Sunday, September 2, 2018

SANTHOSHA VINNOLIYE YESU SAANTHA LYRICS


சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்
இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்
பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே
ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவன் சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே
ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்
எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரே

YESU RAJANIN THIRUVADIKKU SARANAM LYRICS


இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே
2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே
3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்
4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
5. அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்

JEEVIKIRAR YESU JEEVIKIRAR LYRICS


ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)
1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார்
2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார்

VAAKKURAITHTHAVARE NEER UNMAIULLAVARE LYRICS

Vaakuraithavarae 
வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்
காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்
பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே
நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்
Vaakkuraiththavarae
Neer Unmaiullavarae
Neer Vaakkumaaradhavar (2) x(2) 
Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar O… 
Poi Sollavo
Manam Maaravo
Neer Manidhan Allavae (2) x(2)
Neer Naettrum Indrum Endrum Maradhavar
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar x(2) 
High : Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam Manidhargal Maaralaam,
Neero Nettrum Indrum Endrum Maaradhavar
Vaakkuraiththavarae Neer UnmaiullavaraeNeer Vaakkumaaradhavar

INTHA MATTUM KATHA EBENESARE LYRICS


1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)
4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

PIRANTHAR OR PALAGAN PADAIPIN LYRICS


1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.
2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்
3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே
4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே
5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

MEI BHAKATHARA NEER VILITHELUMBUM LYRICS


1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்
2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே
3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்
4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்
5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்
6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்