Thursday, February 14, 2019

PIDHAAVAE NANDRI SOLGIROAM LYRICS


பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -2
1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே
2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே 
3. கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே
4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

JEBAME EN VAAZHVIN SEYALAGA LYRICS


ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே
1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே
2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே
3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே
4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

UN KARIYATHAI VAIKAPANNUM KARTHAR LYRICS


உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)
1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்
2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்
3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்
4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)

DEVAREER NEER SAGALAMUM SEIYA VALLAVAR LYRICS


தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது

ORU MAGIMAYIN MEGAM LYRICS


ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

RATCHANYA MAGIMAI THUTHI GANA LYRICS


இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா(2)
நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)
1. சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா
2. காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா
3. சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா
4. மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Wednesday, February 13, 2019

UM ANBU ETHANAI PERITHAIYA LYRICS


உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

MARAKKA PADUVATHILLAI NAAN LYRICS


மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2
1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல
2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

IMAIPOLUTHUM ENNAI KAIVIDAMAATTEER LYRICS


இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்
என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)
என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

KUPPAYANA ENNAI GOBURATHILE LYRICS

Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா
1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
என் இயேசப்பா
சோகங்கள் தீர்த்தீரப்பா
2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
தாகத்தால் தவித்தேனப்பா
என் இயேசப்பா
ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

NAAN POTRI PADUVAEN LYRICS

Naan Potri Paduvaen
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)
நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)

ESANAE UM SEVAIKE LYRICS


ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)
1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)
2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)
3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

ALLELUYA THUTHI UMAKE LYRICS


அல்லேலூயா துதி உமக்கே
அல்லேலூயா துதி உமக்கே (2)
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)
1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலூயா
2. கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2) – அல்லேலூயா

DEVANAE ENNAI THARUGIREN LYRICS


தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது

Sunday, February 10, 2019

INDRU MUDHAL NAN UNNAI AASIRVADHIPEN LYRICS


இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

2. செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன்
கைவிடமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்

3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே

4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்
நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல்
ஆளுகை செய்திடுங்கள்

MAGIZHNDHIRUNGAL MAGIZHNDHIRUNGAL LYRICS


மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2
எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்
துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்
ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

NANDRI SOLLI UMMAI PAADA VANTHOM LYRICS


நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை
காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்
கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்
வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

ULLAM UDAITHU SOGATHIL LYRICS


உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன் 
உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
உயர்த்துவீர் அலைகள் கடந்தே
ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன் 
களையப்படைந்து சோறுவோர் அநேகர்
வாலிபரும் இடறி போவாரே
கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
கழுகை போல் பெலன் அடைவாரே
மரண பள்ளத்தாக்கினில் நடந்து
பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்றும் தொடரும்

YESHUA YESHUA ENDRA NAAMAM LYRICS


யெஷ¤வா யெஷ¤வா என்ற நாமம்
உனக்கும் எனக்கும் போதும் போதும்
இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம்
முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும்
அனைவரும் தொழுதிடும்
1. நீதியின் சூரியனே நீரே நாயகனே
ஏழைகள் காவலனே யெஷ¤வா யெஷ¤வா
பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே
உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே
2. கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
மூன்றில் ஒன்றானவரே யெஷ¤வா யெஷ¤வா
பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன்
பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன்
3. ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே
ஆத்துமா இரட்சகரே யெஷ¤வா யெஷ¤வா
ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே
முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே

YESU EN PARIKARI INBA LYRICS


இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி
சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப
இராஜா என் பரிகாரி
பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி
பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி
எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துனை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

YESU NAM PINIGALAI LYRICS


இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்

1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல் விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் – நாம்

2. கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
கத்திரிப்பேன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்

3. நம் பாவம் அனைத்தும் அகற்றிவிட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்

YESUVAE UM NAAMATHINAAL LYRICS


1. இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
2. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே
3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே
5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்

YESUVAI NAAM ENGE KANALAM LYRICS


இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?
1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே
2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ
3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்

YESUVAI NESIKKA THONDANGINEN LYRICS

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்
1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே
2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே
3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

YESUVAI POL AZHUGULLORE LYRICS


இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

YESUVAI POL YAARUM ILLAI LYRICS


இயேசுவைப் போல் யாரும் இல்லை -2
நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
தன்கரத்தில் எந்தி தாங்கு வார்
என் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்)
என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
என் கஷ்ட பாதைகளில்
என்னை அவர் நடத்தினார்
என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

YESUVALE PIDIKKAPPATTAVAN AVAR LYRICS


இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்லை
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு…என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு
1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்
5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

YAARUM ILLA NERATHIL LYRICS


யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)
நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா
சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே தூயஆவியே
உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

VANJAGAN VALAIVUSUKIRAAN LYRICS


வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
விதையை அறியாமல் அதை
பொறுக்குவாரும் உண்டு – 2
1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2
2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2
3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
சபையை மாற்றிவிடும் முறைகளையும்
வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .

UNGA MUGATHAI PARKANUMAE YAESIAH LYRICS


உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4
1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2
2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2
3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2
4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2
5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2
6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

UMMAI NAADI THEDUM MANITHAN LYRICS


உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2
துதியும் கனமும் தூயோனே உமக்கே
ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன் (2)
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன் (2)
என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான் (2)
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான் (2)
உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு (2)
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு (2)
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத்திருத்த வேண்டும் தேவா (2)
கருத்தோடு உமது வசனம்
கற்றுத்தந்து நடத்த வேண்டும் (2)

PERUMAZHAI PERUVELLAM VARAPOGUTHU LYRICS


பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ
1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை
2. குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே – பெருமழை
3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது – பெருமழை
4. பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார் – பெருமழை

PARALOGA RAAJIYA VAASI LYRICS


பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி
சரணங்கள்
ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே – பரலோகமே
திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
துயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே
தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே
நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
நல அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே
சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே
வெண் வஸ்திரம் பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே
பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே
நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே

NANDRI PALI NANDRI PALI LYRICS


நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா

6. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே ஆறுதல் நாயகனே

7. என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே

INDIAN ENDRU SOLVOM LYRICS


இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம் 
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம் 
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம் 
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
நம் தேசத்தை உயர்த்தனும்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
அறிவியல் அறிஞர்கள்
மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது
வளமிக்க பொன் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில்
தேசம் போக துளியும் விட மாட்டோம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்