Tuesday, November 12, 2019

UN THIRUYAAZHIL EN IRAIVA


உன் திருயாழில் என் இறைவா 
பல பண் தரும் நரம்புண்டு 
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே 
அதில் இணைத்திட வேண்டும் இசையரசே 

யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த 
ஏழையின் இதயம் துயில் கலையும் 
யாழிசை கேட்டு தனை மறந்து உந்தன் 
ஏழிசையோடு இணைத்திடுமே 

விண்ணக சோலையில் மலரெனவே - திகழ் 
எண்ணில்லா தாரகை உமக்குண்டு 
உன்னருட்பேரொளி நடுவினிலே - நான் 

என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் 

No comments: