Sunday, April 15, 2018

VAARUM NAAM ELLARUM LYRICS


வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!
1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்
2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்
3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்
4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்
5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

ENNODU PESUM YESUVE LYRICS


என்னோடு பேசும் இயேசுவே
நீர் வந்து பேசாதிருந்தால்
என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
என் வாழ்க்கை சிதைந்து போகுமே
தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
நான் உந்தன் குழந்தை அல்லவோ
என்னோடு பேசமாட்டீரோ ?
உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
அவைகளோடு பேசினீரே
என்னோடு பேசமாட்டீரோ ?

ENNAI UM KAIYIL LYRICS


என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே
தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்