Tuesday, December 22, 2015

Neenga pothum Yesappa



நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

Neer Mathram Enaku

நீர் மாத்ரம் எனக்கு (4)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2) --- நீர் மாத்ரம்

1. அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2)
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு --- நீர் மாத்ரம்

2. ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2)
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு --- நீர் மாத்ரம்

Neere Yen Thanjam


நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

இயேசுவே ராஜா, இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர், இயேசுவே (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

APPA NAAN UMMAI PAARKIREN LYRICS

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

4. ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Neer Indri Vazhvethu Iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா

உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே --- நீரின்றி

2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா --- நீரின்றி

3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா --- நீரின்றி

Neer Ennodu Irukkumpothu

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

1. மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே (2)
அபிஷேகம் எனக்குள்ளே - நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

3. மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

Neenga mattum illadhirundhal

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே (2)

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது - (கடும்) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) --- நீங்க

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்த போது - (மரண) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) --- நீங்க

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
வழிதப்பி அலைந்த போது - (உந்தன்) (2)
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) --- நீங்க

Neer Valgave Yesuve


1. நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசுவே (4)

2. நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர்
அல்லேலூயா இயேசுவே (4)

3. நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர்
அல்லேலூயா இயேசுவே (4)

4. என்னை மீட்டீரே இயேசுவே
உம் சொந்த இரத்தம் சிந்தியே
அல்லேலூயா இயேசுவே (4)

Malaigalellam Valigalakuvaar


மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு - (2)

ஆபிரகாமின் தேவன் - அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் - அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) --- ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) --- ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) --- ஆபிரகாமின்

Mahimain Devane enthan


1. மகிமையின் தேவனே - எந்தன்
மகத்துவ ராஜனே - உம்மை நான்
வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
எந்தன் உயிரான இயேசுவே

வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே

2. மரணத்தை வென்றவர் - இன்றும்
உயிரோடிருப்பவர் - தூய
ஆவியினால் என்னை நிரப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்

வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே

Matchmai Nirainthavare ella thuthikkum

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே --- உம்மை

2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே --- உம்மை

JEYAM KODUKKUM DEVANUKKU LYRICS

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

1. நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் --- ஜெயம்

2. அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் --- ஜெயம்

3. நம்பிக்கை தேவனே
நன்மை தருபவர்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் --- ஜெயம்

4. உண்மை தேவன்
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர்
உறங்குவதில்லையே --- ஜெயம்

Aariraro solli paadungal

ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு பாலன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்

1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
நம் பாவம் யாவையும் போக்கிடவே
பூமியில் பாடுகள் அடைந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

Isai malayil thenkavi

இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் - 2

1. வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதை இதே

2. மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார்

3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார்

Ulagil Vandhaar Deiva Sudhan

உலகில் வந்தார் தெய்வ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
அதிக் குளிரில் நடு இரவில்
உதித்தனரே மானிடனாய்

1. பெத்தலையில் மாடடையில்
புல்லணையில் அவதரித்தார்
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே

2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினரே விண்ணவனை
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே

Kanni Thaai Mariyaal varavetral


கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் - இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் - இனி
கனவான்கள் கைவிரியும்

2. தெய்வத்தின் நல் விருப்பம் - என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் - வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் - ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் - இனி
மலர்ந்திடும் அவனியெங்கும்

Deva Loga Ganame thuthar

தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

Kristhora ellorum kalikoornthu


1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Kaalam Pani Kaalam vaanil oli kolam

காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
பாலன் பிறந்தார் அன்று
பாசத் திருநாள் இன்று

தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
பாசத் திருநாள் இன்று

1. பூக்களின் எழில் புன்னகை தனில்
இறைமகன் பாசம் காணலாம்
நீரலை எழும் நீர்களின் தனில்
இறைமகன் நேசம் காணலாம்

பகலிலே வேகமாய்
இரவிலே தீபமாய்
காற்றும் இறை நாமமே
கலங்காதே நாம் வாழலாம் --- காலம்

2. காவியம் புகழ் பரமனின் அருள்
மழைத் தரும் மேகம் ஆகுமே
பாலகன் பதம் பணிந்திடும் மனம்
ஒளி விடும் தீபம் ஆகுமே

அமைதியை செல்வமாய்
அருளையே அமுதமாய்
தாரும் இறை இயேசுவே
எம் வாழ்வு ஒளி வீசுமே --- காலம்

Pirandhaar Oru Palagan

1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்.

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே.

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே.

5. ஆதி அந்தம் அவரே,
ஆர்ப்பரிப்போம் நாமே;
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

Paadinaal Paaduvaan yesu baalanai

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்

1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
என்னரும் போதனை இயம்பி நின்றிரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே

2. பாவை உம்மை தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்

Chinnanchiru Kulanthaiyai piranthar


சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!

2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

Kolkothave kolai marame


கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

KALVARIYIN KARUNAIYITHE KAAYANGALIL LYRICS

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvariye kalvariye karunaiyin


கல்வாரியே கல்வாரியே
கருணையின் உறைவிடம் கல்வாரியே

பாவங்கள் போக்கி விட்டீர்
பாதாளம் வென்று விட்டீர்
பாவபாரம் நீக்கி விட்டீர்
பாசமாய் மீட்டு கொண்டீர்

சாபங்கள் தொலைத்து விட்டீர்
சாத்தானை ஜெயித்து விட்டீர்
மரண பயம் நீக்கி விட்டீர்
மகிமையை அணிந்து கொண்டீர்

பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
பெலவீனம் சுமந்து விட்டீர்
தழும்புகளால் குணமாக்கினீர்
தடைகளை அகற்றி விட்டீர்

Manathurugum deivame yesaiya

மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா

சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா

Adhi Thiruvarthai Dhivya

ஆதித் திருவார்த்தை திவ்விய 
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

Mesiyave Mesiyave boologam vantheere

மேசியாவே மேசியாவே
பூலோகம் வந்தீரே
நாங்களுந்தான் பாடணும்
நாங்களுந்தான் ஆடணும்
உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும்

1. பெத்தலகேம் என்னும் ஊரினிலே
இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே
வானவர்கள் வாழ்த்திடவே
வையகமும் மகிழ்ந்திடவே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டமே

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

2. பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
சந்தோஷம் சமாதானம் பெருகிடவே
கந்தைத்துணி முன்னணையில்
இறைமைந்தன் உறங்கிடவே
அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

3. மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே
எண்ணில்லா நன்மைகள்
என்றென்றும் கிடைத்திடவே
மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

Malara Malara velli malare

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது - இம்
மண்ணில் பூத்த மலரே - உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க

Maasila Deva Puthiran

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

Iya neerandru anna kaybavin veetil

ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்டபாடு ஏசையாவே
கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே

முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Punniyar ivar yaro vilunthu jebikkum


புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Kalvari malaiyoram vaarum

கல்வாரி மலையோரம் வாரும்
பாவம் தீரும்
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே

லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு
தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி

ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ
உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சோ
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே -ஜோதி

மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே -ஜோதி

ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை
நாமக்கிறிஸ்தவர்க்கும் இருபங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும் -ஜோதி

Nenjam gethsemaneku nee nadanthu


நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ
சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்

ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்

தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே

அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே

ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே
குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ

வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்

தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்

En intha paaduthan swamy

ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
என்ன தருவேன் இதற் கீடுநான்

ஆனந்த நேமியே
எனை ஆளவந்த குரு சுவாமியே

கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே மனம் நோகவும் சொல்
அளவில்லாத் துயரமாகவும்

முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்
முறை முகம் தரைபடவீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும் உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Ennavale jeevan viduththiro swamy

என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
எனால் உமக்கென்ன லாபம் யேசு
மனா பரப்ரம திருவுளமோ இது

சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி
விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
மீண்டவாறிது மிக்க விசாலமே
ஆண்டவா அது பக்கிஷ நேசமே

ENGUTHE ENNAKANTHAN THUYAR LYRICS

ஏங்குதே என்னகந்தான் துயர்
தாங்குதில்லை முகந்தான்

பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர் கண்டு

மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு

யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யெரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு

நீண்ட குரு செடுத்து எருசலேம்
தாண்டிமலையடுத்து
ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே

Aatham purintha pavathale manudanaagi


ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே

Mulmudi sudiya aandavar

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Kurusinmel kurusinmel kaankindrathaarivar

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Karthar thuyar thoniyaai

கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்திலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தேற்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார்

துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந் தனிமையிலே

பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ இரத்த வேர்வையுடன்

திறந்த கெத்சமனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடுனும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவே

பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கின்றதே
பெருமூச்சுடன் ஜெபிக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியிலே ஜெபிப்பேன்

இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன்

Kalvariye kalvariye oppadra


கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே

தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்

காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு

பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா

சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்

Ean indha paadugal umakku

ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவே காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோர காட்சியும் எதற்கு

சிந்தையில் பாவம் செய்ததால் தான்
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாக துடிக்கிறதே

தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தை தீர்த்திட வருகின்றேன்

Kandirgalo siluvaiyil marikkum yesuvai

கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை

மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ

கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே

சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை