Monday, December 18, 2023

Abrahamai Aasirvathitha Aandave Arulume - Tamil Marriage song

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1.
கல்லின் மனைபோலக் கணவனும்
இல்லின் விளக்கெனக் காரிகையும்
என்றும் ஆசிபெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்
இணைந்து வாழவே - இணைந்து வாழவே

2.
அன்பும் அறனும் அங்கோங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே
இன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே - நயந்து வாழவே

3.
உள்ளம் விரும்பிய செல்வமுடன்
உத்தமச் சேய்களையே தாரும்
நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே
வையகந்தனில் வல்லபிதா உம்மை
வணங்கி வாழவே - வணங்கி வாழவே 

Intha Mangalam selikkave kirubai seiyum - Tamil Marriage song lyrics

இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1.
ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் - பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2.
தக்க ஆபிரகாமும் விண்டனன் - அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் - நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3.
சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய் 

Kaanavoorin Kalyanathil Than - Christian Marriage lyrics

கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார் - (2)
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

1.
பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் - (2)
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் - (2)
ஆகா நான் எங்கு காண்பேனோ - (2)
இயேசு என் நேசர் போல் --- கானாவூரின்

2.
அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார் - (2)
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் - (2)
ஆகா நான் எங்கு காண்பேனோ- (2)
நேசர் என் இயேசு போல் --- கானாவூரின்








The First miracle of Jesus recorded in Gospel of John.