Sunday, July 31, 2016

ATHIIKAALAIYIL SURIYANAI PAARKALYIILE

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் - அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்

எல்ரோயீ எனை காணும் தேவனே - (2)
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே - (2)
(என்னை காண்கின்ற தேவன்)

மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு

ENATHU ULLAM YAARUKKU THERIYUM

எனது உள்ளம் யாருக்கு தெரியும் - இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே - இயேசையா

1. அன்னை தந்தை அறியவில்லையே - என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா - என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா --- எனது

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் --- எனது

3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே --- எனது

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH LYRICS

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்

1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) --- எந்தன்

2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) --- எந்தன்

Saturday, July 30, 2016

EN ULLAM YENGUTHE UM ANBIRKAGAVE LYRICS

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

ENAKAI KARUTHUVAR ENNAI BOSHIPPAR LYRICS

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு

2. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் --- நம்புவதற்கு

3. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் --- நம்புவதற்கு

4. சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் --- நம்புவதற்கு

KARTHAR THAME NAM MUNNE POVAAR

கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)

நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)

1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

Friday, July 29, 2016

KARTHAR EN MEIPPER ATHINALE ORU

1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே

2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் - நல்ல
புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்

3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்

4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் - அஞ்ச
மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்

5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் - என்னைத்
தேற்றும் உமது தடியும் கோலும்

6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி - நீர்
தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி

7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி - அபி
ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி

8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் - கிருபை
சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்

9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் - மேவி
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

KARTHER ENAKKAGA YAAVAIYUM SEIVAARE

கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்

1. செய்வார் எல்லாம் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்

எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார் --- கர்த்தர்

2. கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
பெறுவேன் நன்மை பெறுவேன்
பெறாமல் இருக்கமாட்டேன்

எல்லாம் கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
பெறாமல் இருக்க மாட்டேன் --- கர்த்தர்

3. ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே

எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே --- கர்த்தர்

KALVARI SNEGAM KARAITHIDUM ENNAI

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

KADUM PUYALILE ENNAI KAATHAVARE

1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கண்ணின் மணிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே

என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

2. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் --- என் அன்பு

3. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன் --- என் அன்பு

4. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் --- என் அன்பு

KANNOKKI PAARTHA DEVA

கண்ணோக்கி பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யெகோவா

1. கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்று முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் --- தாயே

2. இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே --- தாயே

3. கண்மணி போல் காத்தவரே
கண்ணீரை துடைத்தவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தை கவர்ந்தவரே --- தாயே

KUDAADHADHU ONDRUMILLAIYE

கூடாதது ஒன்றுமில்லையே (4)
தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே (4)

1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

2. லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தெழுந்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

3. வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

4. கடலின் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையை தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

5. நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

6. பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

SAMADHANAM NALGUM NAAMAM YESU

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே

இயேசு நாமமே, இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே (2)

1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே
உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே

3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே
ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே

4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

SARONIN ROJA PALLATHAKKIN LILY

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
நேசர் அழகுள்ளவர்
பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
அழகில் சிறந்தவரே
துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

SONTHAN ENDRU SOLLI KOLLA

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன் ...
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் ...
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் ...
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

NAAN UMMAI MARANDHALUM NEER

பல்லவி

நான் உம்மை மறந்தாலும் - நீர்
என்னை மறப்பதில்லை
என் நேசர் இயேசுவே நீர் 
எனக்கு போதுமே

சரணங்கள்

1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான்

2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான்

3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்

DEVAN NAMAKKU ADAIKALAM

பல்லவி

தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே

சரணங்கள்

1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று

DEVANUKE MAGIMAI DEIVARTHUKE MAGIMAI

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா

THUTHI PAADUVAAI NENJAME

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்
மகிமை படுத்தினார், இன்னும் மகிமை படுத்துவார்

பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போலாய் விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

வானம் திறந்து மன்னாவால் போஷித்தவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
மோசேயின், கைகோலால் அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய், நம்முடன் இருப்பவரே

இழந்து போன என்னை தேடி இரட்சிக்க வந்தவரே
பாவ குழியில் என்னை மீட்டு புது வாழ்வு தந்தவரே
ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையால் காப்பவரே
உலகம் முடிவில் என்னை அழைத்து பரலோகில் சேர்ப்பவரே

THUTHIYUNGAL NAM DEVANAI

துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4)

1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கைகள் உயர்த்தி ஆராதிப்போம்

THUTHIPPEN UMMAI THUTHIPEN LYRICS

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

1. கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் --- துதியும்

2. சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே --- துதியும்

3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே --- துதியும்

THODUM EN KANGALAIYE

1. தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக்
கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப்
பாட வேண்டுமே

தொடும் என் ஆன்மாவை
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம்
போக்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

3. தொடும் என் மனதினையே
மனப் புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப்புண்கள்
ஆற வேண்டுமே

தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள்
தீர வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

PAADHAI THERIYADHA AATAIPOLA

பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் --- பாதை

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் --- பாதை

PIDAVE AARADHIKINDROM YESUVE

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

PIRIYAMAANAVANE UN AATHUMA

பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

PUGALUM VENDAME PEYARUM VENDAME

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே - (2)
இந்தியாவை தாருமே

1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் - (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் - (2) --- புகழும்

2. கோடி கோடி மக்களுண்டு - (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் - (2) --- புகழும்

POORANA ALAGULLAVARE EN YESUVE

பல்லவி

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

அனுபல்லவி

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

சரணங்கள்

1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே --- போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே --- போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் --- போற்றுவேன்

YAKOBAI POLA NAAN PORADUVEN

யாக்கோபை போல நான் போராடுவேன்
எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

1. அன்னாளை போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இரங்கி வாரும் ஐயா

3. தாவீதை போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்

VALLAMAI THAARUME BELAVEENAN

வல்லமை தாருமே
பெலவீனன் நானல்லோ
பெலவீன நேரத்தில் உம்
பெலனைத் தாருமே
பெலவீன நேரத்தில் உம்
பெலனைத் தாருமே

1. வாழ்க்கையின் பாரங்கள்
என்னை நெருக்குதே
உலகத்தின் ஈர்ப்புகள்
என்னை இழுக்குதே

2. ஆவியின் வல்லமை
என் மேல் ஊற்றுமே
முழுமையாய் என்னையும்
மறுரூபமாக்குமே

3. பரிசுத்த வாழ்க்கையை
வாழ நினைக்கிறேன்
பாவத்தின் பிடியிலே
சிக்கித் தவிக்கிறேன்

VAARUNGAL EN NESARE

வாருங்கள் என் நேசரே
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்

1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிரம்பிடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் ஆடி பாடுவேன்
நடனமாடி மகிழ்வேன்

2. நேசத்தால் சோகமானேன்
உம் பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்

3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி ரட்சகா உம்மை தொழுவேன்

VINNILUM MANNILUM UMMAITHAVIRA

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு? இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்

1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா, நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே

2. உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்

3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா

4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்

5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்

VETRI KODI PIDITHIDUVOM NAAM

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம்
வீரநடை நடந்திடுவோம்

1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே - நீ
அஞ்சாதே என் மகளே

2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு - நாம்
அலகையை வென்று விட்டோம்

3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திருப்பி பார்க்க மாட்டோம்

4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்

NAMASKARAM DEVANE NAMASKARAME

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

மலர்களை படைத்தவரே நமஸ்காரமே (2)
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே (2)

புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே (2)
போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே (2)

எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே (2)
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே (2)

வெற்றியை தருபவரே நமஸ்காரமே (2)
பற்றியே எரிபவரே நமஸ்காரமே (2)

எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே (2)
எகோவா தெய்வமே நமஸ்காரமே (2)

எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே (2)
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே (2)

குருடரை தொட்டவரே நமஸ்காரமே (2)
வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே (2)

NAMBI VANTHEN YESUVE ENNAI GUNAPADUTHUM

நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும் (4)

வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரெ என்னும் உண்மையே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

தான் வாழ பிறரை கெடுத்த பாவி என்னை மன்னியும்
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
மனிதரிடையே உம்மை காணும் பார்வை எனக்கு தாருமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியை தாருமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
உண்மை உழைப்பில் உயர்ந்து வாழும் உணர்வு என்னில் ஊற்றுமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்
எனக்கு தீமை செய்த பேரை மன்னித்து மறக்க உதவுமே
நம்பி வந்தேன் இயேசுவே என்னை குணப்படுத்தும்

NAAN UYIRODUIRUKKUM NAALELLAM

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளழவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்

என்னை வாழவைக்க ஒப்புக் கொடுத்தீர் உம்மையே
வாதிக்க கொடுத்தீரே திருவுடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே - (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே - (4)
கிருபையான இயேசுவே --- நல்லவர் நீர்

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பறிக்கபட்டீரே என்னை இணைத்திடவே --- உந்தன்

சாபமுள் முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே --- உந்தன்

NAAN NADANDHU VANTHA PAATHAIGAL

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)

நடக்க முடியல டாடி நடக்க முடியல - என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல --- நடக்க

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல --- நடக்க

NAN UMMAI URUTHIYAAGA

நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்திடுவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத்தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர் --- நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம தாசர் உள்ளே செல்வார்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் --- நான்

3. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர் --- நான்

4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம் --- நான்

NELAIILLA ULAGU NIJAMILLA URAVU

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் எப்போதும்

1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
நீ மட்டும் போதும் எப்போதும் --- நிலையில்லா

2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
நீ மட்டும் போதும் எப்போதும் --- நிலையில்லா

NEER THANTHA INTHA VAALVAI

நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே

இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
இரு கால்கள் சுவிஷேசம்
என்றும் பரப்ப செய்திடுமே --- நீர்

எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
உமக்கே ஈந்திடுவேன் --- நீர்

NEEYE ENATHU OLI NEEYE YENATHU VAZHI

நீயே எனது ஒளி நீயே எனது வழி
நீயே எனது வாழ்வு இயேசையா - (2)

நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அழியாத கோலங்கள் - (2)
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையில் பொருளாவாய் - (2)

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் --- நீயே

துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் கோலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் - (2)
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் - (2)

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் --- நீயே

NEER SEITHA NANMAIGALAI NINAIKIREN

நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் (2)

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன் (2)

1. என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே (2) --- நன்றி

2. பாவியாக நான் வாழ்ந்து பாவஞ்செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வ‌ந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வ‌ந்தீரே (2) --- நன்றி

3. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே (2) --- நன்றி

4. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா (2) --- நன்றி

NEER ENAKKU POTHUM


நீர் எனக்கு போதும் - (4)
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் - (2)
இயேசுவே நீர் எனக்கு போதும் - (2)

என் தாயும் தந்தையும் நீர்தானே
தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
சுற்றமும் நட்பும் நீர்தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) --- நீர்

தேற்றிடும் சினேகிதன் நீர்தானே
ஆறுதல் தேறுதல் நீர்தானே (2)
ஞானமும் அறிவும் நீர்தானே
என் சுகம் பெலனும் நீர்தானே (2) --- நீர்

NEEER NALLAVAR ENBATHIL SANTHEGAMILLAI

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை
உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை
கல்லறை திறந்தது உண்மை தான்
உயிருடன் எழுந்ததும் உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்

எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (2)
உண்மை தானே உண்மை தானே --- நீர்

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே (2)
ஈடற்றவரே, இனையற்றவரே --- நீர்

NEER THAN YEN THANJAME

1. நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

2. நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே

3. நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே

4. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை

NEER ENTHAN MARAIVIDAM

நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் புகலிடம்
நான் அஞ்சும் நேரத்தில் - என்னை
விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்

உம்மை நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
உம்மை நம்புவேன் - நான் நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே

நீர் எந்தன் ஆண்டவர்
நீர் எந்தன் இரட்சகர்
துயரான வேளையில் நான் வாழ
நம்பிக்கை நீர் தருகிறீர்

Thursday, July 28, 2016

Magimai Matchimai Nirainthavare

மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

4. நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

5. அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

MARAVAR YESU MARAVAR

மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின இயேசு மறவார்

அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்

தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கி நடத்திட மறவார்
எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்

வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்

MANNAVA MEETKA VANTHA JOTHIYE

மன்னவா மீட்க வந்த ஜோதியே
எனக்காய் மரித்த நாயகா
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
மன்னவா மீட்க வந்த ஜோதியே

1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
செல்லும் தேவா செல்லும் தேவா

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலுமே நான் பயப்படேனே
தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
சேரும் தேவா சேரும் தேவா

Maaridum ellaam maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே

4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே

5. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே

6. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே

7. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே

8. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே

மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

MULANGALIL NINDRU JEBIKKA AASAI

முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை
முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை
எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை

1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை
கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை
பாவத்தை விட்டுவிட ஆசை ஆ....
சிலுவையின் நிழலில் வாழ ஆசை
ஆசை ஆசை ஆசை - எனக்கு
ஆசை ஆசை ஆசை

2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை
புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை
உம் சத்தம் கேட்க ஆசை ஆ....
தேவனே உம்மோடு பேச ஆசை
ஆசை ஆசை ஆசை - எனக்கு
ஆசை ஆசை ஆசை

3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை
அந்நிய பாஷையில் துதித்திட ஆசை
உம் பாதையில் நடக்க ஆசை ஆ....
உம்மோடு சேர்ந்து வாழ ஆசை
ஆசை ஆசை ஆசை - எனக்கு
ஆசை ஆசை ஆசை

MESSIAH YESU RAJA

மேசியா இயேசு ராஜா
அவர் மீண்டும் வருகிறார்
எந்தன் ஆவல் தீர்க்க
அவர் சீக்கிரம் வருகிறார்
அவர் முகமே நான் கண்டிடுவேன்
அவரோடு நானும் சென்றிடுவேன்
மகிமை மகிமை அந்த நாள் மகிமை

1. தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
சந்தோஷமாகவே மாறியே போகும்
தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
மகிமையாய் அன்று மாறிடுமே
இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

2. இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
இனியும் தாமதம் செய்யாரே அவர்
சொன்னபடியே வந்திடுவார்
அந்த நாளில் அவரை கண்டு நானும்
ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

3. எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
கண்டு ஆயிரம் முத்தங்களிடனும்
சிலுவை சுமந்து நடந்த பாதம்
விழுந்து நன்றி சொல்லிடணும்
இந்த தியாகம் செய்த அன்பு முகமே
காண ஏங்குகின்றேன்

JODHIGALE ELLORUM KARTHARAI

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்

3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்

4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட

5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

JEBAM KETEERAIYA JEYAM

1. ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

2. கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா --- புகழ்

3. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா --- புகழ்

4. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே --- புகழ்

ABISHEGA NATHA ANAL MOOTUM

பல்லவி

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

சரணங்கள்

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

AZHAGANAVAR ARUMAIANAVAR INIMAI

பல்லவி

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்
ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்
அவ‌ர் இயேசு இயேசு இயேசு

சரணங்கள்

1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா
என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்
என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்
என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா
என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்
பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்

ADHIKALAYIL UM THIRUMUGAM

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய் - இந்த
உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்