Tuesday, January 29, 2019

MATHAVE THUNAI NEERAE LYRICS

மாதாவே ! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.
வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.
ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்

EN AANMA ENNALUME LYRICS

என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது -2
ஏழைகளை எளியவரை உயர்த்தினார் -பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் -2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் -2
அடிமைகளை அன்புடனே நோக்கினார் -அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் -2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் -2

NAALAM NAALAM PUNITHA NAALAM LYRICS

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2)
அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம்
தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம்
தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்

AROKIYA THAYE AATHARAM NEEYE LYRICS

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே –2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே
தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே..!
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே..! — 2
வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே –ஆரோக்கியத் தாயே
உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே..! –2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம் –ஆரோக்கியத் தாயே

THAYAPARA RANI THATCHANAM LYRICS

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
தலைபணி ஜெயராணி –2
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
விமரிசை புரிராணி –2
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்
குதுகலி மகாராணி –2
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
ஆந்திரம் குடகம் அகில மராட்டம்
ஆண்டிடும் மகாராணி — 2

ANNAI MAMARI ENGAL ANBIN LYRICS

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே எம்மை
அரவணைத்துக் காப்பாய் நீயே-2
அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2
– நன்றிப் பூக்கள்

AROKIA MATHAVE UMATHU PUGAL LYRICS

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் (2)
அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே (2)
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே (2)
தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)
வானுலகும் இந்த வையகமும் -அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே (2)
முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே (2)
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே (2)
பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே (2) -இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2)
சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே (2)
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே (2)
கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே (2) -நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே (2)

GNANAM NIRAI KANNIGAIYE LYRICS

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்
பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்
வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

ANNAI MARIYAAM MATHAVUKKU LYRICS

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்
நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்
அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2
ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள் -அன்னை மரியாம்
அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2
அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள் -அன்னை மரியாம்
துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ
தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள் -அன்னை மரியாம்

VANTHOM UN MAINTHAR KOODI LYRICS

வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ
மாசில்லாத் தாயே
சந்தோஷ மாகப் பாடி – உன்
தாள் பணியவே !
பூலோகந் தோன்று முன்னே – ஓ
பூரணத் தாயே !
மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
வீற்றிருந்தாயே !
தூயோர்களாம் எல்லோரும் – நீ
தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்
முள் மகிழ்ந்தாரே !
நாவுள்ள பேரெல் லோரும் – உன்
நாமம் போற்றுவார்
பாவுள்ள பேர்களோ உன் – மேற்
பாட்டிசைப்பரே!

SAGAYA THAYIN SITHIRAM NOKKU LYRICS

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு
குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு – 2
தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ – 2
அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் – 2
இம்மாநிலத்தில் இவள் போல் – 2
இரங்கும் தாயும் உளரோ – 2

IDHAYAM MAGIZHUDHAMMA THUYAR LYRICS

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா
தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா…!
வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா…!

AMMA ANBIN SIGARAM NEE LYRICS

அம்மா அன்பின் சிகரம் நீ
அருளைப் பொழியும் முகிலும் நீ
அம்மா அழகின் முழுமை நீ
அம்மா என்றதும் கனிபவள் நீ
அம்மா அன்பின் சிகரம் நீ
மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்
மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ -2
இயேசுவை அணைத்த கரங்களினால்
சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே
புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்
பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ -2
மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்
மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ

ANNAIYE THAYE AROKIA MATHAVE LYRICS

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா – 2
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா
தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி – 2
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி – 2
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா – 2
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா – 2
ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே – 2 – அம்மா
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி – 2
வேளைமாநகர் வாழ் மரியே வாழி – 2

AZHAKIN MULUMAIYAE THAYAE LYRICS

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே
இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
அருளே நிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின் செல்வோம் -2
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

MAASILA KANNIYE MATHAVE UNNAI LYRICS

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2
மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் (2) -வாழ்க
தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே (2) -வாழ்க
அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே வாழ்க! வாழ்க! வாழ்க மரியே!…(2)

ANNAIYAI ARULMUDHALAI NAL AASAANAI LYRICS

அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா – 2
வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே – 2
அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் – 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே – 2
தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே – 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே – 2

VANNA VANNA LEELI MALAR LYRICS

அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா – 2
வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே – 2
அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் – 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே – 2
தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே – 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே – 2

ALAIYOLIR ARUNANAI ANNINTHIDUMAA LYRICS

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

PADHAI KAATUVAR UN VAZHIGALAI LYRICS

பாதை காட்டுவார் 
உன் வழிகளை நேரக்கிடுவார்
மேன்மை படுத்துவார் உன்னை
செழிப்பாய் மாற்றுவார்
கலக்கம் வேண்டாம்
கவலை வேண்டாம்
அவர் கிருபையால் உன்னை நடத்திடுவார்

தயக்கம் வேண்டாம்
தடுமாற்றம் வேண்டாம்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவார்

நீர் போதுமே
நீர் போதுமே இயேசுவே

UM KIRUBAI THAAN ENNAI KATHADHU LYRICS

உம் கிருபை தான் என்னைக் கண்டது
உம் கிருபை தான் என்னைக் காத்தது
உம் கிருபை தான் என்னை நடத்தியது
கிருபையே... 

கிருபை கிருபை [7 times] கிருபையே....

கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
கவலையால் நான் கலங்கினாலும்
துன்பங்கள் என்னை துவட்டினாலும்
காத்தது உங்க கிருபையே
மேலான கிருபை, மாறாத கிருபை,
விலகாத கிருபை, கிருபையே

வருமையால் நான் வாடினாலும்
வியாதியால் நான் வருந்தினாலும்
மரணம் என்னை நெறுக்கினாலும்
காத்தது உம் கிருபையே
மேலான கிருபை, மாறாத கிருபை,
விலகாத கிருபை, கிருபையே

சாத்தான் என்னை துரத்தினாலும்
பாவம் என்னை நெருங்கினாலும்
உலகம் என்னை மயக்கினாலும்
மீட்டது உங்க கிருபையே
மேலான கிருபை, மாறாத கிருபை,
விலகாத கிருபை, கிருபையே

YESU PIRANDARE ENDHAN ULLATHILE LYRICS

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே

ஹாலேலூயா ஹாலேலூயா

தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே

கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே

OVVARU NALILUM OVVARU NIMIDAMUM LYRICS

ஒவ்வொரு நாளிளும்
ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே

உம் அன்புகாகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஒவ்வொரு நாளிளும்
ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே
உம் அன்புகாகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

கவலையும் கண்ணீரும்
நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும்
நீர் மாற்றினீர்
கவலையும் கண்ணீரும்
நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும்
நீர் மாற்றினீர்

உம்மைபோல யாருமில்லை
உம்மைபோல யாருமில்லை

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

எனக்காவே
ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை
சிலுவையில் நீர் சுமந்தீரே
எனக்காவே
ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை
சிலுவையில் நீர் சுமந்தீரே

உம்மைபோல யாருமில்லை
உம்மைபோல யாருமில்லை

ஒவ்வொரு நாளிளும்
ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே
உம் அன்புகாகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

AARADHANAI SEIGIROME UMMAI LYRICS

ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

[நீர்] நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்

உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

உன்னதமானவரே உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
எங்களைக் காப்பவரே

என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி
தருபவரே என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

INNUM UMMIL INNUM NERUNGA LYRICS

இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே
நேச கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே பாவக் கறைகள் போக்குமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும்
ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும்
(ஆணி பாய்ந்த கரங்களை நான் இன்னும் ஒருவிசை அணைக்கணும்)

கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன்
பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே
கழுகைப் போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும்
ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும்
(ஆணி பாய்ந்த கரங்களை நான் இன்னும் ஒருவிசை அணைக்கணும்)


வனாந்திர பாதை போன்ற வாழ்க்கையை நீர் பாருமே
என்னை வெறுத்து உலகம் மறந்து மீண்டும் ஒருவிசை கேட்கிறேன்
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே
கழுகைப் போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும்
ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும்
(ஆணி பாய்ந்த கரங்களை நான் இன்னும் ஒருவிசை அணைக்கணும்)