Tuesday, November 12, 2019

THANTHEN THANTHEN IRAIVA



தந்தேன் தந்தேன் இறைவா
என்னை தந்தேன் தந்தேன் தலைவா 
உள்ளது எல்லாம் உமக்காக 
உயர் பலியானாய் எனக்காக 
அதில் எம்மையும் இணைத்திடவா 

இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம் 
அங்கு இருக்கும் வளங்கள் 
உந்தன் அருள் கோலம் 
கண்டேன் கண்டேன் உந்தன் கருணை உள்ளம் 
தினம் வந்தேன் வந்தேன் உந்தன் மலர் பாதம் 
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் - உம் 
பலியாய் என்னையும் மாற்றிடுவாய் 

இதழ்கள் விரிக்கும் நம் மலர் கூட்டம் 
எங்கும் இறைவன் இருப்பதை பறைசாற்றும் 
என்றும் இன்றும் என் இயேசு தேவா 
நீ தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கை பொருளாய் நான் மாறி 

உன் காலடி வந்தே சரணடைந்தேன்

No comments: