இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா
எளிய குரல் தனிலே - என்
இதய துடிப்புக்களோ - என்
இசையின் குரலுக்கு தாளங்களே
காலத்தின் குரல் தனில் தேவா - உன்
காலடி ஓசை கேட்கின்றது
ஆதியும் அந்தமும் ஆகினாய் -- 2
மழலையின் சிரிப்பினில் உன் எழில் வதனம்
மலர்ந்திடும் மண்ணிலே
ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
சிலுவை தியாகம் தொடர்கின்றது
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட -- 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென
இணைவது விடியலின் ஆரம்பம்
No comments:
Post a Comment