ஏசுவையே துதி செய் கீர்த்தனை
ஏசுவையே துதி செய் , நீ மனமே
சரணங்கள்
மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து
அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன
எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்,
நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.
2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .
3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல் , சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே என்னோடிரும் .
4.நீர் கூட நின்று அருள் புரியும் ;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;
சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?
நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .
6.நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
1.ஆ கர்த்தாவே , தாழ்மையாக
திருப்பாதத்ண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மை தேடி
தரிசிக்கவே வந்தேன்.
2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே ,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே ;
உம்மை தேடி
தரிசிக்கவே வந்தேன் .
3.என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்
உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்
1.அநாதியான கர்த்தரே ,
தெய்வீக ஆசனத்திலே
வானக்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.
2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாயப் பணிவார் ,
நீர் தூய தூயர் எண்ணுவார் .
அப்படியானால் , தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம் ?
எவ்விதமாய் ஆராதிப்போம் ?
நீரோ உயர்ந்த வானத்தில் ,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் , வணங்குவோம் ,
மா பயத்தோடு சேருவோம்
1.பாதை காட்டும் மா யெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன் ,
இவ்வுலோகம் காடு தான்,
வானாகரம்
தந்து என்னைப் போஷியும்.
2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன் ;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்.
வழியில் நடத்துமேன் ;
வல்ல மீட்பர் !
என்னைத் தாங்கும், இயேசுவே.
3.சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றித் தந்து ,
என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன் .
1.கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான் ;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை .
2.அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்கது .
3.உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவர்க்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக ;
விசாரிப்பார் ,அமர்ந்திரு ,
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர் .
4.சந்தோஷிப்பிக்கிறதான
நாள் எதென்றவர் அறிவார் ;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார் ,
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும் .
4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே ;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரிய னென்றும் எண்ணாதே ;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது .
5.கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னணாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?
தாழ்த்துவார் ,உயர்த்துவார்
அடிக்கிறார் ,அணைக்கிறார் .
7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக ;
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் ; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்
3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.
4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.
எழுதியவர்
பிலிப்ஸ் ப்ருக்ஸ்