Monday, August 31, 2015

KIRUBAI PURINTHANAI AAL NEE PARANE

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! --- கிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து --- கிருபை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு --- கிருபை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி --- கிருபை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து --- கிருபை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த --- கிருபை

KIRUBAI VENDUM NAADHA YESUVE LYRICS

கிருபை வேண்டும் நாதா - இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா - இவ்வாராதனையில்

1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது --- கிருபை

2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின --- கிருபை

3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின --- கிருபை

4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின --- கிருபை

5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே --- கிருபை

6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் --- கிருபை

7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட --- கிருபை

8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் --- கிருபை

KIRUBAIYITHE DEVA KIRUBAIYITHE

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே - இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே --- கிருபையிதே

2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே - பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய --- கிருபையிதே

3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் --- கிருபையிதே

4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் --- கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் --- கிருபையிதே

6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை --- கிருபையிதே

KIRUBAIYE UNNAI INNAL VARAIYUM KATHATHU

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த --- கிருபையே

2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் --- கிருபையே

3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் --- கிருபையே

4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே --- கிருபையே

5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே --- கிருபையே

KRISHTHAVA ILLARAME SIRANDHIDA

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே!

அனுபல்லவி

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல --- கிறிஸ்தவ

சரணங்கள்

1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் --- கிறிஸ்தவ

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் --- கிறிஸ்தவ

3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து --- கிறிஸ்தவ

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் --- கிறிஸ்தவ

KRISHTHORE ELLORUM KALIKOORNTHU PAADI

1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

GUNAPADU PAAVI DEVA

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி - இப்போ

அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய் - அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் - பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? - மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் - தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் - மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

4. உன்னை நீ நம்பாதே! - இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே - எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

KUTHUGALAM NIRAINTHA NANNAL

குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்
1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் --- குதூகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே --- குதூகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் --- குதூகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --- குதூகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் --- குதூகலம்

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN ENGAL LYRICS

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

சரணங்கள்
1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் --- கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் - என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் --- கும்பிடு

ITHU SINTHIKKUM KAALAM SEYALPADUM NERAM

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே (2) - நீ

சரணங்கள்

அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ?

பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?

KURUSINIL THONGIYE KURUDHIYUM VADIYA LYRICS

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

சரணங்கள்

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ --- குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க - யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை --- குருசினில்

3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? -- குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே - அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது பார் --- குருசினில்

5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? - நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? --- குருசினில்

paadiye paranai thuthi maname

பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி துதி தினமே - (2)

சரணங்கள்

1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே
தேவனை துதி மனமே --- பாடியே

2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனை துதி மனமே
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனை துதி மனமே --- பாடியே

KOOR AANI DEGAM PAAYA

1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்
பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும் என்றார்.

2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.

3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.

4. நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே,
நானுங் கூர் ஆணியை.

5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.

6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.

KEL JENMITHA RAAYARKE

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3. வாழ்க, சாந்த பிரபுவே!
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி, ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்,
மறு ஜென்மம் அளித்தீர்.

AANIGAL PAINTHA KARANGALAI VIRITHE

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

சரணங்கள்

1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் --- ஆணிகள்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் --- ஆணிகள்

3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் --- ஆணிகள்

4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் --- ஆணிகள்

5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே --- ஆணிகள்

ALLELUJAH AANANTHAME NAAN LYRICS

அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

அனுபல்லவி
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

சரணங்கள்
1. இனி துன்பம் இல்லையே
இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
இன்பம் என்றென்றுமே - அல்லேலூயா

2. தினம் போற்றிப் பாடுவேன்
இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
இணைந்து பாடிடுவேன் - அல்லேலூயா

KOLGATHA MALAIMEL THONDRUTHOR SILUVAI

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை

பல்லவி

அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்
2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது -- அந்தச் சிலுவையை

3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் ! --- அந்தச் சிலுவையை

4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில் --- அந்தச் சிலுவையை

SAGOTHIRAR ORUMITTHU

1. சகோதரர்க ளொருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே
3. எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசீர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே

SATHAM KETTU SITHAM SEYYA ALAIKIRARE

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே --- இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ ஆ ஆ
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 )

1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் --- சத்தம்

2. தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ
தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? --- சத்தம்

3. உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ
உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப்போல கரைந்திடுவோம்
மெழுகைப் போல உருகிடுவோம் --- சத்தம்

4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ
வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் --- சத்தம்

SATHAI NISHKALAMAI SAMIYA MUMMILA

1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் , கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?

2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

6. தாயே தந்தை தமர் , குரு சம்பத்து நட்பெவையும்
நீயே எம் பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண் ,
ஏயே வென்றி கழுமுலகோடெனக் கென்னுரிமை
ஆயேவுன்னை அல்லாலெனக் கார் துணை யாருறவே?

SATHIYA VEDATHAI DHINAM DHIYANI

சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி

உத்தமஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும் --- சத்திய

சரணங்கள்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும் --- சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும் --- சத்திய

3. புலைமேவிய மானிட ரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம் --- சத்திய

4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது --- சத்திய

SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

அனுபல்லவி

எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்

சரணங்கள்

1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்

2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்

5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே

6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்

SINGARA MAALIGAIYIL JEYA GEETHANGAL

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்

SANTHOSAM PONGUTHE

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே --- சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே --- சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் --- சந்தோஷம்

sabaiyin asthibaram

1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்.
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்;
சபைஒன்றே ஒன்றாம்;
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்ய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்.

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்;
உள்ளானவரின் துரோகம்
கிலேசப் படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்,
எம்மட்டும் என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.

4. மேலான வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்,
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்,
இளைப்பாறுவோரோடு
இன்ப இணக்கமும்.
இப்பாக்ய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்.

Sunday, August 30, 2015

nadaka solli thaarum

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே(2)
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்(2)

 இருள் நிறைந்த உலகமிது
துன்பம் என்னை நெருக்குதே(2)
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே(2)

 அடம்பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்(2)
கரம்பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே..(2)

Saturday, August 29, 2015

Yesuvae Um Naamathinaal

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பம் உண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்

மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே

இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பலத்தால் - எங்கள் தேவனே

உன்னைக் கண்டு அழைக்கும்
சத்தத்தை கேட்டாயோ பாவியே
இன்று இயேசுவன்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ - எங்கள் தேவனே

Thikkatra pillaikalukku

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
   தூரத்தில் நின்றுவிடுவீரோ
   பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
   இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
2. கர்த்தாவே எழுந்தருளும்
   கைதூக்கி என்னை நிறுத்தும்
   தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
   தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
3.தாயென்னை மறந்தாலும்
  நீர் என்னை மறப்பதில்லை
  ஏழையின் ஜெபம் கேளும் – 2
  இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

Friday, August 28, 2015

SAMATHANAM OOTHUM YESUKRISTHU

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

சரணங்கள்

1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம்

3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம்

5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம்

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்

SATCHIGAL YESUVIN SATCHIGAL

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்
1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்
எருசலேமில் சாட்சிகள்
யூதேயாவில் சாட்சிகள்
சமாரியாவில் சாட்சிகள்
உலகமெங்கும் சாட்சிகள்
2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் --- எருசலேமில்

3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் --- எருசலேமில்

EN ATHUMA NESA MEIPPARE

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் --- பேசும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையார் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் --- பேசும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்

SAALEMIN RAASA SANGAIYIN RAASA

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் - இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் --- சாலேமின்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? --- சாலேமின்

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே - நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே --- சாலேமின்

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே - இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே --- சாலேமின்

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே - உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே --- சாலேமின்

KOODI MEETPER NAAMATHIL

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் --- ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் --- ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் --- ஆ! இன்ப

CHINNA CHITTU KURUVIYE

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
அழகாக படைச்சது யாரு

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா
ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா - அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே

KANNITHAI MARIYAL VARAVETRAL

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் - இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் - இனி
கனவான்கள் கைவிரியும்

2. தெய்வத்தின் நல் விருப்பம் - என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் - வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் - ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் - இனி
மலர்ந்திடும் அவனியெங்கும்

SAARONIN ROJAVE PALLATHAKKIN LILIYE

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே

சரணங்கள்

1. ஆத்தும நேசரே
உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே
பழுதொன்றும் இல்லையே --- சாரோனின்

2. வருவேன் என்றுரைத்தவர்
சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர்
தாமதம் செய்யாரே --- சாரோனின்

SILUVAI THIRU SILUVAI

சிலுவை திரு சிலுவை
சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து
கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய

1. பரியாசம் பசி தாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
பாவமறியா பரிசுத்தர் இயேசு (2)
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்

2. கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள் முடி பின்னி தலையிலே சூட
நான்கு காயங்கள் போதாதென்று (2)
நடு விலாவையும் பிளந்திட செய்த

3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவ கறைகள் நீக்க
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)
சாபத்தினின்று நீ விடுதலையடைய

4. லோக சிற்றின்ப பாதையை நோடி
மாளும் பாவியை சிலுவையில் தேடி
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து (2)
அன்பினை ஈக்க ஐங்காயமான

NANDRI SOLLIDA VENDUM

நன்றி சொல்லிட வேண்டும்
இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்
நன்மை செய்ததினாலே (2)
நன்றி சொல்லிட வேண்டும்
இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்

உண்மை பேசிட வேண்டும் உயர்வை அடைவதற்கு
உதவி செய்திட வேண்டும் தினம் கஷ்டப்படுபவர்க்கு
அன்பு செலுத்திட வேண்டும் என்றும் அயலவர்க்கு
நன்மை செய்திட வேண்டும் ஏழை எளியவர்க்கு

தூய்மை நீ அடைய வேண்டும் தூய வாழ்விற்கு
தீமை அகற்ற வேண்டும் திருந்தி வாழ்வதற்கு
மாசு நீக்கிட வேண்டும் நல்லவராவதற்கு
நெஞ்சில் இயேசு இல்லையென்றால் வாழ்வு என்னத்திற்கு

DEVA LOGA GAANAME THOOTHAR MEETIYA RAAGAME

தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

SILUVAIYANDAYIL NAMBI VANDHU NIRKAYIL

1. நான் உம்மைப் பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் என துள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

KATTADAM KATTIDUM SIRPIGAL NAAM

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார் --- கட்டடம்

2. கைவினை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் --- கட்டடம்

3. பாவமா மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார் --- கட்டடம்

AALTHA SETRINIL AGAPATTA NAMMAI ANAITHU

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே

பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே
இயேசு ஆகமம் ஆனாரே

கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே
கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே
இயேசு நமக்கென பிறந்தாரே

பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே

SEERESU BAALAN JEYAMANU VELAN

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

அனுபல்லவி

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான --- சீரேசு

சரணங்கள்

1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? --- சீரேசு

2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? --- சீரேசு

3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான --- சீரேசு

4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் --- சீரேசு

SEER YESU NAADHANUKKU JEYAMANGALAM

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்

அனுபல்லவி

பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு --- சீர்

சரணங்கள்

1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு --- சீர்

2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு --- சீர்

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு --- சீர்

SEERTHIRIYEGA VASTHE NAMO NAMO

சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின்
திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ!

அனுபல்லவி

பார்படைத்தாளும் நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! --- சீர்

சரணங்கள்

1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
தாங்கி ஆதரிப்போனே - நமோ நமோ!
சொந்தக் குமாரன் தந்தாய்,
சொல்லரும் நலமீந்தாய்,
எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ --- சீர்

2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ!
எங்கும் நின் அரசேற,
எவரும் நின் புகழ்கூற,
துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ --- சீர்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட
பலமளித் தெமைக்காவா, நமோ நமோ!
கரிசித்துத்தா நற்புத்தி,
கபடற்ற மனசுத்தி,
திருமொழி பற்றும்பக்தி, நமோ நமோ நமோ --- சீர்

SUTHA AAVI YENNIL THANGUM NAANUM SUTHAN AAGAVE

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.

3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

SUNDHARA PARAMA DEVA MAINTHAN YESU KRISTHUVUKKU

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி

அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி
சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி --- சுந்தர

சரணங்கள்

1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் - பவத்துயர்
போடுங்கள் - ஜெயத்தைக் கொண்
டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் --- சுந்தர

2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட - அவர் பதம்
தேடிட - வெகு திரள்
கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் --- சுந்தர

3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து - வாழ, தீயோன்
பயந்து - தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் --- சுந்தர

SUYA ATHIKAARAA SUNTHARAKKUMARAA

சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான --- சுய

சரணங்கள்

1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய

2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய

3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய

4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய

SER IYYA ELIYEN SEI PAVAVINAI

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

சரணங்கள்

1. பார், ஐயா, உன் பதமே கதி; - ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, - எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் - பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? - எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, - உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே - எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் - தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; - எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், - அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; - எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த - யேசு
தேவனே, கருணாகரனே - எனைச்

SETRILIRUNTHU THOOKINAR KANMALAI

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்கையை மாற்றி தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே

அவர் எந்தன் கன்மலை (2)
அவர் எந்தன் கன்மலையானார்

SOLLARUM MEIGHANARE MENMAIPRABUVE

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே - உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே - உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே - உரை --- சொல்

சரணங்கள்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி - மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே - அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே - உரை --- சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி - அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா - ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா - உரை --- சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே - உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே - பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே - உரை --- சொல்

jaganaatha gurubaranaatha thiru

ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!

அனுபல்லவி

திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! --- ஜகநாதா

சரணங்கள்

1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ? --- ஜகநாதா

2. எளிய கோலம் தரித்தே இங் கவதிரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே,
ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு வழி காட்டிடப் புரிந்தாயே --- ஜகநாதா

3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே --- ஜகநாதா

4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரபரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே --- ஜகநாதா

5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே --- ஜகநாதா

6. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே --- ஜகநாதா

jeevanulla devane vaarum jeeva

1. ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும்

இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

2. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ

3. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர்

4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

5. நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே
மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ?

Thursday, August 27, 2015

JEEVIKKIRAR YESU JEEVIKKIRAR

1. ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

JEBA SINTHAI ENIL THAARUM DEVA

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா - என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா --- ஜெப

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச - உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச - பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச --- ஜெப

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் - என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் - நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் --- ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய - தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய - நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய --- ஜெப

JEBATHAI KETKUM YENGAL DEVA

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்

3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்

4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

jothi thondrum oor desamundu

1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் - இன்பராய்

3. நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் - இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - இன்பராய்

6. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் - இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் - இன்பராய்

THANTHEN ENNAI YESUVE

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் --- தந்தேன்

சரணங்கள்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து --- தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் --- தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் --- தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் --- தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் --- தந்தேன்

THAM KIRUBAI PERITHALLO

இன்னும் தேவை கிருபை தாருமே (2)

தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுமே
இன்னும் தேவை கிருபை தாருமே (2)

தாழ்மை உள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே (2)

இன்னும் தேவை கிருபை தாருமே (2)

THASARE ITHARANIYAI ANBAI

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

அனுபல்லவி

நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்

சரணங்கள்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே --- தாசரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே --- தாசரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே --- தாசரே

4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட --- தாசரே

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் --- தாசரே

THERI MUDHAL KIRUBASANANE SARANAM ;LYRICS

1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம் - கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் - சருவேசா!

2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன் இது தருணம் - தருணம்
நம்பினேன், தினம் சரணம் - சருவேசா!

3. அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் - கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் - சருவேசா!

4. உலகிட மேவிய உனதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க்-கு
உத்தமனே, சரணம் - சருவேசா!

5. நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் - கிருபைக்கொரு
ஆதாரா சரணம் - சருவேசா!

THIRUKARATHAL THANGI ENNAI LYRICS

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

THIRUPPATHAM NAMBI VANTHEN

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

சரணங்கள்

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

THEEYA MANATHAI MAATRA VAARUM

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே - கன
நேய ஆவியே

சரணங்கள்

1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்
பாவி நான் --- தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே - மருள்
தீர்க்கும், தஞ்சமே --- தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா - ஒரு
பாவி நான் ஐயா --- தீய

4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே - தினம்
இதயம் அஞ்சவே --- தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே - அதைப்
புகழ்ந்து காக்கவே --- தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே - அவர்
கிருபை தேடவே --- தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே - மிகு
தெளிவு வேண்டவே --- தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே - மிக
சிறப்பாய் ஏற்றவே --- தீய

THEEYOR SOLVATHAI KELAAMAL

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.

2. நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.

3. தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

THEERATHA THAGATHAL EN ULLAM THOINTHATHE

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.

3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

THEEVINAI SEIYATHE MAA SOTHANAIYIL

1. தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

ஆற்றித் தேற்றியே காப்பார்
நித்தம் உதவி செய்வார்
மீட்பர் பெலனை ஈவார்
ஜெயம் தந்திடுவார்

2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
சேராமலே நீங்கி நல்வழியிலும்
நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான்
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

THUKKA BHARATHAL ILAITHU

1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?

2. அன்பின் ரூபகாரமாக‌
என்ன காண்பித்தார்?
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!

3. அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?
ரத்தினம் பொன்னாலுமல்ல‌
முள்ளினால்!

4. கண்டுபிடித்தாண்டினாலும்
துன்பம் வருமே!
கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.

5. அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?

6. பாவியேனை ஏற்றுக்கொள்ள‌
மாட்டேன் என்பாரே!
விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!

7. போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?
தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்.

THUNGANIL OTHUNGUVON PANGAMINDRI THANGUVAN

துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் --- துங்கனில்

சரணங்கள்

1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே --- துங்கனில்

2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் --- துங்கனில்

3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் --- துங்கனில்

4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே --- துங்கனில்

5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே --- துங்கனில்

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் --- துங்கனில்

THUTHI GANAM MAGIMAIYUMAKKE

துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ ! நீரே ராஜாவே

துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே

THUTHI THANGIYA PARAMANDALA SUVISEDAGA NAAMAM

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி

THUTHI MAGIMAI GANAM VALLAMAI

துதி மகிமை கனம் வல்லமை
அனாதி தேவனுக்கே
எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
தேவனை பணிந்திடுமே

சகல நாவும் போற்றும் தேவா - வானம் பூமி
எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே - பணிந்து
நீரே என்றும் உயர்ந்திடுவீர் - உம் ராஜ்யம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
அனாதி தேவா

THUTHITHU PAADIDA PAATHIRAME LYRICS

1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே
3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே
4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே
5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

THUTHIPPEN YESUVIN PAATHAM THUTHIKKA

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் --- துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை --- துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் --- துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் --- துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் --- துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் --- துதி

THUKKAM KONDADA VAARUME LYRICS

1. துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.

2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3. கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.

4. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

5. சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

6. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!