Wednesday, January 30, 2019

PARISUTHARAE ENGAL YESU DEVA LYRICS

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

அல்லேலூயா

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

வருத்தங்கள் பசிதலம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

ANDAVAR SANNIDHI VARUNGALE LYRICS

ஆண்டவர் சன்னிதி வாருங்களே நல்
ஆனந்தமுடனே பாடுங்களே
இயேசுவின் பிறப்பில் மகிழுங்களே – 2
இந்த இகமதில் நாளும் முழங்குங்களே
வாருங்களே வாருங்களே – 2
உள்ளங்கள் உறவுகள் மகிழும்
இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்
அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்
ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்
குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்
இயேசுவை அவரில் கண்டிடலாம் -2
இறைபணி தொடர இறையாட்சி மலர
இணைந்திடுவோம் நாம் இறைவனிலே
சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை
இறைவன் இயேசு வருகையிலே
நீதியுமுண்டு சமத்துவமுண்டு
இறைவன் வாழும் சமூகத்திலே
அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்
இனிய உலகம் படைத்திடலாம்
குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்
புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம்

ANDUKU ORU MURAI VARUGIRATHU LYRICS

ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்
மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்
அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது
ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது
தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்
இதயத்தை நாமும் அலங்கரிப்போம்
மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்
சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்
கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை
இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை
தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்
பிறப்பைக் காணுவோம்
ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது
எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு
மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை
எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்
உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்

AALAYA MANIGALE OLITHIDUNGAL LYRICS

ஆலய மணிகளே ஒலித்திடுங்கள்
ஆண்டவர் பிறப்பை அறிவியுங்கள்
ஆலய கதவுகள் திறந்திடுங்கள் மீட்பர் வந்திட வழிவிடுங்கள்
உலக மக்களே வந்திடுங்கள்
உண்மை இறைவனை வணங்கிடுங்கள்
மலர்கள் பலவும் கொணர்ந்திடுங்கள்
மன்னன் பாதமே தூவிடுங்கள்
இன்னிசை கருவிகள் மீட்டிடுங்கள்
இறைவனின் பிறப்பை முழங்கிடுங்கள்
பண்ணிசைப் பாடி மகிழ்ந்திடுங்கள்
பாலன் இயேசுவை வாழ்த்திடுங்கள் (எங்கள்)

IDAYARGAL THANTHA KAANIKKAI LYRICS

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)
கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு…
நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு…

INDHA MANNIL VANTHU MANNAR YESU LYRICS

இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்
இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)
இறைவாக்கினர்கள் சொன்னபடி
பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்
போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்
மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்
மாடுகள் அடையும் தொழுவத்திலே -2
மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
Happy Christmas – 2 Happy Happy Christmas
புவியில் நன்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
அமைதியின் வேந்தன் அவனியிலே -2
அழகிய குழந்தையாய் உதித்தாரே

YESU PIRANTHA NAAL ITHU LYRICS

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது
மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2
துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே
விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2
தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2

YESU PERANTHUVITAR MESSIAH VANTHUVITAR LYRICS

இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே
தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்
சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே
மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே
ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
தேவதூதன் சொன்ன செய்தியிது
பாவம் போக்க வந்த தெய்வமிது
எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி
பாலனின் பிறப்பில் அக்களிப்போம்
காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா
இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
விண்மீன் காட்டி தந்த வழியுமிது
மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது
ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி
நாடுவோம் அவன் அருளைத் தேடி

INDRU PIRANTHA NAAL VAAZHTHUKKAL LYRICS

இன்று பிறந்த நாள் வாழ்த்துகள்
இன்று மலர்ந்த நாள் மண்ணிலே
அன்பின் குழந்தை இயேசுவே
உந்தன் மழலை மொழி கேட்கவே
எந்தன் மனமும் தினம் ஏங்குதே
இன்று பிறந்த நாள் வாழ்த்துகள்
ஒரு விண்தெய்வம் நம்மோடு மண்மீதிலே
மழலையாய் மலர்ந்ததே
அந்த விண்வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே
விடியலாய்ப் புலர்ந்ததே
இனி வேற்றுமை மறையட்டும்
எங்கும் வேதனை தீரட்டும்
வையம் மகிழும் வான்படை போற்றும்
வான தேவன் வரவில் – நல்ல
இதயம் நிறையும் உதயம் மலரும்
தேவமைந்தன் உறவில் – இன்று
ஒரு விண்தெய்வம் இந்நாளில் நம் இல்லத்தில்
புதையலாய்த் தவழ்ந்ததே
அந்த விடிவெள்ளி நம் வாழ்வில் ஒளியேற்றவே
புதுமையாய் ஒளிர்ந்ததே
இனி ஒற்றுமை பெருகட்டும் போர் கலகங்கள் ஓயட்டும்
வையம் மகிழும் வான்படை போற்றும்
வான தேவன் வரவில் – நல்ல
இதயம் நிறையும் உதயம் மலரும்
தேவமைந்தன் உறவில் – இன்று

UYIR NANBARGALE ANBIN SONTHANGALE LYRICS

உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே
ஒன்றுகூடியே வாருங்களே
உண்மை விடுதலையை நாம் சுவாசிக்கவே நம் இறைமகன் பிறந்துள்ளார் வாருங்கள் பாடுங்கள்
விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை
மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி (2)
சின்ன பாலகனின் கொஞ்சும் சிரிப்பதையும் இதயம் மகிழ்ந்திடுதே
துன்ப துயரங்களும் தொல்லை கவலைகளும்
மறைந்து மாய்ந்திடுதே
வருவீர் நண்பரே விண்ணில்… உண்மை விடுதலை அடைந்திடவே-2
கண்ணில் கருணையும் மண்ணில் அமைதியும்
இதயம் அவர் தரவே
விண்ணின் தேவனவர் நம்மில் நிறைந்துவிட்டால்
புலரும் புதுவிடியல்
வருவீர் நண்பரே விண்ணில்… உண்மை விடுதலை அடைந்திடவே-2

ULAGIN OLIYE UNMAIYIN VILAKKE LYRICS

உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
உயிரினில் கலந்திட வா
மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
மாண்புறச் செய்திட வா (2)
இயேசு பாலனே இதயம் வாருமே
மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா
இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)
பல கோடி உள்ளங்கள் மகிழ
நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)
எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
என்றும் உந்தன் உறவைத் தேடும்
என் உயிரே வருவீர் – உலகின்
புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)
கரைசேரா ஓடங்கள் ஆனோம்
நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)
உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
எந்தன் உயிரும் உம்மில் இணையும்
விண்மலரே வருவீர் – உலகின்

UNNAI NINAIKAYILE ULLAM URUGUTHEY LYRICS

உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகிடுதே
மரியின் திருமகனே
ஒளி பிறந்தது வழி திறந்தது
அருள் சுரந்தது இருள் பறந்தது (2)
உலகம் முழுவதும் உனது வடிவம்
எதிலும் உன் வதனம்
இறையே வா நெஞ்சில் உறைந்திடவே
கறைகள் மறைந்திடவே
இதயக் குடிலில் உதயம் தரவே
குடிலில் உதித்தவனே
வறுமை எளிமை உனது வசந்தம்
கருணை உன் மகுடம்
மலரே வா கையில் தவழ்ந்திடவா
புனிதம் மணம் தரவே
இருண்ட உலகம் ஒளியைப் பெறவே
இரவில் உதித்தவனே

ENTHAN NENJUKULLE NEE PIRAKKA LYRICS

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா – இனி
அச்சமென்ப தெனக்கில்லை
வழியெங்கும் தடையில்லை தலைவா (2)
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா
வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா

ELLARUKKUM INDRU THIRUVIZHA LYRICS

எல்லாருக்கும் இன்று திருவிழா
ஏழை மக்களுக்கு பெருவிழா
பொல்லார்க்கும் நல்லார்க்கும் பொழிகின்ற மழைபோலே
எல்லார்க்கும் அருள் வழங்கும் இயேசு பிறந்த திருவிழா
வண்டு வந்து தீண்டாத செண்பகப்பூ வாசமதை
தென்பொதிகை தென்றல் எங்கும் சுமந்து செல்லுது (2)
அன்னைமரி வான்மதியாய் அன்புமகன் கதிரவனாய்
மண்ணுலகில் யாவருக்கும் மகிழ்வைத் தந்தது
பண்ணிசைத்து நடனம் செய்து பாட்டுப் பாடுங்கள்
கண்மணியாம் குழந்தை இயேசு பாதம் நாடுங்கள்
விண்ணகத் தந்தையின் அன்பு மழையிது
மண்ணக மாந்தரின் நெஞ்சில் மலருது
காரிருளை நீக்குகின்ற காலை எழும் கதிரவன் போல்
பாவஇருள் போக்க வந்த உலக ஞாயிறு (2)அவர்
சொல்லும் மொழி தேனமுது செல்லும் வழி விண்ணரசு
அவ்வழிதான் யாவருக்கும் மீட்பு என்பது – பண்ணிசைத்து

EALIA VADIVIL KUDILIL PIRANTHAR LYRICS

எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)
அன்னை மரியின் மடியில் தவழும்
இயேசுவை வணங்கிடுவோம் – அவர்
வானம் புகழ பூமி மகிழ மண்ணகம் வந்துவிட்டார்
வாங்க – வாழ்த்திப் போற்றிடுவோம்
எளிய வடிவில் குடிலில் பிறந்தார் வாங்க வணங்கிடுவோம் (2)
வார்த்தையே மனுவாய் உருவான கடவுள்
வானவன் அன்பால் மீட்பரானார்
வானகம் விட்டு வாழ்விக்க வந்தார்
வானோர் போற்றும் தூயரானார்
பாவம் போக்கும் மாவீரன் இவரே
பாலகனாய் இங்கே தூங்குகின்றார் (2)
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் – நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்
எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)
ஏழை எளிய இறைமக்கள் வாழ்வில்
ஒளியை ஏற்ற பிறந்துவிட்டார்
பாவம் அறியா பரிசுத்த தேவன்
பாவிகள் நமக்காய்த் தோன்றிவிட்டார்
சமத்துவம் ஓங்க சன்னிதி சென்று
பாலகன் பாதம் பணிந்திடுவோம் (2)
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் – நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்

EN YESUVE EN DEIVAME CHRISTMAS LYRICS

என் இயேசுவே என் தெய்வமே
என் வாழ்வில் வாழ்வாய் மலர்ந்தவரே (2)
உன் சக்தி ஆற்றல் என்னோடு வாழும்
என் செயல்கள் எல்லாம் உன் பெயரைச் சொல்லும் (2)
என் இயேசுவே என் தெய்வமே
என் இதயப் பேழையில் பிறந்தவரே
உன் ஸ்பரிசம் என் அங்கம் எங்கெங்கும் உண்டு
உடல் தூய்மை போற்றியே என்றென்றும் வாழ்வேன்
அறிவாற்றல் ஒளியேற்றும் தீபம் நீ வாழும்
என் நினைவினிலே இருள் சூழ ஒருபோதும் துணியேன்
என் இதயமே பேராலயம் திருப்பீடத்தில் அருள் ஓவியம்
மலராய் மணமாய் நான் மாறுவேன் – 2
நீ சென்ற காலடித் தடயங்கள் தேடும்
குழந்தையாய் தொடர்வேன் உனை தினமும் வேண்டி
மண்மேடோ மலைமுகடோ முட்புதரோ எதுவோ
உனைத்தொடர்ந்து நான் வருவேன் தடைகளைத் தாண்டி
அன்பாலே வாழ்வை அர்ச்சனை செய்வேன்
நேயத்தின் செயலால் உன் விருந்தில் அமர்வேன்
உறவே உயிரே உனைப் பிரிய மாட்டேன் – 2

VAKKU PANNINAVAR MARIDAR LYRICS

வாக்குப்பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர்
உண்மையுள்ளவர்
காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத்தத்தங்கள்
உன் வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
அவர் மனிதன் அல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்குமறப்பதில்லையே
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

YUDHAVIN RAJA SINGAM NEERE LYRICS

யூதாவின் இராஜசிங்கம் நீரே
அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே
வல்லமை கனம் ஞானம் மகிமையையும்
துதியையும் பெற்றுக் கொள்ள பாத்திரர் நீரே
பாவமானீரே என்னை நீதியாக்கிட
சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட
காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட
நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சி அடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும் புல்வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே
பகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்
தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே
கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே
என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்
உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி
குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே
யெஹோவா யீரே நீர் எந்தன் எல்ஷடாய்
போதுமானவரிலும் மிகவும் அதிகமானவர்

EN AATHMAVUM SARERAMUM LYRICS

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்
அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

PUVIEL PUTHUMAI PURIBAVARE LYRICS

புவியில் புதுமை புரிபவரே
புனித யூதா ததேயுசே
புவியோர் எம்மைப் புரந்திடுவோர்
புதிய வாழ்வும் தந்திடுவீர்.
திருமறை போற்றும் போதகரே
திக்கற்றோரின் காவலரே
இறைவன் இயேசுவின் சாயலையே
நெஞ்சில் தரித்துக் கொண்டவரே.
இயேசுவின் அரசை வளர்த்திடவே
எழுந்த பெரும் அப்போஸ்தலரே
யேசுவின் நெருங்கிய உறவினரே
எம்குறை தீர்த்தருள் புரிவீரே.