Monday, April 14, 2025

Ungala Pathithaanae உங்கள பத்தி தானே

 உங்கள பத்தி தானே

பேசிகிட்டு இருக்கோம் – உங்க
வசனம் மட்டும் தானே
வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க
வல்லமை பத்தி தானே
பாடிகிட்டு இருக்கோம் – உங்க
வருகைக்காகத்தானே
காத்துகிட்டு கிடக்கோம்

என்றும் மாறாத உங்க அன்ப
பாட்டா பாடுவோங்க
என்றும் தீராத உங்க தயவ
ஏட்டில் எழுதுவோங்க
எங்க கர்த்தரே உங்க கிருப
கவிதையா சொல்லுவோங்க
எங்க வாழ்நாள் முழுவதும்
உங்க சமூகத்தில் கொண்டாட்டம்
கொண்டாட்டங்க

என்றும் நீங்காத உங்க பெரும
பேசிகிட்டு போவோங்க
என்றும் மங்காத உங்க மகிம
மெச்சிகிட்டு இருப்போங்க
எங்க அய்யாவே உங்க அழக
அன்னாடம் அளப்போங்க
எங்க எல்லாருக்காகவும்
உயிரையே கொடுத்தீங்க
உங்களப்போல் யாருமில்ல

Vallamaiyin Devanae வல்லமையின் தேவனே

 வல்லமையின் தேவனே

வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
எரிகோ கோட்டையை உடைத்தவரே
குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
உம் வல்லமையை நினைத்தே
வியக்கிறேன் தெய்வமே

வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
வாக்குமாறா தெய்வமே இயேசுவே

மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
பாவி மனுஷன விடுதலையாக்கி
மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி

பாதாளம் கூட தெறந்திருக்குது
உமக்கு முன்னால பயந்திருக்குது
வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது

உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
சமுத்திரங்கூட பயந்து ஓடுது
தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது

உமக்கு முன்னாடி பேச முடியுமா
எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
உமது வழிகள அறிய முடியுமா
உமது யோசன புரிய முடியுமா

Vaa Endrazhaikkum Theiva வா என்றழைக்கும் தெய்வ சத்தம்

 வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா

நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
உன் கஷ்டங்கள் அறிவார்
உன் கண்ணீரை அறிவார்
உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்

உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
முழுதான மனதோடு துதியோடு

உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
பதறாதே தயங்காதே மயங்காதே

Vaa Engal Swami வா எங்கள் ஸ்வாமி

 வா எங்கள் ஸ்வாமி

வா இந்த நேரத்திலே
உம் பாதம் சேவிக்க இவ்வேளை
சுத்தரே அடிபணிந்தோம்

வா எங்கள் தேவனே
வந்தெம்மைக் காத்திடுமே
தேடியே உம் பாதம் அண்டினோம்
தெய்வமே அருள் தாரும்

வா எங்கள் கர்த்தரே
வந்தெம்மைக் காருமையா
கருணையின் வடிவான கடவுளே
காத்தெனக் கருள் தாரும்

வா எங்கள் நாதனே
நாடி வந்தோமே
நித்திய ஜீவ ராஜனே
நமோ நமோ நாதா

Vaana Paraparanae Ippo varum வானபராபரனே! இப்போ வாரும் எம்

 

வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா —

பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா
வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க — வான

கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே –வான

தாய் என்னை மறந்தாலும், ஐயா! நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே
யேகோவாவே, எங்களின் இராஜா எழுந்து வாருமையா— வான

நினைத்திரா தினமதினில், எம் கர்த்தரே வருவீரே
ஆவி, ஆத்துமா, மாமிசம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசில்லா பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே — வான

வாதை பிணிதீர எம் வாய்த்த மருந்தே நீர்;
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு இரத்தமே
கல்வாரியண்டை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே — வான

ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே,
அன்பின் தயாளன், ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய் — வான

Vaanam Boomiyao Paraaparan வானம் பூமியோ பராபரன் மானிடன்

 வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? – என்ன இது?

ஞானவான்களே நீதவான்களை ஆ என்ன இது?

பொன்னகர சாளும் உன்னதமே நீளும்
பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம்

சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன்
நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர்

அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன்
வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன்
கற்பனைத்தந்தவன் வான

மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி

வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லிற் கிடக்கிறார்

சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே
மாயமென்ன வுனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ

ஆதாமின் குலமே யிதானாலும் புதுமை
வேதநாயகன் பாட்டுப் பார்த்தது
மேசியாவின் விளையாட்டுக் கேர்த்தது

Vaanam Meethilae En Mannan வானம் மீதிலே என் மன்னன் வருவார்

 வானம் மீதிலே என் மன்னன் வருவார்

மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்

துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்

நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்

Vaanchaiyulla Devanai வாஞ்சையுள்ள தேவனை நான்

 வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன்

அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன் (2)
நித்தம் நம்மை வழிநடத்திடுவார்
அவர் தினமும் நம்மை காத்திடுவார் (2)

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்
கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன்

செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார்
சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார்

பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர்
பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்

Vaarthaiyai Anuppiyae வார்த்தையை அனுப்பியே

 வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே

என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா

வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

Varathadchanai Kedu வரதட்சணை கேட்டு கொடுமை

 வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா

பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது

குடும்பத்துக்கொரு பாரமாக தான் இருப்பது போல எண்ணி
கண்ணீரோடு காலம் தள்ளும்
பெண்களை நினைக்க வேண்டும்
மாப்பிள்ளையின் வீட்டார் கேட்ட
பணம் இல்லை என்பதாலே
பெண்ணைப் பெற்ற தந்தையும்
தாயும் கண்ணீர் வடிக்கின்றாரே

நான் கேட்க மாட்டேன்
ஆனால் அப்பாதான் கேட்கிறாரு
என்று சாக்குபோக்கு சொல்லி நழுவி விடாதே பிரதரே
பாவப்பட்ட மாமனாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே
பாவப்பட்ட மாமியாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே
விக்கிரக ஆராதனையாம் பண ஆசை நமக்கு வேண்டாம்

உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
என்று சொன்ன இயேசுவை நம்பி
தைரியமாய் திருமணம் பண்ணு
கேயாசியை நினைத்து பாரு யூதாசை நினைத்து பாரு
பண ஆசை இருந்ததாலே இருவரும் அழிந்து போனார்

Vazhiyum Neerae Oliyum வழியும் நீரே ஒளியும் நீரே

 வழியும் நீரே ஒளியும் நீரே

ஜீவனும் நீரே தேவனும் நீரே
நம்பி வந்தேன்  நாயகன் இயேசுவே
என்றும் எந்தனின் துணை நீரே

நானே வழியும் சத்தியம் ஜீவன்
என்று உரைத்த  எந்தன் இயேசுவே
மனதின் இருளை போக்கிட வந்த
மகிமை நிறைந்த தேவ தேவனே

நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி
மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே
எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே
எந்தன் மேன்மை இயேசு தேவனே

உந்தன் வாக்கு எந்தனின் தீபம்
என்னை தந்துமே உம்மை சாருவேன்
உந்தனின் பாதை என்றும் செல்லுவேன்
நித்திய ராஜனே இயேசு தேவனே

மகிமை தங்கும் உந்தன் சமுகம்
என்றும் என்னை தேற்றி ஆற்றுதே
கலங்காமல் பதறாமல்
உந்தன் பாதை என்றும் செல்லுவேன்