Sunday, July 1, 2018

NEERE ELLAM NEERE ELLAM LYRICS


நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
1. நீரே எல்லாம் இயேசுவே -2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே -2
2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே -2
3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே -2

NEERE ENNAI KAIVIDAADHAVAR LYRICS


நீரே என்னைக் கைவிடாதவர்
விட்டு விலகிடாதவர்
வழியில் காத்து நிற்பவர்
நீரே என்னை முற்றும் காத்தவர்
என்னில் அன்பு கூர்ந்தவர்
என்றும் மாறிடாதவர் 
உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
உலகை என்றும் ஆளுமே
எம்மை காக்க வல்லதே
உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
கவலை மறையச் செய்ததே
என்னை வாழவைத்ததே – நீரே
எனக்காய் பாவம் சுமந்தீர்
துயரம் அடைந்தீர்
முழுதும் சகித்தீர்
நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
என்னை அளவில்லா அன்பு செய்தீர்
கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
என் கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன் 
அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
ஜீவனைத் தந்தீர்
உம்மை துதித்திடுவோம் (2)
நீதி என்றும் நிலைக்கும்
உந்தன் நாமம் மேன்மையாகும்
நீரோ என்னை அழைத்த
இந்த அழைப்பும் மேன்மையாகும்
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே

NEETHIMAN NAN NEETHIMAN NAN LYRICS


நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின்


1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன்


2. காலயிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்துநரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்


3. ஆண்டவனே என் கற்பாறை
அவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்


4. ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன்
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன்


5. எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புது எண்ணை அபிஷேகம் என்தலை மேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்


6. கர்த்தரின் கண்கள் என் மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும் போது செவிசாய்த்து
மாபெரும் விடுதலை தருகின்றார்

NAAN YESUVIN PILLAI BAYAME LYRICS


நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே


1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்


2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்


3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்
எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன்


4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்


5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்


6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

KARTHARE NALLAVAR THUTHIPAADALGAL LYRICS

கர்த்தரே நல்லவர்
துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
எந்நாளுமே அவர் நல்லவர்
அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்
நல்லவர் என்றுமே
என்றும் நல்லவரே 
பள்ளத்தாக்கின் வழி நடந்து
எங்கும் இருளாய் தோன்றினால்
திகையாதே நடத்துவாரே
தீங்கு அனுகாமல் காத்திடுவார்
விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
என்றுரைத்தார்
இயேசு மாறிடார் 
பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
எனக்காக ஜீவன் ஈந்தார்
அவர் அன்பை என்றும் பாடி
அவர் கிருபையை சொல்லிட
அபிஷேகம் தந்து என்னை
பெலப்படுத்தி என்னை பாட செய்தார் 
உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
உணராமற்போனாலும்
விசுவாச கண்களினால்
உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்

KAVARCHI NAYAGANE KANGALIL LYRICS


கவர்ச்சி நாயகனே
கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே
கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
1. என்னை இழுத்துக்கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
2. திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே
4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

ITHU DEVANUDAIYA PRAMANAM LYRICS


இது தேவனுடைய பிரமாணம்
உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்
1. தள்ளப்பட்ட கல்லே
மூலைக்கு தலைக்கல்லாம்
தள்ளப்பட்ட நீயும்
மூலைக்கு தலைக்கல்லே
இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்
2. பாவங்களை தேவனிடம்
அறிக்கை செய்துவிட்டால்
இயேசு கிறிஸ்து இரத்தம்
உன்னை கழுவி சுத்தமாக்கும்
இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்
3. எந்த இடம் ஆனாலும்
கர்த்தரை நீ உயர்த்தினால்
அந்த இடத்தில் வந்து
உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்
இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்
4. அள்ளி தூவும் விதையை
நீ கண்ணீரோடு விதைத்தால்
அறுவடை நாள் வந்துவிடும்
நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்
இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்
5. கர்த்தர் மேலே உந்தன்
பாரத்தை வைத்தால்
நீதிமானின் காலை
தள்ளாட விடமாட்டார்
இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்
6. நீ முழு இருதயத்தோடு
தேவனை விசுவாசி
தேவமகிமை உந்தன்
வாழ்வை வந்து மூடும்
இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்