Wednesday, March 21, 2018

PARISUTHAMANA PARANE ENNAI

பரிசுத்தமான பரமனே என்னை 
பாத்திரன் ஆக்கிடுமே 
பரம தரிசனம் தாருமே தேவா 
பரிசுத்த மாக்கிடுமே

கர்த்தருக்கு பரிசுத்தம் 
கருத்துடன் நெற்றியிலே 
பதித்திட உதவி செய்யும் 
பரமனே சுத்தமாக்கும்

அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண 
அடிமைக்கு உதவி செய்யும் 
இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு 
இரங்கிடும் இந்நேரமே

பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக 
காத்திட உதவி செய்யும் 
நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த 
பரிசுத்தம் தந்திடுமே

தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு 
தூயனே துணை செய்வீர் 
வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று 

உம் ஆவி தந்திடுமே

Saturday, March 17, 2018

ANBINAL PADAITHEN TAMIL LYRICS

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்
படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
பாவத்தில் மாண்டாய்சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டுஇயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?

NAAM ARADHIKUM DEVAN TAMIL LYRICS

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே – 2

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

NAAN AARATHIKUM YESU TAMIL LYRICS

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே

அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே

3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே

Tuesday, March 6, 2018

THAAGAM ULLAVAN MEL TAMIL LYRICS


தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்
ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்
1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே
2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே
3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்
4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும்
5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்
6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்
வயல்வெளி அடர்ந்த காடாகனும்
7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே
8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

Sunday, March 4, 2018

PARISUTHAM PERA UMMANDAI VANDHU LYRICS

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மாபாவி நான் – எனை
ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
கிருபையால் பெலப்படுத்தும் 
இதயக்கதவை திறந்தேனே
என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கி
காத்துக்கொள்ளும் இறைவா 
பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
இணைந்து ஒலிக்குதே – ஆனால்
மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
என் செவியை திறந்திடுமே 
என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
தவறி விடுவேனே – ஆனால்
உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
ஒருபோதும் தவறிடேனே

EN RAKSHAKA NEER ENNILE LYRICS

என் ரக்ஷகா, நீர் என்னிலே  
மென்மேலும் விளங்கும்  
பொல்லாத சிந்தை நீங்கவே  
சகாயம் புரியும் 
என் பலவீனம் தாங்குவீர்  
மா வல்ல் கரத்தால்  
சாவிருள் யாவும் நீக்குவீர்  
மெய் ஜீவன் ஜோதியால் 
துராசாபாசம் நீங்கிடும்  
உந்தன் பிரகாசத்தால்  
சுத்தாங்க குணம் பிறக்கும்  
நல்லாவி அருளால் 
மாசற்ற திவ்விய சாயலை  
உண்டாக்கியருளும்  
என்னில் தெய்வீக மகிமை  
மென்மேலும் காண்பியும் 
சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்  
ஒப்பற்ற பலத்தால்  
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்  
பேரன்பின் ஸ்வாலையால் 
நீர் பெருக நான் சிறுக  
நீர் நற்கிரியை செய்திடும்  
மெய் பக்தியில் நான் வளர  
கடாட்சித்தருளும்

PARISUTHAME PARAN YESU LYRICS

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் 
பக்தர்கள் தேடும் தேவாலயம் 
பரிசுத்தமே

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று 
நிற்கக் கூடியவன் யார் 
மாசற்ற செயல் தூய உள்ளம் 
உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே 
தெய்வத்தின் திருசித்தம் 
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் 
தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும் 
பரலோக கூட்டத்தோடு 
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி 

எந்நாளும் பாடுவேன்

SUTHIGARIYAYO DHURGUNAM NEEGA LYRICS

சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் 
சுத்திகரியாயோ

மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே 
பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே!

பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே 
உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே

அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே 
சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே!

சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில்  தினம் தேறவே 
புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே

தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா 

பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய்