Wednesday, May 30, 2018

ISRAVELIN THUTHIGALIL VAASAM SEIYUM LYRICS


இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே
2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே
3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே

EN JANAME MANAMTHIRUMBU LYRICS


என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

ANANTHA GEETHANGAL ENNALUM LYRICS

பல்லவி
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
சரணங்கள்
1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த
2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த
3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த
4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த
5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் – ஆனந்த

AARATHANAI KURIYAVARE UMMAI UYARTHI LYRICS


ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2
1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

KALANGATHE MEGANE LYRICS


கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் – 3


1. மலைகள் பெயர்ந்து கோலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் – 3


2. உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்


3. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்


4. வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம்
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார்

EN JEBATHAI KETKIRAR LYRICS

என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை