இளைஞர் விலங்கை உடைக்க வா
    சிலுவை மேன்மையை உணர்த்த வா - 2

AKKINI NERUPPAI IRANGI VAARUM LYRICS

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)
 
1.   முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே (2)
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2)
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
 
2.   எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2)
 
3.   ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2)
 
4.   அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)
அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2)
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2)
 
5.   இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2)
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2)
எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)

ASATHIKOLLATHIRUNGAL JAKIRATHAIYAYIRUNGAL LYRICS

அசதிக்கொள்ளாதிருங்கள் 
ஜாக்கிறரதையாயிருங்கள்     
ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள்  
- (அசதிக்கொள்ளாதிருங்கள்...)
மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்   
- (அசதிக்கொள்ளாதிருங்கள்...)
கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை 
விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்  
 - (அசதிக்கொள்ளாதிருங்கள்...)
மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்   
- (அசதிக்கொள்ளாதிருங்கள்...)

KAL MITHIKUM DESAMELLAM LYRICS


கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்

KALVARI ANBAI ENNIDUM VELAI LYRICS


கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

KALVARI NAYAGANE KANGALIL LYRICS


கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

KALVARI SNEHAM KARANTHIDUM LYRICS


கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

KALVARIYE KALVARIYE KAL MANAM LYRICS


கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்
1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே
3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே
4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே
7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

KANDEN EN KAN KULIRA LYRICS


கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்
7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்

ENKUTHE ENNAKANTHAN THUYAR LYRICS


ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர்கண்டு – ஏங்குதே
1. மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே
2. யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே
3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே

ENATHU THALAIVAN YESU RAJAN LYRICS


எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
2. நீதி தேவன் வெற்ற வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து கவலை மறந்து
நிம்மதி அடைவேன்
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே

ENDHAN AATHTHUMAAVE KARTHARAI LYRICS


எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி 
அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்
நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்
நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

ENGAL JEBANGAL THOOBAM POLA LYRICS


எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே


1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்
எழவேண்டும்
உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)


2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய
வேண்டும்
பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்பட
வேண்டும்


3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே
வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில்
விழவேண்டும்


4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்
போக வேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும்


5. பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து பெருமழை பெய்ய
வேண்டும்

ENGALUKULE VASAM SEIYUM AAVIYANAVARE LYRICS


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 
1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

ENGE ODUVEN ENGE ODUVEN LYRICS


எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்
1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்
2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்
ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

ENGE SUMANTHU POGIREER LYRICS


எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா என் ஏசு நாதா – எங்கே
2. தோளில் பாரம் அழுந்த, தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, – எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே
5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே

VAANATHAIYUM BOOMIYAYUM VAARTHAIYINAAL LYRICS

வல்லமையின் தேவனே
வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
எரிகோ கோட்டையை உடைத்தவரே
குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
உம் வல்லமையை நினைத்தே
வியக்கிறேன் தெய்வமே
வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
வாக்குமாறா தெய்வமே இயேசுவே 
மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
பாவி மனுஷன விடுதலையாக்கி
மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி 
பாதாளம் கூட தெறந்திருக்குது
உமக்கு முன்னால பயந்திருக்குது
வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது 
உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
சமுத்திரங்கூட பயந்து ஓடுது
தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது
உமக்கு முன்னாடி பேச முடியுமா
எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
உமது வழிகள அறிய முடியுமா
உமது யோசன புரிய முடியுமா

UYARNTHA ADAIKALAME DEVAN LYRICS


உயர்ந்த அடைக்கலமே
தேவன் உயர்ந்த அடைக்கலமே
ஆபத்துக் காலத்திலே
தேவன் அரனான கோட்டயாமே
பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்
அலைகள் கொந்தளித்தாலும் (2)
பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்
பயப்படவே மாட்டேன்
நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த
ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்து
பூமியே உருகி போனாலும் (2)
யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்
எதற்கும் துணிந்திடலாம்
நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த
பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்
செய்கைகளை வந்து பாருங்கள் (2)
வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்
இரதங்களை சுட்டெறிக்கிறார்
இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த

UYIRTHELUNTHARE ALLELUIA LYRICS


உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

UYIRTHEZHUNDHAARAE ALLAELOOYAA LYRICS

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்
4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம் – உயிர்
6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே – உயிர்