Saturday, September 1, 2018

ENNAI ANANTHA THAILATHAL LYRICS


என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)
1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
Ennai Anantha Thailathal
Abishaegam Seithedum Aaviyanavarae – (4)
Aaviyanavarae Anbin Aaviyanavarae – (4)
1. Varanda Nilangal Vayalveli
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai
2. Ularntha Yelumpugal
Uyirodezhumpattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

SEER YESU NATHANUKKU JAYAMANGALAM LYRICS


சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

EKKALA SATHAM VAANIL DHONITHIDAVE LYRICS


பல்லவி
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
சரணங்கள்
1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள 
2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள 
3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

UNTHAN NAAMAM MENMAI POL LYRICS


உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே
உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே

POTRI PAADUGINDRAEN NAAN DEVA LYRICS

போற்றி பாடுகின்றேன் நான் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே
மகிமை செலுத்துகிறேன் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே
Potri Paadugindraen Naan… Deva
Undhan Naamathi… Deva
Undhan Naamamae Uyarndha Naamamae
Magimai Seluthugiraen Deva
Undhan Naamathai Deva
Undhan Naamamae Uyarndha Naamamae

PUVI AALUM MANNAVAN PUL MEDAIYIL LYRICS


புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்
வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்
1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி
2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

PERUGA PANUVEN ENRU VAAKURAITHAVAR LYRICS


பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்
ஆபிரகாமை பெருகச் செய்தவர்
உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்
நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
1. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்
2. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருகச் செய்திடுவார்
3. மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

NANDRI SOLLI PADUVEN NATHAN LYRICS

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே
1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தாரே
கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே
2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே
3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க
கவலையில்லை என் வாழ்விலே
4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

VANANDIRA VALLVU ATHU VASANTHAMAGUM LYRICS


வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2
1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2
3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே

AABIRAGAAMAI AASIRVATHITHA AANDAVA LYRICS


ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!
2. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)
3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே

KARTHAR PERIYAVAR THUTHIKU PAATHIRAR LYRICS


கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
கை விடார் – 4
1.அனுதினம் போஷித்து நடத்துவார்
அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2
2.கரம்பிடித்து நம்மை நடத்துவார்
கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2
3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2
4. நீதீயின் பாதையில் நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2

ARATHANAI THUTHI ARATHANAI LYRICS


ஆராதனை துதி ஆராதனை
ஆயுள் முழுவதும் ஆராதனை – 2
விடுதலை நாயகனே ஆராதனை
வெற்றி தருபவரே ஆராதனை – 2
1. கோலியாத்தை உந்தன் நாமத்தில்
முறியடிப்போம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
2. எரிகோ கோட்டை உந்தன் நாமத்தில்
தகர்த்திடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
3. சிறைக் கதவுகள் உந்தன் நாமத்தில்
திறந்தது அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
4. பெலவானை உந்தன் நாமத்தில்
முந்தி கட்டிடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

JEEVAN THANTHU ANBU KURNTHU LYRICS


ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
இயேசுவே நன்றி – 4
1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
உம்பிள்ளையாய் மாற்றினீர்
உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2
2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
தேற்றி நடத்துகிறீர் – 2
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
எனக்காக யாவையும் செய்வீர் – 2
3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்
ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2
4 . ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பி நடத்துகிறீர் – 2
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கு மாறா வல்ல நேசரே – 2

KIRUBAIYEINAL IRATCHITHIRE YESSIAH LYRICS


கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
1. பாவியான என்னை மீட்ட கிருபை
பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2
2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2
3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
உருவாக்கி உயர்த்தின கிருபை – 2
4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2
5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2

ORUNDRUM ILLAI NAANORUNDRUM ILLAI LYRICS

Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்


ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது
1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2
2. ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2
3. உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2

YESUVE UMMAI POLA NALLA LYRICS


இயேசுவே உம்மைப் போல
நல்ல தெய்வம் இல்லையே
இயேசுவே உம்மைப் போல
வல்ல தெய்வம் இல்லையே – 2
1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை
நீர்தான் என் துணையாளரே
நீர்தான் என் மணவாளரே – 2
2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை
நீர்தான் என் நல்மேய்ப்பரே
நீர்தான் என் எஜமானரே – 2
3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை
நீர்தான் என் நல்நேசரே
நீர்தான் என் நல்நண்பரே – 2

NIRAMBI VALIYUM PATHIRAMAAI LYRICS


நிரம்பி வழியும் பாத்திரமாய்
என்னை மாற்றும் – 4
நிரப்பும் தேவா உமது ஆவியால்
நிரப்பும் தேவா உமது வல்லமையால்
1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
தாகத்தை நீரே தீர்த்திடும் – 2
2. மகிமையால் என்னை நிரப்பிடும்
மறுரூபமாக்கி நடத்திடும் – 2
3. அபிஷேகத்தால் நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2
4. வரங்களை நீர் தந்திடும்
வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2

MANAVALAN YESU VARAPOGIRAR LYRICS


மணவாளன் இயேசு வரப்போகிறார்
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படு , ஆயத்தப்படு
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2
1. இனி காலம் செல்லாது
இனியும் தாமதம் ஏன்
மெய்யாக இயேசு வரப்போகிறார்
மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2
2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
அவரோடு சென்றிடலாம்
ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
மறுரூபமாகிடுவோம் – 2
3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
சபையிலே தான் தொடங்கும்
பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
பரலோகம் சென்றிடலாம் – 2

ULAGATHIN THOTRATHIN MUNBU ENNAI LYRICS


உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்
தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்
வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து
சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்
நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை 
சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே – 2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே – 2 
வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே
இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2
சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே
உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை 
சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } -2
Ulagathin Thotrathin Munbu Ennai Kandeer
Thaayin Karuvinullae Ennai Ninaitheer
Valargindra Prayathil Koodave Iruntheer
Sinthai Muluvathilum Nirainthu Vantheer
Neerindri Yaarum Illai
Ummai Ninaikkathe Naale Illai
Swasikum Kaatrilum Neerae
Ovvorum Moochilum Neerae } – 2
En Aasai Ellam Neerae
En Aaruthalum Neerae } – 2
Vaalgindra Vaalkayin Arthamum Neerae
Ithayathin Yaekkathai Theerpavar Neerae } – 2
Saathipathellam Um Kirubayinaale
Uyarvirkum Vaalvirkum Kaaranarae
Neer Indri Yaarumillai
Ummai Unarathe Naalae Illai
Swasikum Kaatrilum Neerae
Ovvorum Moochilum Neerae } – 2
En Aasai Ellam Neerae
En Aaruthalum Neerae } – 2
Swasikum Kaatrilum Neerae
Ovvorum Moochilum Neerae } – 2
En Aasai Ellam Neerae
En Aaruthalum Neerae } – 2

ENNAI NINAITHAVAR AASIRVATHIPPAR LYRICS


என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்
என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்
ஆ ஆ ஆ
அல்லேலூயா
ஓ ஓ ஓ
ஓசன்னா
ஆபிரகாமை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்
நட்சத்திரங்களை போல்
பெருகவே செய்வார்
அன்னாளை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்
சாமுவேலை போல
பெரியவனாக்குவார்

MUZHU IDHAYATHODU UMMAI THUTHIPPEN LYRICS


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2 
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே – 2 
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன் 
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே 
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே 
2. நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை—2
ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே 
3. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்—2
எதிரியின் கை ஓங்க விடாதேயும்—2 
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே 
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன் – 2 – முழு இதயத்தோடு 
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athichayangal Ellaam Eduthuraippaen
Athisayamaanavarae – 2 
Unnathamaanavarae En Uraividam Neer Thaanae – 2
Uyarththukiraen
Vaazhthukiraen
Vanangkukiraen
Ummai Poatrukiraen 
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae 
1. Otukkappatuvoarkku Adaikkalamae
Nerukkadi Vaelaiyil Pukalidamae – 2
Nerukkadi Vaelaiyil Pukalidamae – 2
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae 
2. Naadi Thaedi Varum Manitharkalai
Thakappan Kaividuvathae Illai – 2
Oru Poathum Kaividuvathae Illai – 2 
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae 
3. Ezhuntharulum En Aandavarae
Ethiri Kai Oanga Vidaathaeyum – 2
Ethiriyin Kai Oanga Vidaathaeyum – 2 
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae 
Unnathamaanavarae En Uraividam Neer Thaanae – 2 
Uyarththukiraen
Vaazhththukiraen
Vanangukiraen
Ummai Potrukiraen – 2 – Muzhu Ithayaththodu

AABATHU NAALIL KARTHAR EN JEBAM LYRICS


ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
1. என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
2. எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
3. இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே – என்
எப்படியும் நிறைவேற்றுவீர்
4. வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே(இயேசு)
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
5. திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்

ENNI ENNI PAAR ENNI PAAR LYRICS


எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2
1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி
2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2
3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2
4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2

AATHUMAVE NANDRI SOLLU MULU LYRICS


ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்
கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்
எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே
தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்
அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

UNNATHA MAANAVARAE ENN URAIVIDAM LYRICS


உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்
நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே

VEPPAMIGU NAATKALIL ATCHAMILLAIYE LYRICS


வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்
கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் – உம்
இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்
இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே – 2
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – 2
குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்

MARAKKAPPADUVATHILLAI NEE ENNAL LYRICS


மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2
கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே
உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2
மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2
ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

VAAIKAALGAL ORATHILE NADAPPATTA LYRICS


வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2
கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்
நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்
துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

OTTATHAI ODI MUDIKKANUM LYRICS


ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே
ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2
கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

UNNATHAR NEERE MAATCHIMAI NIRAINDHAVARE LYRICS


உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே
1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி
2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2
வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி