அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே
அன்பனே இறைவனே என்னிலே வாருமே
பகைமையுள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும்
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்
தளர்ச்சி ஓங்கும் போது மனதிடம் தழைக்கவும்
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்
No comments:
Post a Comment