Saturday, July 30, 2016

EN ULLAM YENGUTHE UM ANBIRKAGAVE LYRICS

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

ENAKAI KARUTHUVAR ENNAI BOSHIPPAR LYRICS

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு

2. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் --- நம்புவதற்கு

3. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் --- நம்புவதற்கு

4. சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் --- நம்புவதற்கு

KARTHAR THAME NAM MUNNE POVAAR

கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)

நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)

1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்