Monday, May 21, 2018

VISUVAASATHINAL NEETHIMAAN PILAIPPAN LYRICS

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்                                              
விசுவாசியே பதறாதே                                                            
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்                                  

2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்                                                                    

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ                       

PARAMA KUYAVANAE ENNAI VANAIYUMAE LYRICS


பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம
2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம
3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம

THUYA THUYA EM YESU NATHA LYRICS


தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்
1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மாபெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா
2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
சாத்தானைத் தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா
3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

PUTHIYA PAADAL PAADI PAADI LYRICS


புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு
2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும்
3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – தேவா
4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு
5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

RAJA UM MALIGAIYIL LYRICS


இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் – உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்


1. என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே


2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே


3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே


4. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே


5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே


6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே

RAJA UM PRASANNAM POTHUMAIYA LYRICS


ராஜா உம் பிரச்னனம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமாய் நாடுகிறேன்
2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே
8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமெ
9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

RAJAN THAVEETHURILLULLA MAATU LYRICS


1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்
2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்
4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்
5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே
6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்

THEDI VANTHA DEIVAM YESU LYRICS


தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

THANJAVURU BOMMA THALAIYAATTUM LYRICS


தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம
நான் இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஏ பொம்ம
பூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம
நம்ம இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஓ பொம்ம
ஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்
ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்
எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்
எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு
1. காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும்
தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்
இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையே
அவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே
புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார்
தன்னைத்தான் மாற்றிக்கொள்ள வழி தன்னை தந்து
உன்னைக் காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார்
அன்பை பொழிந்திடும் என் இயேசுவே – தஞ்சாவூரு
2. நிலவுக்கு திரையைப் போட்டா என்னாகும் என்னாகும்
இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும்
தேவனை பாடாவிட்டால் என்னாகும் என்னாகும்
வாழ்கின்ற இந்த வாழ்க்கை பொய்யாகும் பொய்யாகும்
அறியாத அன்பனுக்கு கருணைத்தான் காட்டுவார்
அறிவித்தால் பாவம் தன்னைப் போக்கிடுவார்
என்றும் போற்றிடுவோம் உம்மில் நிலைத்திடுவோம்
அன்பின் வடிவான என் தேவனே – தஞ்சாவூரு

UMMAI POLLAE MANAMIRANGUM LYRICS


உம்மை போல மனமிரங்கும்
தேவம் இல்லையே
உம்மை போல அன்புகூரும்
வேறுதேவம் இல்லையே
ஆராதனை ஆராதனை – 2X
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது

IRANTHORAI VAALAVAIKUM VALLAVAR LYRICS


இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கசெய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தமே


1. செடியான கிறிஸ்துவோடு இணைந்து விட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்


2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை


3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்


4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்


5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா


6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே

துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்


7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை


8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்

GITHIYON NEE LYRICS


கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா


1. உணவுக்கு போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி


2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம்பெற ஜெபிக்கணுமே


3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
புளியாத அப்பாமாக மாறிவிடு


4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

GALEELIYA KADALORAM ORU MANITHAR LYRICS


கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்
1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது
நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு
2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே
3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

KARTHAR UNNAI MENMAIYAGA VAIPAAR LYRICS


கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே -2
1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

KARTHARAI NAMBIDUNGAL AVAR LYRICS


கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவேமாட்டார்
1. உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையைவிட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
கர்த்தர் காக்கின்றார்
2. கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்

KARTHARAI NAMBINOR PERUPETTROR LYRICS


கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்


1. எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்


2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை


3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்


4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்

KARTHARAI NAMBIYE JEEVIPPOM LYRICS


கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் — கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார்

KUMBIDUGIREN NAN KUMBIDUGIREN LYRICS


கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்
1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2
2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2
3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

KURUSINIL THONGIYE KURUDHIYUM LYRICS


குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்
2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்
3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்
4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்
5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

KUTHUKALAM NIRAINTHA NANNALL LYRICS


குதுகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்
1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதுகலம்
2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியைச் சேர்த்திடவே – குதுகலம்
3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் – குதுகலம்
4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதுகலம்
5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் – குதுகலம்