Tuesday, November 12, 2019

THAAYKU ANBU VATRIPOGUMA



தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா 
தனது பிள்ளை அவள் மறப்பாளோ 
தாய் மறந்தாலும் நான் மறவேனே 
தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே 

குன்று கூட அசைந்து போகலாம் 
குகைகள் கூட பெயர்ந்து போகலாம் 
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே 
அசைவதில்லை பெயர்வதில்லையே 

தீ நடுவே நீ நடந்தாலும் 
ஆழ்கடலை தான் கடந்தாலும் 
தீமை ஏதும் நிகழ்வதில்லையே 
தீதின்றியே காத்திடுவேன் நான் 

கழுகின் சிறகில் குஞ்சை அமர்த்தியே 
கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே 
கழுகை போல நான் உனைத்தானே 

காலமெல்லாம் சுமந்து செல்வேனே 

No comments: