Tuesday, November 12, 2019

YAARIDAM SELVOM IRAIVA


யாரிடம் செல்வோம் இறைவா 
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் 
உம்மிடம் அன்றோ உள்ளன 
இறைவா......இறைவா......

அலை மோதும் உலகினிலே  
ஆறுதல் நீ  தரவேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ 
ஆதரித்தே அரவணைப்பாய்  -- (யாரிடம்...)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதைய்யா (2)
குணமதிலே மாறாட்டம் 
குவலயம் தான் இணைவதெப்போ  -- (யாரிடம்...)

வேரறுந்த மரங்களிலே 
விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு 

உனது மனம் இரங்காதோ  -- (யாரிடம்...)

No comments: