Tuesday, November 12, 2019

NILAYILLA ULAGU NIJAMILLA URAVU



நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு 
நிலையானதொன்றும் இங்கில்லை 
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் 
நீ மட்டும் போதும் எப்போதும் 
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும் 

ஆசையில் பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து 
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை 
வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால் 
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் 
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும் 

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து 
பொழுதிங்கு போகுது கழிந்து 
உண்மைதனை உணர்ந்து உறுதியாக எழுந்தால் 
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு 

நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும் 

No comments: