Friday, April 25, 2025

Nanri Nanri Nanri நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

 நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே

Nanri Sollvom Yesuvukku நன்றி சொல்வோம் இயேசுவுக்கு

 நன்றி சொல்வோம் இயேசுவுக்கு

தமிழ் பண்ணிசைப்போம் இயேசுவுக்கு
நம்மை அவர் கண்ணோக்கினார் உயிரைத் தந்து மீட்டார்
எந்நாளுமே நம்மை அவர் அரணாய் நின்று காப்பார்

இயேசு என்னும் நாமமதைச் சொல்லச் சொல்ல
உள்ளம் புத்துணர்ச்சியாலே துள்ளத் துள்ள
உலகம் தரும் இடர்கள் எல்லாம்
ஒருநொடிப் பொழுதில் மாறிவிட
ஆடிப்பாடி நாளும் ஆண்டவரைப் போற்றுவோமே
அக்களிப்போம் நாளும் இன்னிசைகள் மீட்டுவோமே
என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா
தொல்லையில் தோல்வியில்லை அல்லேலு அலேலூயா

பாரவோனின் தண்டனைக்குத் தப்பிவித்தார்
நம்மை பரிசுத்த பூமியெங்கும் வாழவைத்தார்
மன்னா என்னும் உணவைத் தந்து
பசியையும் தாகத்தையும் போக்கிவைத்தார்
கர்த்தரவர் இன்றும் நம்மிடையே வாழுகின்றார்
அன்பு வழி வாழ நாளும் நம்மைத் தூண்டுகின்றார்
என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா
தொல்லையில்லை தோல்வியில்லை அல்லேலு அலேலூயா

Nee Pogum Paathai நீ போகும் பாதை எல்லாம்

 நீ போகும் பாதை எல்லாம் – உன் நேசர் கூட வருவார்

நீ காணும் தேசமெல்லாம் – உன் இயேசு தந்திடுவார்

தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க – நீங்க
தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – நீ போகும்

கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட
கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும்
நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு
நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும்
உன்னோட கண்ணீரை மாற்றுவார்
நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார்

கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு
உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு
உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே – ஒரு
வார்த்தை அவர் சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே

வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும்
வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய் – மாறும்
உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார்
வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார் – உன்னை
வற்றாத நீருற்றாய் மாற்றுவார்

Nee Thedum Nimathiyai Enn Yesu நீ தேடும் நிம்மதியை என் இயேசு

 நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார்

நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார்
நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை – காத்திடுவார்
நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே – இதை
நீயும் இன்று மறந்திட்டாலே – நிம்மதி வாழ்வினில் இல்லையே

வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம்
வேதனை வியாகுலம் தீராத சோதனை
அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே – நிற்கின்றார்
அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார்

கலங்காதே என் நண்பனே கண்ணீரை சிந்தாதே
உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே
உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே
நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு

உலகத்தின் மேன்மை செல்வம் – ஒன்றுக்கும் உதவாது
உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது
இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார்
நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்

Neer En Belanum Enn Kedagamam நீர் என் பெலனும் என் கேடகமாம்

 நீர் என் பெலனும் என் கேடகமாம்

உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா

Neer Illamal Vallvillai நீர் இல்லாமல் வாழ்வில்லை

 நீர் இல்லாமல் வாழ்வில்லை

உம்மை நினைக்காத வாழ்வில்லை
அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே

உம்மைப்போல மாறிவிட ஆசை
உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே
என்ன நான் செய்வேன் எதை
எனது அருமை இயேசுவே

உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன்
ஒளியான மெய் தேவன் நீரே
உம்மை மறந்தே போனாள்
இருளில் பங்காடைவேனே

ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும்
ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே
அழியா உன் வழி பற்றி
அன்புடன் நானும் நடந்திடுவேன்

Neerae En Theivamae நீரே என் தெய்வமே! நீரே!

 நீரே என் தெய்வமே! நீரே! என் தஞ்சமே!

நீரின்றி நானில்லை என் இயேசுவே

எப்படி நான் பாடிடுவேன்!
என்ன சொல்லி துதித்திடுவேன்
நீரின்றி நானில்லை என் இயேசுவே

என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரல்லவா
என் பேர் சொல்ல வைத்தவர் நீரல்லவா – இந்த
உலகத்தில் உன் பேரை சொல்லவா என்னை
அதற்காகத்தான் அழைத்தீரல்லவா

கள்ளன் என்றென்னைத் தள்ளாத என் தேவனே
கள்ளம் இல்லாத மணவாட்டி மணவாளனே
என்று வருவீரோ உம்மைக்காண ஏங்குகிறேன்
இந்த உலகத்தில் உமக்காக வாழுகிறேன்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நினையாத நேரத்தில் வருகின்றவர்
ஆயத்தம் உள்ளோரை அழைக்கின்றவர் – இந்த
அகிலத்தை இரட்சிக்கும் தேவனவர்

Neerae Vazhi Neerae நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

 நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா
உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா

கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஓர் சிற்பம் அல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம் நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வம் அல்ல பார்ப்பதெல்லாம் தெய்வம் அல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே உம்மாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

Neerillaa Aaraadhanai நீரில்லா ஆராதனை ஆராதனை

 நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல

நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல

ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்

வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்