Friday, May 26, 2017

Um samugathai vaanjikiren lyrics

உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
உம் சமூகத்தை விரும்புகிறேன்
உம் சமூகத்தை தேடுகிறேன்
உம் சமூகத்தை நேசிக்கிறேன் 
உம் சமூகத்தால் என்னை மூடிடுமே
உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே
உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே
உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே
அக்கினி ஸ்தம்பமாய்
என் மேல் இறங்கிடுமே
மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே
மறுரூப மலையே இறங்கி வந்திடுமே
மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே

Uyarthuvar uyarthuvar yesu

உயர்த்துவார் உயர்த்துவார்
இயேசு உன்னை உயர்த்துவார்
உன்னை என்றும் காண்பவர்
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்
உன்னை என்றும் நடத்துவார்
அல்லேலூயா
உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன்
சிங்கத்தின் மேலே நடப்பேன்
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன்
பெலனான தேவன் உண்டு
மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்
சமாதான தேவன் சீக்கிரம்
சாத்தானை நம் கால்களின் கீழே
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் 
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
சர்வ வல்லமை உடையவர்
பரிசுத்த தேவன் இவரே

Unakkedhiraana aayudhangal vaaikaathe

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை 
உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்
இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்
உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன் 
ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்
ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை 
சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்
உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்
உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்

MALAIGAL ELLAM VALIGALAGUVAR LYRICS

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே
நிச்சயமாகவே முடிவு உண்டு
ஆபிரகாமின் தேவன் அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர்
நம்முடைய தேவன்
பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே
பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே
தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே

Oru kodi sthothirangal

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
ஏறெடுப்போமா
பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா
மனதார வாழவைப்பார்
மகிமையின் தேவனவர்
பரலோகம் சேர்த்திடுவார்
பரலோக ராஜனவர்
துதியும் கனமும் மகிமை செலுத்தி
பாடி கொண்டாடு
மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
பாவங்கள் சாபங்கள்
மன்னித்தவர் இவரே
பரலோக வாசலை திறந்தவர் இவரே
நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே
உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே
நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே
பாவ இருளை நீக்கியவர் இவரே
பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே
வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரே
எல்லா நாமத்திலும் மேலான நாமமே
பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே
வல்லமையுள்ள தேவனும் இவரே

Akkini kaatre thetraravaalane tamil lyrics

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவநதியே
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே
காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே அவரே

Appa um samugathil eppothum

அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா
தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப்போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்
கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்
எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்

Ennathan aanal ena enn meetper

என்னதான் ஆனாலென்ன
என் மீட்பர் உயிரோடுண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன்செல்கிறார்
காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே
ஆறுகளை நான் கடக்கும்போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை
மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன
பரிசுத்தரின் பின்னே செல்லுவேன்
திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பதில்லை
கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாருமில்லை
உனது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே

Ennai jenipithavarum neerthane

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே
கன்மலையே.... கன்மலையே
உமக்கே ஆராதனை
தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவேயில்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே
எனக்காக உயிர்த்தீரே
என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
தந்தவரே-இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா
என் மேல் அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை
நித்திய ஜீவனை தந்தீரே
உமக்கு நிகரான தெய்வமொன்றும்
இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
ஆண்டவரும் நீர்தானே
முடிவில்லா இராஜ்யத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே

yesu naamame jeya naamame

இயேசு நாமமே ஜெய நாமமே
ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே
இயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே
வானத்திலும் பூமியிலும்
உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்
ஆண்டவரே உன்னத நாமமே
மரணத்தின் கூரை உடைத்த
இயேசு நாமமே- பாதாளத்தை வெற்றி
சிறந்த இயேசு நாமமே
நித்திய ஜீவனை தருகின்ற
இயேசு நாமமே-வழியும் சத்தியம்
ஜீவனுமான இயேசு நாமமே

sathuru vizhunthaney unn paathathin

சத்துரு விழுந்தானே
உன் பாதத்தின் கீழே
புது எண்ணெயால் அபிஷேகம்
உன் பாத்திரம் நிரம்பும்
பெரும் பந்தியின் நடுவிலே
என் தலையை உயர்த்துவார்
நீதியின் சால்வையாலே
உன்னை மூடுவார்
நீ உயருவாய் நீ படருவாய்
உன் தேசம் வாழுமே
நீ ஓங்கு வளருவாய்
நீ பூத்து குலுங்குவாய்
நீ பூமியை நிரப்புவாய்
யுத்தங்கள் நடப்பிக்கும்
சர்வ வல்ல தேவன்
கூர்மையான பட்டயமாய்
உன்னை என்றும் மாற்றுவார்
கன்மலையின் வெடிப்பிலே
உன்னை மூடுவார்
பலவானின் கையிலே உள்ள
அம்பாய் மாற்றுவார்-நீ மலையின்
மேல் உள்ள பட்டணமாய்-இனி
மறைவது இல்லையே நீ உலகத்தின்
வெளிச்சமே நீ பூமியின் சாட்சியே

Yacob ennum sirupuchiye

யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
என் யாக்கோபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன்
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரை பரவச் செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
உனக்கு எதிரான மந்திரமில்லையே
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை
நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்

Panithuli pol pozhigirathe

பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம் பின்மாரியின்
மழை பொழியும் காலம் வந்ததே
ஒருமனதோடு சபையாரெல்லாம்
ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே வேளை வந்ததே
தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ச்சித்து
எதிரியை துரத்திடு
எங்கும் தேவனை தொழுது
கொள்ளும் காலம் வந்ததே
எழுப்புதலடைந்து இயேசுவின்
நாமத்தை எங்கும் உயர்த்துவோம்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை
நீ மறந்து போகாதே
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு
உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்

Yarundu natha ennai visaarikka

யாருண்டு நாதா என்னை விசாரிக்க
உறவுகள் இல்லையே
நீரின்றி யாருண்டு நாதா
நீரே என் தஞ்சமல்லோ
தனிமையில் கதறிய
ஆகாரின் குரலைக் கேட்டீர்
மனம் கசந்து கலங்கி நின்ற
அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
நீரே நல்ல மேய்ப்பன்
வேண்டுதல் கேட்பவரே
கண்ணீரின் பாதையிலே
நடந்திடும் வேளையிலே
கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
தேற்றுதே உம் கரமே
நீரே நல்ல சமாரியனே
என்னைத் தேற்றிடுவீர்
அடைக்கலம் தேடி வந்தேன்
உம் சிறகால் என்னை மூடும்
கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
விலக்கி காருமையா
பாரத்தை உம் மேல் வைத்து
விட்டேன் நீரே ஆதரித்தீர்

Paalaivanamai irundha engala



பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா

Thudhikka thudhikka inbam peruguthe

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்
பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதித்தாங்க
துதிச்சது இரண்டு பேர்
விடுதலை பலபேருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
அசைவில்லா ராஜ்யத்தை
பெறப்போகும் நாமெல்லாரும்
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே

Unnatha devan ennodu irukka

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன் 
கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார் 
சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார் 
கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்

Elshadai entra naamam

ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே
செட்டைகளில் ஆரோக்கியம்
வானாதி வானங்கள் போற்றுகின்ற
தெய்வம் நீரே - அகில உலகத்தையும்
ஆளிகின்ற தெய்வம் நீரே
யார் உம்மை மகிமைப் படுத்தாமல்
இருக்கலாம் - தேவரீர்
ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்

Jeyitharae jeyitharae yesu

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே
வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் முழங்கால் முடங்கிடுமே
வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் நாவும் அறிக்கையிடும்
நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தைக் குலைத்தாரே
சத்துருவின் கையில் இருந்து
நம்மை விடுதலையாக்கினாரே
கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜா
எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்கப் பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்து விட்டார்
ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின்மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே
மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே

Neer mathram illai endraal

நீர் மாத்ரம் இல்லையென்றால்
மண்ணாய் போயிருப்பேன்
நீர் மாத்ரம் இல்லையென்றால்
வேரற்று போயிருப்பேன்
என் மீது கிருபை வைத்ததினால்
உயிரோடு இருக்கச் செய்தீரே
என் மீது கிருபை வைத்ததினால்
உயரத்தில் ஏறச் செய்தீரே
என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
தொழுகிறோம் உந்தன் நாமத்தை
இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
என்றென்றும் கைவிடாத நேசரே
காணாமல் போன ஆட்டினைப் போல
திசை தெரியாமல் அலைந்தேனே
முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
போனேனே - என்னையும் தேடி
வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே
துடைத்துப் போட்ட கந்தையைப் போல
குப்பையில் நானும் கிடந்தேனே
நாற்றமெல்லாம் நீக்கினீரே
வாசனையாய் மாற்றினீரே
ராஜாக்களோடு அமரச் செய்து
பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே
உடைந்து சிதைந்த பாத்திரம் போல
விரும்புவாரற்று கிடந்தேனே
சிதைந்த என்னையும் தூக்கினீரே
கன்மலை மேலே நிறுத்தினீரே
உமது காருண்யம் பெரியவனாய்
உமது கிருபையால் உயர்த்தினீரே

Paraloga thanthaiye Paraloga thanthaiye

பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி
தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே
பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே
ஒருமனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த என் தேவனை
தொழுக வந்தோம்
அப்பத்தக் கேட்டா கல்லக் கொடுப்பானா
மீனக் கேட்டா பாம்பக் கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளக் கொடுப்பானா
பொல்லாத தகப்பனே
நல்ல ஈவை அறியும் போது
இம்மைக்கோ மறுமைக்கோ
பரமத் தகப்பன் நீர் தானே
பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே
தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனைப் போல் சுமந்திடுவார்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்தத் தண்ணீரண்டை நடத்திடுவாரே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற போது
தாழ்ச்சி என்பது வாழ்வினில் இல்லை
நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடரச் செய்வார்

VAZHVE NEER THANAIAH

வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே
நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே
மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா

EN MEETPER UYIRODUNDU

என் மீட்பர் உயிரோடுண்டு
உயிரோடுண்டு உயிரோடுண்டு
உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு
ஹா..லேலூயா ஹாலேலூயா
ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினியில் நான் நடந்திடுவேன்
சிங்க கெபியில போட்டாலும்
சேதமில்லாமல் காத்திடுவார்
துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
அவர் வசனத்தால உயிரடைவேன்
நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
வெள்ளம் போல சாத்தானும்
நம் எதிரே வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடித்து
யுத்தங்களை செய்திடுவார்

YUTHA KOTHIRA SINGAMUM

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே
இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம் அழ வேண்டாம்
மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவர் தானே - பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே
அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே
உன் துக்கம் சந்தேஷமாய் மாறிடுமே
பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின் கண்ணீரைத் துடைப்பவரே
ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால்
சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்
திறந்த வாசலை நம் முன்னே
வைத்தார் இயேசு - பாதாள வாசல்
இனி மேற்கொள்ள இடமில்ல
சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்

UTHAVATHAVAN ENDRU THALLIYATHE



உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
தள்ளியதே உலகம்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
என்னைத் தள்ளாதவர் என் இயேசு
பொய்யான உலகினிலே
மெய் தெய்வம் தேடி வந்தார்
என் வாழ்க்கை மாற்றிடவே
என் சாபம் ஏற்றாரே
தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல் சுமந்தாரே
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
என்னை தினம் சுமந்து சென்றார்
இரத்தத்தில் கிடந்த என்னை
பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
பிழைத்திரு என்று சொல்லி
தூக்கியெடுத்தீரையா

NITHYA VAASIYUM PARISUTHER



நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே
எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்

YESU NAAMAM UYARNTHA NAAMAM

இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம்
மரணத்தின் வல்லமைகள்
தெறிப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
பாதாள சங்கிலிகள்
அறுப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
மரணத்தை அவர் ஜெயித்திட்டார்
பாவத்தின் வல்லமைகள்
உடைபட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
வியாதியின் வல்லமைகள்
விலகியே போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
தடைசெய்த மதில்கள்
தளர்ந்து போய் விழுகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
எரிகோவின் வல்லமைகள்
பயந்துபோய் ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

Azhaganavar yesu Azhaganavar

அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
ரோஜா தோட்டம் லீலி புஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Aanandha kalippulla udhadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்
மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
என் உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
தேவனே நீர் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன்
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன்
வல்லமை காண்கின்றேன்
நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா
வலக்கரம் தாங்குதையா
கைகளை நான் உயர்த்துவேன்
திருநாமம் சொல்லி சொல்லி-என்
படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவினிலும் தியானிக்கின்றேன்
இரவினிலும் துதிக்கின்றேன்
படுக்கையிலும் நினைக்கின்றேன்

En devan en jeevan neere iyya

என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா
எனக்காக உயிர் தந்த
என் இயேசய்யா
எனக்காக மீண்டும்
வருவீர் என் மேஷியா
அலைந்து திரிந்த என்னை
தேடி வந்தவரே
நல்ல மேய்ப்பன் நீரே
எனக்காய் ஜீவன் தந்தவரே
நான் என்ன கொடுப்பேன்
உம் எண்ணி முடியா அன்பிற்க்காய்
உடைந்த என் இதயத்தையே
உமக்கற்ப்பணித்தேன்
நீரே நீரே நீரே ஐயா
நீரே நீரே எனக்கு போதுமையா

Unthan parisuththathai naan

உந்தன் பரிசுதத்தை
நான் வாஞ்சிக்கிறேன்
பரலோக பிதாவே
பரமனே இயேசுவே
பரிசுத்த ஆவியே
பரிசுத்தம் தாருமே
யோசேப்பை போல
பரிசுத்தமாய் வாழ
வாலிப வயதில்
என்னால முடியல
இயேசுவே நீரும்
வாலிப வயதில்
வாழ்ந்தது போல
என்னை மாற்றிடும்
பரிசுத்தரே
பேச்சினில் பரிசுத்தம்
பார்வையில் பரிசுத்தம்
கிரியையில் பரிசுத்தம்
உணர்வினில் பரிசுத்தம்
ஊழியத்தில் பரிசுத்தம்
ஜீவியத்தில் பரிசுத்தம்
உம்மை போல நானும்
மாறுகின்றேன் ஐயா
பரிசுத்தத்தை தந்தீரையா
உந்தன் பரிசுத்தத்தை தந்தீரையா
பரிசுத்தரே உமக்கு நன்றி
என் பரிசுத்தரே உமக்கு நன்றி

AAYIRANGAL PAARTHALUM KODIJANAM

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே......
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே
உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே
காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே
நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

EL YESUREN ENAKAAGA YAAVAIYUM



ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை
பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Puthu Vaazhvu Thandavarae

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்

Yen devanukai naan valldhiduven



என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்
என் வாழ்க்கையிலே அவரே எல்லாம்
இன்பமோ துன்பமோ
கஷ்டமோ நஷ்டமோ
இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்
என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரே
எனக்காகவே தம் ஜீவன் ஈந்தார்
தாய் என்னை மறந்தாலும்
உற்றார் வெறுத்தாலும்
என்னை மறவாத தேவன் நீரே
உம் உள்ளங்கைகளில்
என்னையும் வரைந்துள்ளீர்
உயிர் உள்ள நாளெல்லாம்
என்னோடு இருக்கின்றீர்

Natchathiram vanthathu vaanil

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது 
இம்மானுவேல் தேவனை
மண்ணில் வந்த வேந்தனை
மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
தேவனை மண்ணில் வந்த ராஜனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான் 
உயிரை தந்த தேவனே
உயிரோடு கலந்த தேவனே 
அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

Namakkoru meetpar pirandullar

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்
இனி அச்சம் என்பது இல்லை
வானகமே நம் எல்லை
பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்
உன்னதத்தில் மகிமை
மனங்களில் அமைதி
வானவர் பாடல் கேட்கிறது
நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்
அவர் பாதம் பற்றும் நாட்கள்
ஆதைகள் எங்கும் பூக்கள்
அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்
காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்
இது அன்பின் காலம் எங்கும்
புது பாதைகள் விரியும் எங்கும்
ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்

Ennai valladicikku neekki um

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் 
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் 
ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்

Nandri solli ummai paada vanthom

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை 
காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்
கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் 
வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

Ellamae maara poguthu

எல்லாமே மாறப் போகுது
எல்லாமே மாறப் போகுதே
என் வாழ்க்கை Fulla மாறப் போகுது
நான் ஜெபித்தெல்லாம் நடக்கப் போகுது
மாறப்போகுதே, மாறப்போகுதே
இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே
என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே
அது விசாலமாய் மாறப்போகுதே
என் ஜெபநேரம் அதிகமாகுதே
என் துதிநேரம் அதிகமாகுதே
அக்கினியா மாறப்போகுதே
வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே
என் கவலையெல்லாம் மாறப்போகுதே
என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே
என் அழுகையெல்லாம் மாறப்போகுதே
அது ஆனந்தமாய் மாறப்போகுதே

Thanneerum rasamagum nardhiratchai

தண்ணீரும் ரசமாகும்
நற்திராட்சை ரசமாகும்
குறைவெல்லாம் நிறைவாகும்
விசுவாசம் துளிர்த்தோங்கும்
ஒன்றும் குறைவுபடாது நீர்
என்றும் இருப்பதனால்
சர்வ வல்ல தேவன் நீர்
அற்புதங்கள் செய்திடுவீர்
அதிசயங்கள் செய்வதிலே
உமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு)
ஐந்தப்பம் இருமீகள்
உம்கையில் ஏராளம்
ஆயிரங்கள் இருந்தாலும்
கொடுப்பதில் நீர் தாராளம்
அகிலம் படைத்த ஆண்டவர் நீர்
ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர்
அன்பு கொண்ட அண்ணல் நீர்
இயேசு எங்கள் தெய்வம் நீர்
நம்பிக்கை இழந்தாலும்
சரீரமே துவண்டாலும்
உம் வார்த்தை மாறாது
என்றென்றும் ஒழியாது
ஆபிரகாமின் தேவன் நீர்
வாக்கை நிறைவேற்றிடுவீர்
சந்ததிகள் எழும்பிடுமே
துதித்து உம்மைப் பாடிடுமே

Aarathanai aarathanai aarathanai

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்
நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
எல்லாம் மறக்கணும்
உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும்
இன்னும் உம்மை நெருங்கணும்
என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கு செல்ல கூடுமோ
நீரே என் நம்பிக்கை
நீரே என் ஆதரவு
உம் சமுகமே போதும்
அதுவே என் ஆனந்தம்
உயிர் கொண்டேன் உம்மாலே
உம்மாலே வாழ்கின்றேன்
நீர் தந்த வாழ்வதனை
உமக்கே தருகின்றேன்
என்னை வனைந்திடுமே
உமக்கே பயன்படுத்தும்
என் மூச்சு திரும்போது
உம்மடியில் சாயணுமே

Aaviye thooya aaviye

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே
ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே
தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்
யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்

aaradhikka therinthedukka isravel

ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க
அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க
அத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா
உம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா
கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு
ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
அவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குது
அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது
காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது
தூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவு
கற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருது
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது
எரிகோவை நாங்க சுத்தி சுத்தி வருவோம்
தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம்
சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
மதில்களை தாண்டிட தைரியம் உண்டு

Naanga rathangalai kuritthum



நாங்க இரதங்களை குறித்தும் குதிரையை குறித்தும்
மேன்மையை பாராட்ட மாட்டோம்
எங்க சொத்து சுகம்மெல்லாம் சொல்லி நாங்க
சீனப் போட மாட்டோம்
எங்க தேவனின் நாம மகிமைக்காக வாழ்ந்திடுவோம்
எங்க வாழ்நாளெல்லாம் அவரின் புகழை பாடிடுவோம்
தேவனை பற்றி சொல்ல
தேசமெங்கிலும் செல்ல
மனம் தயங்குவதில்லை நாங்க தானியேலப் போல
மானின் கால்கள் எனக்கு
அக்கினி இரதங்கள் இருக்கு
ஆவியின் கண்கள் எனக்கு
உலகத்தின் வேஷம் எதற்கு 
பாவத்திற்கு மரித்தோம்
பரிசுத்தத்திலே பிழைத்தோம்
இழந்துப்போனதெல்லாம் சிலுவையிலே ஜெயித்தோம்
முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
கர்த்தரே தெய்வம் என்ற சத்தம்
பூமி எங்கும் கேட்கும் 
ஓடினாலும் இளைப்பில்ல
நாங்க நடந்தாலும் சோர்வில்ல
எங்க இடுப்பின் கச்சை பாத ரட்சை அவிழ்வதேயில்ல
நாணேற்றின வில்லும்
கூர்மையான அம்பும்
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்த பிடித்தோம்

yeasuvae enthan aanandhame

இயேசுவே எந்தன் ஆனந்தமே
இயேசுவே எந்தன் ஆருயிரே
ரொம்ப அன்பானவர்
ரொம்ப பண்பானவர்
ரொம்ப பாசமானவர்
ரொம்ப நேசரானவர்
எனக்காய் ஜீவன் தந்தவர்
எனது ஜீவனானவர்
இவரை பாடுவதே ஆனந்தமே
ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
நீதியும் நியாயமும் செய்வாரே
இவரை பாடுவதே ஆனந்தமே
எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
என் யூதராஜ சிங்கம் இவரே
இவரை பாடுவதே ஆனந்தமே 
விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
இவரை பாடுவதே ஆனந்தமே
இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
இவர் வல்லமைக்கு நிகரில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே

INI NAANUM VAALTHIDUVEN UMAKKAGAVE

இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே
எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்
குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்
ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்
செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்
உருவாக்க உம்மைப் போல எவருமில்லை
குயவனின் யோசனைக்கு அளவே இல்லை
விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்
தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்
உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்
உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்

Nallavarae vallavarae paatherar neere

நல்லவரே வல்லவரே
பாத்தீரர் நீரே பரிசுத்தரே
ஆராதனை உமக்குத்தானே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே
ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே
எல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே
உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே
என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே
அவர் கண்கள் புறா கண்கள்எ
ன்னை கவர்ந்துக் கொண்டதே
கன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே
உம்மை ஆவியோடும்உ
ண்மையோடும் ஆராதிப்பேனே
மகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே
உம் பாதம் என்னை தாழ்த்தி
உம்மை உயர்த்திடுவேனே

Neer sonnathai seibavar

நீர் சொன்னதை செய்பவர்
சொல்லாததை தருபவர்
என் தேவைகள் அறிந்தவர்
முன்குறித்து வைத்தவர்
உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே
எதைக்குறித்தும் கலக்கமில்லை
கைவிட நீர் ஒரு மனிதனில்லை
யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்
ஆதரவாய் எனக்கிருந்தீர்
என் விளக்கை ஏற்றி வைத்தீர்
எபிநேசராய் உடனிருந்தீர்
இதுவரை உதவிகள் செய்து வந்தீர்
ஏற்ற வேளை எனக்கும் உண்டு
காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
அமர்ந்திருப்பேன் உம் கரத்தில்
உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்

Ummai paadamal yaarai paaduven

உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்
உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்
உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே
உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியது
அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
உங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்த
உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது
என் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே
என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே
எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து
ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து
வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே
வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே

UMMAI UYARTHIDUVEN MELE MELE

உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)
எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே
கன்மலை மேல் நிறுத்தி
என் அடிகள் பெலப்படுத்தி
தேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்
அநேகர் அதை கண்டு
பயந்து உம்மை நம்பி
என்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன்
மேலான கிருபைகள்
மேலான தரிசனங்கள்
மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்
பூமியிலே கட்டவிழ்ப்பேன்
பரலோகத்தில் எடுப்பேன்
மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன்
அம்புகள் பறந்தாலும்
கொள்ளை நோய் நடந்தாலும்
சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையே
உம்மிலே வாஞ்சையாய் நான்
உம் நாமம் அறிந்ததினால்
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து விட்டீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்ததினால் நன்றி சொல்வேன்

Unga nanmaiyal thirupthiyaaga

உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்
உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்
தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே
கூப்பிடும் போது எனக்கு துணையாவீரே
குப்பையிலிருந்து எளியவனை தூக்கி
பிரபுக்களோடு உட்கார வைத்தீர்
ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கி
கன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்
நல்லவரே நீதியின் சூரியனே
நித்தியமானவரே நிரந்தரம் நீர்தானே
ஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே
தேவைகள் வரும்போது என்னோடு வருவீரே - நன்மையால்
வனாந்திரங்கள் வயல்வெளியாகும்
வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்
சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்
செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்
காற்றை கவனித்தால் விதைத்திட முடியாது
மேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது
மலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது
பர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது - நன்மையால்

Irakam niranthavare en yesu

இரக்கம் நிறைந்தவரே
என் இயேசு ராஜனே
எண்ணில்லா அதிசயங்கள் எண்ணில்லா அற்புதங்கள்
என் வாழ்வில் செய்தவரே
எண்ணி எண்ணி நான் பாடுவேன்
ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன்
சிறுமையும் எளிமையுமான என்னை
என்றும் நினைப்பவரே
தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின் தேவனே
என்னை நடத்துகின்றீர்
வனாந்திரம் வறட்சியுமான என் வாழ்வை
என்றும் காண்பவரே
ஆகாரின் கதறலுக்கு இரங்கின என் தேவன்
எனக்கும் இரங்கினீரே
தனிமையுமான வெறுமையுமான என் வாழ்வில்
துணையாய் வந்தீரையா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை
என்னை தொடர்ந்திடுமே