Thursday, April 25, 2019

YAARUM ILLAI RAJAH TAMIL LYRICS


யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா 
உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
நீர் தொட்டால் சுகம் உண்டு
உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
உம்மை போல் யாருண்டு 
யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா

YESAPPA UNGA NAMATHIL INNUM TAMIL LYRICS


இயேசப்பா உங்க நாமத்தில்
இன்றும் அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது – 2
உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை
துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் -2
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவமகிமையை கண்டிடுவோம்
மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்
சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியை துரத்திடுவோம்

VATRATHA NEERUTRU TAMIL LYRICS


வற்றாத நீருற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள்
4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்
5. கோடை காலத்தில் வறட்சி காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

VAKKU PANNINAVAR MARIDAR TAMIL LYRICS


வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

UMMAI AARATHIKA KOODIVANDOM TAMIL LYRICS


உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு
ஆராதனை (6) உமக்குத்தானே
1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்
2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை
மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே
3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை
உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

THANTHAIYUM THAYUM AANA TAMIL LYRICS


தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்
எங்களுக்கு தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்
அனுதின உணவை எங்களுக்கு என்றும்
உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்
உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம்

PIRANTHAR PIRANTHAR BALAN TAMIL LYRICS


பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே (2)
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (2)
– பிறந்தார் பிறந்தார்
பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே
– பிறந்தார் பிறந்தார்
உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்
– பிறந்தார் பிறந்தார்

Wednesday, April 24, 2019

PARALOGA THANTHAIYE PARALOGA TAMIL LYRICS


பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே
பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே 
பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)
ஒரு மனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)
அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது 
இம்மைக்கும் மறுமைக்கும்
பரம தகப்பன் நீர் தானே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)
பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே 
தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனை போல் சுமந்திடுவார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)
புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை 
நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

PAAREER GETHSAMANAE POONGAAVILEN TAMIL LYRICS

Parir Gethsemane
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்
2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்
3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்
4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்
5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்
6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்
Paareer gethsamanae poongaavilen naesaraiyae
Paaviyenakkaai vaendudhal
Seidhidum saththam dhoniththidudhae
1. Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae – Paareer
2. Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae – Paareer
3. Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae- Paareer
4. Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae – Paareer
5. Anbin arul mozhiyaal aarudhal alippavar
Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar – Paareer
6. Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen – Paareer

ANDAVAR ENAKAI YAAVAIYUM TAMIL LYRICS


ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா
1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

AGILAMENGUM POATRUM TAMIL LYRICS

Agilamengum Poatrum
அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே 
ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே 
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே 
கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே 
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே 
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே