Sunday, November 24, 2019

AATHIYUM NEERAE ANTHAMUM NEERAE

தேவாதி தேவனைப் பணிந்திடுவோம்

ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்

1.தூதர்கள் போற்றும் தூயவரே
துதிகளின் பாத்திரர் தேவரீரே
உந்தனின் சமூகம் ஆனந்தமே
உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

2.செய்கையில் மகத்துவம் உடையவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

3.ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்
ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்
உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
உத்தம தேவனைப் பணிந்திடுவோம்

4.ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
மகிமையும் கனமும் துதிகளையே
செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்

STHOETHTHIRAM PAATIYAE POERRITUVAEN

தேவாதி தேவனை வணங்கிடுவேன்!

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்!

1.அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே!

2. ஜோதியாய் வந்த அன்பே – ப10வில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே!

3. மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே!

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங்கவரும் அன்பே!

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை தந்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே!

AANDAVARE ISOPULLINAAL



ஆண்டவரேஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்
நானும் தூய்மையாவேன்
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனிதனிலும் வெண்மையாவேன்
இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப
என்மேல் இரக்கம் கொள்வீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெருக
ஆதியில் இருந்தது போல

இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.

NANMAIGAL SEYTHA IRAVANUKKU


நன்மைகள் செய்த இறைவனுக்கு 
நன்றியின் பலியை செலுத்திட வாரீர் -- 2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

உள்ளத்தை தருவது திருப்பலியாம் 
உகந்த தென்றால் அது பெரும் பலியாம் 
கொடைகள் பெறுவது தகும் வழியாம் --2
குறையினை போக்கும் கோவழியாம் 

வானத்தை நோக்கும் நறும்புகை போல் 
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம் 
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தே -- 2

ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம் 

IYARKAIYIL URAINTHIDUM INAIYATRA



இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா 
என் இதயத்தில் எழுந்திட வா 
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு 
காத்திடு என் தலைவா 

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு  
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ 
மெழுகாகினேன் திரியாக வா 
மலராகினேன் மணமாக வா 

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி 
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ 
குயிலாகினேன் குரலாக வா

மயிலாகினேன் நடமாட வா 

DEEPATHIN OLIYINIL INAIVOM



தீபத்தின் ஒளியினில் இணைவோம் 
திருப்பலி செலுத்திட விரைவோம்
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட 

நல் வாழ்வின் தீபங்களாய் இங்கு நாளெல்லாம் ஒளிர வாருங்களேன் 
நம் வாழ்வின் தேவைகளை தினம் நல்லோர்க்கு இயேசு தந்திடுவார் 
அவரின் இல்லம் தினம் வந்தால் நம் உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே 
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

இயேசுவோடு நாம் நடந்தால் என்றும் நம் வாழ்வில் தோல்விக்கு இடம் இல்லையே 
நன்மை செய்து நீ முயன்றால் இங்கு உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே  
வார்த்தை இங்கு மனுவானார் நம் வாழ்வினில் என்றும் குடி கொண்டார் 

அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

ANBENNUM VEENAIYILE



அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினை பாடிடுவேன் 

அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் 
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன் 

வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் 
தூய்மையெனும் மலரில் நான் தாழ்மையாய் வணங்கிடுவேன் 

தென்றலே தவழ்ந்திடுமே என் தெய்வமே நீ இருக்க 

இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க 

IRAIVANIN AAVI NIZHALIDAVE



இறைவனின் ஆவி நிழலிடவே 
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே 
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார் 
அவர் பணியினை தொடர்ந்திடவே 

வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும் 
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் 
ஆண்டவர் அரசில் துயரில்லை என 
வான் அதிர பறை சாற்றிடவும்எனை 

குருடரும் ஒளியுடன் நடந்திடவும் 
குவலயம் நீதியில் திளைத்திடவும் 
அருள்நிறை காலம் அவனியிலே 

வருவதை வாழ்வினில் காட்டிடவும் - எனை 

UN NAAMAM SOLLA SOLLA



உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுதய்யா 
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதய்யா

மாணிக்க தேரோடு காணிக்கை வந்தாலும் உனக்கது ஈடாகுமா 
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா 

தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன் 
உன் நாமம் என்னென்பேன் 
நிறையென்பேன் இறையென்பேன் நீங்காத நிலயென்பேன் 

உன் நாமம் என்னென்பேன் 

YESUVE ENNUDAN NEE PESU



ஏசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதை கேளு
நானொரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழிநடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம் உன் திரு இதயம் பேரானந்தம்  - (2)
உன் திரு வாழ்வெமக்கருளும்
உன் திரு நிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பாய்

இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும் இணையடி பணிந்து தலை வணங்கிடுமே
ஏசுவே உன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ஏசுவே உன் புகழ் வாழ்க

ஏசுவே நீ என் இதயத்தின் வேந்தன் என்னை தள்ளி விடாதே

EZHAI ENNAI KAANIKAIYAAGA



ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே 
ஏற்று கொள்ளுமே ஏற்று கொள்ளுமே 

என் உயிரும் உடலும் உள்ளமும் 
சிந்தனையும் செயலும் - என் 
உணர்வுகள் உறவுகள் என்னில் 
உள்ள திறமைகள்
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 
தந்தாய் ஏற்றுக்கொள் 

என் கடந்த கால வாழ்க்கையும் 
நிகழும் வாழ்க்கையும் - நான் 
எதிர் கொள்ளும் வாழ்க்கையும் 
அதன் வளர்ச்சி தளர்ச்சியும் 
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 

தந்தாய் ஏற்றுக்கொள்

KAIYALIKKINDREN IRAIVA ENTHAN



கையளிக்கின்றேன் இறைவா - எந்தன் 
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு 
கையளிக்கின்றேன் இறைவா 

வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன் 
அருள் நிலை ஒன்றே மேலானது 
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - எல்லா 
வரங்களையும் விட மேலானது 

செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன் 
இதயமும் உமதுமுன் நிறைவு பெறும் 
முழுமை என் உள்ளமதை நிரம்பிடவே - நாவில் 

மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும் 

THANTHITA PORUTKAL YAAVAIYUM



தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து 
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் 

வழங்கிட கனியோ உணவோ இன்றி 
வாடிடும் வறியோர் பலர் இறைவா 
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி 
வேறேதும் இல்லா நிலை இறைவா 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை 
உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம் 
எங்கள் மனம்பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம் 

மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம் 

THAAYAGA ANBU SEYYUM



தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளி ஏற்றவா 
கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே (2)
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா (2)

உன் அன்பு சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே 
உன் ஸ்வாச காற்றில் கலந்தாலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன் 
நான் என்றும் உன் சாயல் தானே 
உன் கோவில் குடி கொள்ள நீ வா 

உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுக ராகம் மீட்டிடுவேன் 
உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும்  யுகம் பல படைத்திடுவேன் 
எல்லாமே நீதானே இறைவா 

என்னுள்ள நிறைவாக நீ வா