Saturday, May 26, 2018

NEEGATHIRUM EN NESA KARTHARE LYRICS


1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
நீர் மெயச்சகாயரே நீங்காதிரும்
2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறிப் போயினும்
மாறாத கர்த்தரே நீங்காதிரும்
3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்
நீர் என் துணை என் பாதை காட்டியும்
என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்
4. நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்
என் கிலேசம் மாறும் உம் பிரசன்னத்தால்
சாவே எங்கே உன் கூரும் ஜெயமும் ?
என்றாரவாரிப்பேன் நீங்காதிரும்
5. நான் சாகும் அந்தகார நேரமே
நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே
பேரின்ப ஜோதி வீசச் செய்திடும்
வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும்

PAAVA MANNIPPIN NICHAYATHAI LYRICS


பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை

PATHAM ONDRE VENDUM LYRICS


பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்
2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்
3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்
5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்
6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்

OPPATRA EN SELVAME LYRICS


ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்


1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்


2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா


3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்

NIRMOOLAMAAGAATHIRUPPATHU UNDHAN MAA KIRUBAI LYRICS

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
கிருபை கிருபை
மாறாத கிருபை
1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2
2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2
3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

NEE YAARAGA INTHALUM PARAVAILLAI LYRICS


நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2
1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்
2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை