Tuesday, February 27, 2018

THEEVINAI SEIYATHE MAA SOTHANAIYIL LYRICS

தீவினை செய்யாதே மா சோதனையில் 
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் 
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

ஆற்றித் தேற்றியே காப்பார் 
நித்தம் உதவி செய்வார் 
மீட்பர் பலனை ஈவார் 
ஜெயம் தந்திடுவார்

வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் 
சேராமலே நீங்கி நல்வழியிலும் 
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் 
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் 
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் 

யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

BALARE ORR NESAR UNDU LYRICS

பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே  
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே  
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்  
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்
பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே  
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே  
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?  
அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ
பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே  
நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்  
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்  
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்
பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே  
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே  
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை  
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை

NAAN KANAMALPONA ADALLAVO LYRICS

பல்லவி 
நான் காணாமற்போன ஆடல்லவோ 
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை 
அன்புமீறி நான் நடந்தேன் 
ஆபேலைக்கொன்ற காயீனைப்போல 
வன்கொலை நான் புரிந்தேன் 
ஆரம்ப முதலில் விழுந்த 
அன்பர் என்னைத் தேடுகின்றார்

கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் 
காட்டித்தந்த யூதாஸ் தானே 
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து 
பெரும்பழி நான் சுமந்தேன் 
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் 

கர்த்தர் என்னைத் தேடி வந்தார்

ANANDHA VAZHVU VENDUMENTRU LYRICS

பல்லவி 
ஆனந்த வாழ்வு வேண்டுமென்று 
அறிஞர் ஒருவர் நினைத்தாராம் 
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று 
அறிவுரை சொல்லும் என்றாராம்

குழந்தையை அழைத்து முன்னிருத்தி 
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் 
வந்தவர் திகைத்து சென்றாராம் 
வாழும் வழிதனை மறந்தாராம்

அம்மா அப்பா பெரியோரே 
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் 
அன்பால் உள்ளம் மாறிவிட்டால் 

ஆனந்தம் நம்மைத்தேடி வரும்

ANANTHA NAAL VARUME LYRICS

பல்லவி 
ஆனந்த நாள் வருமேஎந்தன் 
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்லஆனந்த

அனுபல்லவி 
கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் 
பாடிப் பாடித் தினம் மகிழ நல்லஆனந்த

தேவ சித்தம் நிறைவேறும்திரு 
மந்தை யாவும் ஒன்று சேரும்ஆனந்த

மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட 

பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும்ஆனந்த

UYIRTHEZHUNTHAR ULAGAMELLAM LYRICS

பல்லவி 
உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே 
உயித்தெழுந்தார் உள்ளம் எல்லாம் மகிழ்ந்திடவே

பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே 
ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே 
மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க 
ஒளியாக உயித்தாரே வழிகாட்டினார்

மண்மீது வாழும் உயிர்கள் எல்லாம் 
படைத்தாண்ட தேவன் உயிர்த்தெழுந்தார் 
எந்நாளும் நாமும் அவரோடு வாழ 

உள்ளத்தில் உயிராக இருந்தாளுவார்

Monday, February 26, 2018

YESUVE JEEVA MALARE LYRICS

பல்லவி 
இயேசுவே ஜீவ மலரே 
கல்வாரியில் கசங்கிய மலரே

அனுபல்லவி 
பள்ளத்தாக்கின் லீலியாய் 
சாரோனின் ரோஜாவாய் 
இருந்தும் எனக்காய் 
இருந்தும் எனக்காய்

கனிதரும் வாழ்வின் ஆதாரம் 
கல்வாரி மலையின் மாதியாகம்

பொறுக்க இயலா உம் தியாகம் 

குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும்

THEIVA ASEERVATHATHODE LYRICS

தெய்வ ஆசீர்வாதத்தோடே  
அடியாரை அனுப்பும்  
வார்த்தையென்னும் அப்பத்தாலே  
போஷித்து வளர்ப்பியும்  
இப்போதும்மை தேடி வந்து  
மனதாரப்போற்றினோம்  
மோட்சலோகத்தில் களித்து  
உம்மை வாழ்த்தி தொழுவோம்

SENAIGALIN PARAN YEHOVA LYRICS

சேனைகளின் பரன் யெகோவா 
பரிசுத்தர் பரிசுத்தர் 
பரிசுத்தர் ஆமென் 
திரு மகிமை நிறைந்தவராம் 
பாரிலைங்கும் அல்லேலூயா

சர்வ சுத்தர் பரன் யெகோவா 
பரிசுத்தர் பரிசுத்தர் 
பரிசுத்தர் ஆமென் 
இருந்தவர்தான் இருக்கிறவர் 

வருபவர்தான் அல்லேலூயா

THUTHIPEN THUTHIPEN THUTHIPEN LYRICS

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

NAMBUM THEVANAI NAADI LYRICS

நம்பும் தேவனை நாடி 
நம்பிக்கையோடு கூடி 
யாவருமாய் பாடிடுவோம் 
அல்லேலூயா கீதமே 
அல்லேலூயா (2) பாடிடுவோம் (2) 
அல்லேலூயா பாடிடுவோம்

இன்னல்கள் யாவும் இன்றே அகலும் 
ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம் 
அன்றே உனக்காய் ஆயத்தம்செய்தார் 
ஜீவனின் மார்க்கம் ஒன்றை 
இயேசு அழைக்கிறார் ஆயத்தமாய் நீ 

இன்னும் ஏனோ தாமதமோ

VAAZHTHIDUVOM NAM VAZHTHIDUVOM LYRICS

பல்லவி 
வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம் 
இயேசுவின் நாமத்தை 
இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே

எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே 
தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே 
ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே 
ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை 
கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே 
ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே 
ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

NAAL MULUTHUM PAADA VARAM LYRICS

பல்லவி  
நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான்  
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான் 
சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்  
சிலுவையில் எனக்காய் மரித்தவனே  
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்  
தரணியில் எங்கும் நிறைந்தவனே
இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்  
இறைவனின் பாதம் எனக்கது போதும்  
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்  
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே

IRAIVAN ENADHU MEETPAANAR LYRICS

இறைவன் எனது மீட்பானார்  
அவரே எனக்கு ஒளியானார்  
அவரைக் கொண்டு நான் வாழ  
எவரைக்கண்டும் பயமில்லை
வாழ்வில் இறைவன் துணையானார்  
வாடும் எனக்கு உயிரானார்  
தீயோர் என்னை வளைத்தாலும்  
தீமை அணுக விட மாட்டார் (2)
ஒன்றே இறைவா வேண்டுகிறேன்  
ஒன்றே அடியேன் தேடுகிறேன்  
தேவன் உமது திருமுன்னே  
நாளும் வாழ அருள்வாயே (2)

IRANGUM IRANGUM KARUNAIVAARI LYRICS

பல்லவி
இரங்கும் இரங்கும் கருணைவாரி
ஏசு ராசனே, – பவநாசநேசனே!

திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் 
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயாஇரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால் 
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன்இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் 
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயாஇரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் 

பரிந்து கேள் ஐயா, – தயைபுரிந்து மீள், ஐயாஇரங்கும்

IYYA UM THOLGALILE LYRICS

ஐயா உம் தோள்களிலே  
ஆடிடும் மலரிலே  
மெய்யாய் ஒரு மலராய்  
தேவன் தரவில்லையே

பல்லவி  
சின்னப் பூ நானல்லவோ தேவனே  
நான் சொல்லவோ  
என்னை உம் பாதத்திலே  
ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)

வண்ணம் எனக்கில்லையே  
வாசல் திறப்பில்லையே  
மண்ணில் உதிரும் முன்னே  
வாழ்வு கொடுத்தால் என்னசின்னப் பூ

தொய்யும் உயிர் பிரிந்தே  
ஓடிப்பறக்கும் முன்னே  
தூய விரல்களிலே  
தொட்டுப் பறித்தால் என்னசின்னப் பூ

Thursday, February 22, 2018

DHEVA EN UYIR NAALELLAAM LYRICS

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2
உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2
தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2
என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2
தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

NEER SEITHA ATHISAYAM LYRICS


நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே