Tuesday, May 15, 2018

VARAVENUM ENATHARASAE MANUEL LYRICS


வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்
2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்
3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

POTHAGAR VANTHU VITTAR LYRICS



போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா (4)


1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே


2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே


3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்


4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

YEDHO KIRUBAIYILA VAAZHKA LYRICS

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
சுய நீதிய கழட்டி வெச்சேன்
உங்க நீதிய உடுத்திகிட்டேன்
நீதிமானா மாத்துனீங்களே என்ன
நீதிமானா மாத்துனீங்களே
செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
மன்னிச்சு அணைக்குறீங்களே
என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. 
பசிக்கும்போது உணவு தந்து
ஜெபிக்கும்போது இரங்கி வந்து
ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன
ஆசீர்வதிக்கிறீங்களே
அதிசயமா நடத்துறீங்க
ஆலோசனைய கொடுக்குறீங்க
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே 
உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
தகப்பன் நீங்கதானய்யா என்
தகப்பன் நீங்கதானய்யா
தவறும்போது திருத்துறீங்க
தடுக்கும்போது புடிக்கிறீங்க
தாயும் நீங்கதானய்யா – என்
தாயும் நீங்கதானய்யா

YENNAPPA SEIYANUM NAAN LYRICS


என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா-என்னப்பா

1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம்தான் எனது விருப்பமே

2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம்தான் எனது தஞ்சமையா

4. எத்தனை இடர் வரட்டும்
அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன்
உற்சாகமாய் உழைத்திடுவேன்

YERUKINDRAR THALLADI THAVALNTHU LYRICS


ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்
1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு
2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு
3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு
4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு
5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு
6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு

YEHOVAH NISSI YEHOVAH NISSI LYRICS


யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)
1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்
2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம்
3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

UMMAI NESIKKA KATRU THAARUM LYRICS


உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்
உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க 
துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

UMMAI NEYNACHALE ALUGANUNU LYRICS

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
உள்ளமெல்லாம் காயமானதே
இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
நீங்க மட்டும் என்றும் மாறல (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா
4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

DEVAPITHA ENTHAN MAIPPAR LYRICS


1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்
2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
4. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

DEVA AAVIYE YENGAL LYRICS

தேவ ஆவியே!
எங்கள் தூய ஆவியே!- 2
உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ
1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
தைலத்தால் நிரப்புமே!
தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ
2. அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ
3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம் -2
உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே -2 – தேவ

BAVANI SELKIRAR RASA LYRICS


பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத 
3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

APPA PITHAVE KONJAM PARUNGA LYRICS


அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க
1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்
2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே
3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே

YAAR YAAR YAAR NEEGAL LYRICS

யார்? யார்? யார்? நீங்கள்
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே


1. வெள்ளை அங்கி தரித்தவர்
குருத்தோலைப் பிடித்தவர்
தேவனைத் துதிப்பவர்
தேவனோடு வாழ்பவர்


2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
பாவம் குழுவபட்டவர்கள்
உபத்திவங்கள் வந்தாலும்
உண்மையோடு வாழ்பவர்