Thursday, January 31, 2019

UMMAI NESIKKA KATRU THAROOM LYRICS

உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க


துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

ISRAVELIN DEVANAGIYA KARTHAVAE LYRICS

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை -2

1.வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன்
நச்சத்திரங்களை பெயர் சொல்லி
அழைத்த தேவன் - (2)

உமக்கு சிலைகள் இல்லையே
உம் கையில் ஆயுதம் இல்லையே

2. பூமியின் தூளை மரக்காலால்
அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால்
அடக்கின தேவன் (2)

3. மண்ணினாலே என்னையும்
உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை
கொடுத்த தேவன் (2)

THALAI SAIKKUM KAL LYRICS


 தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

THAAI POLA THETRI THANDHAI LYRICS

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

MANNA NAMBI MARAM IRUKKU LYRICS

மண்ணை நம்பி மரம் இருக்கு
மழையை நம்மி பயிரிருக்கு
உன்னை நம்பி நானிருக்கேன் ராசாவே
உம்மை தேடி ஓடி வருபவரை ராசாவே - நீர்
ஒரு போதும் தள்ளிடாத நேசரே

1.பறவை வானில் பறக்க தன் சிறகை நம்பி இருக்கு
சிறகில்லாத பறவை அது தரையில் விழுந்து கிடக்கு
அற்பமான பறவை என்று மனிதன் நினைக்கக் கூடும்
அந்த பறவையையும் பாதுகாக்க உந்தன் கண்கள் தேடும்
உம்மை நம்பி வந்தவர்கள் கெட்டுப் போனதில்லை
கெட்டு போக நினைப்பவர்கள் உம்மை நம்புவதில்லை
உம்மை நம்பி நானும் வந்தேன் ராசாவே
உம்மை ஒரு போதும் பறப்பதில்லை ராசாவே
- மண்ணை நம்பி மரம் இருக்கு

2.மனிதரன்பு போதுமென்று மனசுக்குள்ளே நெனச்சேன்
மாயை மாயை என்றறிந்து மனம் பதறி துடிச்சேன்
நாசியில் சுவாசம் உள்ளவனை நம்பாதே என்று சொன்னீர்
நம்பிமோசம் போனதாலே சிந்துகிறேன் கண்ணீர்
இயேசுவே உம்மை நம்பி நானும் வந்தேன்
கெட்டுப் போனதில்லை - வாழ்வில்
உயர உயர சென்ற போதும் உம்மை - விடுவதில்லை
உம்மை நம்பி நானும் வந்தேன் ராசாவே
உம்மை ஒரு போதும் மறப்பதில்லை ராசாவே
- மண்ணை நம்பி மரம் இருக்கு

3.தஞ்சம் இன்றி தவிக்கும் போது தாங்க ஓடி வருவீர்
அஞ்சிடாதே என்று சொல்லி ஆறதலைத் தருவீர்
கெஞ்சி அழும்பக்தரிடம் கொஞ்சிப் பேசி மகிழ்வீர்
மிஞ்சும் பாரமெல்லாம் பஞ்சைப் போல துக்கி எறிவீர்
நம்பிக்கை நங்கூரம் நம்மை இரட்ச்சிக்கின்ற தெய்வம்
நன்மைதனை செய்து என்னை வாழ வைத்த தெய்வம்
உம்மை நம்பி நானும் வந்தேன் ராசாவே
உம்மை ஒரு போதும் மறப்பதில்லை ராசாவே
- மண்ணை நம்பி மரம் இருக்கு

SATHTHIYA VETHAM THANTHA LYRICS

சத்திய வேதம் தந்த 
உத்தமர் இயேசுவுக்கு
ஜதிகள் சொல்லிப் பாடுவேன்
சங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு 
ஸ்வரங்களின் மலர் சூடுவேன் – நான் 
ஸ்வரங்களின் மலர் சூடுவேன்

வேதமானது தேவன் தந்தது
தேவ வார்த்தைகள் நிரைந்தது
அந்த வார்த்தை தான் இயேசுவானது
எந்தன் நாவினில் ஒலிப்பது – பாவி என்னை 
அவர் பக்தனாக துதி பாடிட வைத்தது
பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது
பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி
பரிசுத்தர் சொன்னது – பக்தியோடு இந்த
வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
   ...சத்திய வேதம் தந்த

வேதப் பிரியரை தேவப் புதல்வரை
சேதமடையாது காப்பது – இரவும்
பகலும் இதை தியானம் செய்பவர்க்கு
இனிய வாழ்க்கையைக் கொடுப்பது
இம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது
இம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது
இந்த வேதம் தந்த வேத 
நாயகனை எப்படி பாடுவேன்
ஸப்த ஸ்வரங்கள் இசையோடு
ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
   ...சத்திய வேதம் தந்த

POLLATA KALAM ITU POLLATAKALAM LYRICS

பொல்லாத காலம் இது பொல்லாத காலம்
புவிவாழ்வு மனிதனின் - நிலைஇல்லா வாழ்வென
புரியாத மனிதனோ அறியாமல் வாழகி்றான்
- பொல்லாத காலம்

1.வேஷமாகவே மனிதன் திரிகிறான் - அவன்
விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்
ஆஸ்தியை அவனியில் மலை போல சேர்க்கிறான்
ஆனாலும் யார் அதை வாரிக் கொள்வார் என்றறியான்
உலகம் முழுவதையும் நீ ஆதாய மாக்கினாலும்
உந்தன் ஆத்துமாவை நீ நஷ்டப் படுத்தினாலோ
இலாபம் ஒன்றும் உனக்கில்லையே (3)
- பொல்லாத காலம்

2.மண்ணிலிருந்து தான் வந்தவன் - இதை
மறந்து போகிறான் இந்த மனிதனே
ஆவியோ தன்னைத் தந்த தேவனிடம் செல்லும் - இந்த
உடல் தான் வந்த மண்ணுக்கே திரும்பும்
ஒன்றுக்கும் உதவாதவீண் சாீரத்தை அலங்கரிக்கிறான்
விலை மதிப்பில்லாத ஆத்துமாவை கெடுத்துக் கொண்டு
பாவத்தை தண்ணீர் போல குடிக்கிறான் - தன்
ஆத்துமாவை நரகத்திலே சேர்க்கிறான்
- பொல்லாத காலம்

3.பாவத்தின் சம்பளம் மரணமே - தேவன்
இயேசுவின் கிருபை நித்தியவனே
வா! வா! ஓடிவா! இயேசுவிடம் ஓடிவா
ஆத்மநேசர் இயேசு உன்னை அழைக்கிறார் - உன்
பாவம் போக்கவே உன்னை அழைக்கிறார்
வாழ்கின்ற நாட்களிலே தேவன் இயேசுவை தேடி ஓடிவா
மனிதா உன்னை மீட்க - அவர் சிலுவையில் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார்
- பொல்லாத காலம்

KANNUKKULLE KANNEER VARUVATHUM EANO LYRICS

கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ
நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ
பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ
உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா
எப்படி நான் மறப்பேன் - உன்னை
எப்படிக் கைவிடுவேன்
எப்போதும் உன்னோடு இருக்கின்றேன் நானே
உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே
- கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ


1.தாயின் கருவில் உருவாகுமுன்னே உன்னைக் கண்டேன்
எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன்
என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன்
என் நாளும் உனக்கு நல், ஆலோசனை சொல்லித் தந்தேன்
ஏனிந்த வேதனைகள் வீணான சோதனைகள்
என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள்
ஆனாலும் நான் மன்னித்தேன் - உன்னை நான் நேசித்தேன்
மண்ணென்று நினைவு கூர்ந்தேன்
- கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ


2.ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே
அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே
அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே
ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே
ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள்
உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட - கோடான கோடி நன்மைகள்
எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை
விசுவாசித்தல் காண்பாயே - இன்னமும் அழுவதேன்

- கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ

KALVAARI ANBU MAATRINADHENNAI LYRICS

கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு - நொருக்கினதே என்னை
எனக்காகவே - 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே - 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே - 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே - 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

EN MEETPAR SENTRA PAATHAYIL LYRICS

என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய்  நிற்பாயா

3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

4.பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

5. வாழ்  நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

VARANDA NILAM THANEERUKKAI LYRICS

வறண்ட நிலம் தண்ணீருக்காய்
ஏங்குவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மனிதர் குரல் கேட்டது போதும்
உம் குரல் கேட்கணுமே
உந்தன் மகிமை காண வேண்டுமே

வாரும் உம் பிரசன்னம்
வேண்டும் வேண்டும்
தேற்றிடும் உம் சமுகம்
வேண்டும் வேண்டும்

இந்த உலகத்திலே மனிதர்கள்
கேட்கும் கேள்விகள்
உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்
அது கேட்டிடும் வேளையிலே
என் உள்ளம் நொறுங்கினதே
இரவும் பகலும் என் கண்ணீரே
என் போஜனம்
உம்மை நோக்கிக் காத்திருப்பேன்
உம்மை இன்னமும் துதித்திடுவேன்
உமது மகிமையை இந்த உலகம் அறிந்திட
வேண்டும் வேண்டும்

ENN MAGANE MAGALE INNUM LYRICS

ஏன் மகனே (மகளே) இன்னும்
இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ?
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2
நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய் -கரை
நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லாத வாழ்வு உண்டு
படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் - உன்னைப்
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய
வழுவாமல் காத்திடுவார்
நீதிமானாய் நிறுத்திடுவார்
மகிமையுள்ள அவர் சமூகத்திலே
மகிழ்வோடு நிற்கச் செய்வார்
வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
வழி குரல் கேட்கும்
கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
மனம் இரங்கி பதிலளிப்பார்

UYIRE UYIRE ENTAN UYIRANIRE LYRICS


உயிரே உயிரே எந்தன் உயிரானீரே
தினமும் தினமும் எந்தன் நினைவானீரே
என்னைத் தேடிவந்து தேற்றின தென்றல் 
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது என்னை மறவாதது - 2

சரணங்கள் 

1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது என்றும் செழிப்பானது
                                                                   - உயிரே உயிரே

2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்பிற்கு அணை இல்லையே
அது குறையாதது என்றும் நிறைவானது
                                                                  - உயிரே உயிரே

3. நீரின்றி வாழ்வில்லை
உம் நினைவன்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா
                                                                 - உயிரே உயிரே