எல்லாம் தருகின்றேன் தந்தாய்
என்னையும் தருகின்றேன்
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உமக்கு காணிக்கை
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன்
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன்
பிறரின் சுமையை விரும்பி சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய்
No comments:
Post a Comment