துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும் இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும் எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் பல்லவி எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள் கர்த்தர் செய்த நன்மைகள் யாவும் ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி 1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது சிலுவை உனக்கு பளுவாகும் போதும் எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி 2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார் பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி 2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும் அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம் அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள் தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்
சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் (2)
1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன் தேனினும் இனிய என்நேசரின் அன்பை நான் எப்படி சொல்லிடுவேன் தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார் என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார் மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை என் தேவன் அகன்றிட செய்தாரே சொந்த தன் ஜீவனையும் பாராமல் எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அந்த இயேசுவின் அன்பைப் பாடவே ஆயிரம் நாவுகள் போதாதையா தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார் அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே
1. ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும்.
1. சோராதே என் மனமே சோர்ந்து போகாதே என் உள்ளமே மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார் பாராதவர் போல தான் – உன்னை 2. பொன்னை புடமிடுவார் அதின் மண்ணை அகற்றிடுவார் உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார் உனக்கேற்ற கிரீடம் செய்வார் – இயேசு 3. வடியாதே கண்ணீர் இன்று மனம் மடிவடையாதே நின்று இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும் நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு