Sunday, January 12, 2020

SAENAIGALIN KARTHAR NAMMOD IRUKIRAAR

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் கட்டளையிட நிற்கும்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

1.நான் கெம்பீரமாய் நடக்க
என் பாதையை அகலமாக்கினீர்
நான் விசாலத்தில் தங்கிட
என் எல்லையை பெரிதாக்கினீர்-2
என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
அதிகாரமாய் பெருகிற்று-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
நான் செய்வதை வாய்க்க செய்தீர்
என் கனவுகள் நிறைவேறிட
நீர் வாசலை திறந்து வைத்தீர்-2
எனக்கு முத்திரை மோதிரம் தந்து
உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

3.நான் வாழ்ந்து செழித்திருக்க
நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
நான் சிங்காசனத்தில் அமர
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2
எனக்கு எதிரான கையெழுத்தை
முற்றிலும் குலைத்திட்டீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

YEN KOODAVE IRUM OOO YESUAE

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது

இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா 

கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா 

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா

REHOBOTH NEER NALLAVAR

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே 
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்

ELLAME NEER YESUVAE

எல்லாமே நீர் இயேசுவே 
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2
பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை

மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே

1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே
கரிசனையானவரே- நீர்
கருணை உள்ளவரே-2

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

2.எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

PUDHIYA VALLAMAI PUDHIYA ABISHEGAM

புதிய வல்லமை புதிய அபிஷேகம்
புதிய ஆவி எங்கள் மேலே
இந்த நாளில் இறங்கட்டுமே-2

மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்-2

1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து
அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2
(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்
உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே

2. எரிகோவின் கோட்டையை உடைத்திட
யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2
(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட
உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

RATTIPPANA NANMAIGALAI THANTHIDUVAR

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்
எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீ
இருமடங்காய் இன்றே தந்திடுவார்

ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா

அற்புதம் அதிசயம் செய்திடுவார்
ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கவலைகள் போக்கி மகிழச்செய்வார் – ஹாலேலூயா

மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
தீமைகள் எல்லாமே மாறி விடும்
தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் – ஹாலேலூயா

ஆவியின் வரங்களை தந்திடுவார்
அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்
உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே
உன்னத ஆவியை பொழிந்திடுவார் – ஹாலேலூயா

VAZHKKA JORAAGA GANAM

வாழ்க்கை ஜோராக கானம் நான் பாட
மனசு புதுசாகுது – 2
உசுரைக்கொடுத்து உன்ன மீட்க
உனக்காக வந்தாரைய
ஆ.ஆஅ .ஆஅ

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்

1. காலரா தன தூக்கி கிணு
திமிரா தான் சுத்திவரும்
புல்லிங்கோ எல்லாம் சுத்துற நேரம்
அன்பான உள்ளதோடு தாழ்மையை சுத்திவரும்
புல்லிங்கோ எல்லாம் உயரும் நேரம்
கடந்தது கிடைக்குமுன்னு
நெனச்சது நடக்குமுன்னு
வீம்புல வாழாதட
நடப்பதை நெஞ்சில் வச்சு
அவரோட கைகோத்து எட்டாத தூரம் இல்லடா

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்
ரா ப ப ப பாப்பா …

2. மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்ல
எட்டி உதைக்க அவர் எதிரியும் இல்ல
கட்டி அணைச்சு தங்கி சுமக்க
தேடி வந்தரைய
நல்ல செய்தியை நெஞ்சு குள்ள வச்சுக்கோ
தேடிவந்தவரா சலூட் பண்ணி எதுக்கோ
தொழில் சஞ்சு அட்வைசு கேட்டா
வாழ்க்கை ஜோராகும்டா

அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும் – 3

ரா ப ப ப பாப்பா …

RAAVIN KULIRILAE

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

1.விண்ணுலகத்தை
விட்டு வந்தாரே
மண்ணின் மாந்தர் பாவம் போக்க
மனுவாய் வந்தாரே-2
ராவின் குளிரிலே

2.தந்தை தேவனே
எங்கள் இராஜனே
சொந்தமாக தந்ததாலே
நிந்தை நீங்கிற்றே-2
ராவின் குளிரிலே

3.மேய்ப்பர் கண்டனர்
ஞானிகள் தொழுதனர்
(இந்த) உலகின் இரட்சகர்
மனுவாய் பிறந்தார்
ஆ.. என்ன பாக்கியமே-2

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

VAREERO VAAN PATHIYAE

வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே
தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை

சரணங்கள்

1. பூ உலகில் போற்றும் உம்மை
புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை
தீ உலகில் நின்று தீவிரமாய்
சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் – வாரீரோ

2. கண்டதில்லை நேர் முகமாய்
கல்வாரியின் காந்தனை நாம்
கண்டிடவே முகமுகமாய்
கர்த்தா உன் சாயல் முழுமையுமாய் – வாரீரோ

3. காயம் கொண்ட கால் கரமும்
கருணை பொங்கும் விலாபுரமும்
நேயன் உன் அங்க மகத்துவமாம்
நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம் – வாரீரோ

4. இருப்பதுவும் நாம் இவ்வுலகில்
இயேசுவே உம் மா தயவில்
விருப்பம் முழுவதும் உம் வரவில்
வேந்தனே வாருமே நீர் விரைவில் – வாரீரோ

5. இயேசுவே எம் இன்ப முகம்
ஏழையாம் காண மகிழும் முகம்
வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்
வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர் – வாரீரோ

VAAZHTHIDUVOM NAM VAZHTHIDUVOM

வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம் 
இயேசுவின் நாமத்தை 
இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே

எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே 
தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே 
ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே 
ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை 
கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே 
ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே 
ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே