Friday, May 25, 2018

NIRAIVANA AAVIYANAVARE LYRICS


நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே
1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
2. பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

PATHAI THERIYATHA AATAI POLA LYRICS


பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

NINAIVU KOORUM DEIVAMAE NANDRI LYRICS


நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)


1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா


2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா


3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா


4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்

NEERILLAA AARAADHANAI AARAADHANAI ALLA LYRICS


நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல
ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும் 
வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்

NAAN NIRPATHUM NIRMULAMAGATHADHUM LYRICS


நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2 
1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2
2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

MALAIMEL YERUVOM MARANGALAI LYRICS


மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்


1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா


2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்


3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்;


4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே


5. சாப்பிட்டும் திருப்தியில்லை
குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம்
குளிரோ போகவில்லை

KANMALAI MEETHU EN KAALGAL LYRICS


கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதகளில் உட்கார செய்தீர்
உலையான செட்டில் உள்ளண்ட என்னையும்
தூகிநிர் கலுவிநிர் காது வருகிறீர்
1. பாவங்களை மன்னிதிர் சபைகளை நிக்குநிர்
சத்துருவின் கைலின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம புகழை நான் பாடுவன்
எசுயா எசுயா உம புகழ் பாடுவன் – கன்மலை
2. எல்லை இல்ல அந்தம் எந்தன் வாழ்வில்
சொல் ஒன்ன பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதிய
ஜீவன் உள்ள நல எல்லாம் உம்மை பாடுவன்
எசுயா எசுயா உம புகழ் பாடுவன் – கன்மலை

IRAIVA UNTHAN PAATHAM VARUGINDREN LYRICS


இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்
1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)
விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்
2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்
இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)
பலியை அல்ல இரக்கத்தையே என்னில்
விரும்புகின்ற இறைமகனே
உன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா

ENTHAN AATHUMAVE KARTHARAIYE LYRICS

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு 
புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன் 
நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன் 
மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

EN DEVAN EN VELICHAM LYRICS

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்

DEVANE NAAN UMATHANDAIYIL LYRICS


தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

DEVA KUMARAN YESU LYRICS


தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்
1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ
2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ
3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ

ANBIN DEVAN YESU LYRICS


அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2


1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்


2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்


3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு

ANBE THOOYA ANBE LYRICS

அன்பே தூய அன்பே
உந்தன் மறுபெயர் இயேசுவோ
உந்தன் நீளம், உந்தன் அகலம்
உந்தன் ஆழம், உந்தன் உயரம்
அதை அளவிட முடியாதய்யா
அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே
1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
அவர் அன்பென்றும் வெறுக்காதையா
அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே
2. சகலமும் அன்பு சகிக்கும்
சகலமும் அந்த அன்பு தாங்கும்
அந்த அன்பொன்றே மேலானது
அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே