Monday, January 28, 2019

MALAI MEL YERI VANTHEN LYRICS


மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்

1. காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

2. உமது வார்த்தைகள் உணவாண் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்திறயும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே

SENAIGALAI ELUMBIDUVOM DESATHAI LYRICS


சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிவோம் – புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
1.பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
பட்டணங்கள், கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா
2. உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே..
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகளே..
4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு
5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு
புறப்பட்டோம் புறப்பட்டோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் (2)
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் (2)

POVAS POVAS PORVAIYAL ENNAI LYRICS


போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே

THADUMAARUM KAALGAL KANDEN LYRICS


தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை 
1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டே
கண்கள் குளமாகிப்போனதையா!!!!
2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே