Tuesday, November 12, 2019

ISAI ONDRU ISAIKKINDREN



இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா 
எளிய குரல் தனிலே - என் 
இதய துடிப்புக்களோ - என் 
இசையின் குரலுக்கு தாளங்களே 

காலத்தின் குரல் தனில் தேவா - உன் 
காலடி ஓசை கேட்கின்றது 
ஆதியும் அந்தமும் ஆகினாய் -- 2 
மழலையின் சிரிப்பினில் உன் எழில் வதனம் 
மலர்ந்திடும் மண்ணிலே 

ஏழையின் வியர்வையில் இறைவா - உன் 
சிலுவை தியாகம் தொடர்கின்றது 
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட -- 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென 

இணைவது விடியலின் ஆரம்பம் 

No comments: