Tuesday, November 19, 2019

YESUVAE EN YESUVAE

இயேசுவே என் இயேசுவே
நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
நன்றி இயேசுவே -4

பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
உம் பெலன் போதுமே -4

பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
உம் அன்பு போதுமே
உம் துணை போதுமே

UN NENJILAE UNDANA VISARANKALAI NEE

1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி
விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.

2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது
வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.

3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ
திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு
நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.

4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.