உன் திருயாழில் என் இறைவா
பல பண் தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
அதில் இணைத்திட வேண்டும் இசையரசே
யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும்
யாழிசை கேட்டு தனை மறந்து உந்தன்
ஏழிசையோடு இணைத்திடுமே
விண்ணக சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணில்லா தாரகை உமக்குண்டு
உன்னருட்பேரொளி நடுவினிலே - நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்
No comments:
Post a Comment