Saturday, April 11, 2020

THAAI MARANDHALUM AVAR UNNAI

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2

ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா
பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒருபோதும் மறப்பதில்லை 

நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும்-2
நல்ல நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உண்மை நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே 

அன்பானவர் மறைந்தாரோ
ஆதரவை இழந்தாயோ-2
ஆறுதலின் தேவன் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
உண்மை தேவன் நம் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் 

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை
அவர் ஒருபோதும் மறப்பதில்லை
இயேசு ஒருபோதும் விடுவதில்லை

REHOBOTH EN VAAKKUTHTHATHTHAME

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்

SENAIGALIN KARTHAR NAMMODU IRUKIRAAR

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் கட்டளையிட நிற்கும்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

1.நான் கெம்பீரமாய் நடக்க
என் பாதையை அகலமாக்கினீர்
நான் விசாலத்தில் தங்கிட
என் எல்லையை பெரிதாக்கினீர்-2
என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
அதிகாரமாய் பெருகிற்று-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
நான் செய்வதை வாய்க்க செய்தீர்
என் கனவுகள் நிறைவேறிட
நீர் வாசலை திறந்து வைத்தீர்-2
எனக்கு முத்திரை மோதிரம் தந்து
உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

3.நான் வாழ்ந்து செழித்திருக்க
நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
நான் சிங்காசனத்தில் அமர
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2
எனக்கு எதிரான கையெழுத்தை
முற்றிலும் குலைத்திட்டீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

YESU ENAKKU JEEVAN THANDHAARE

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

சமாதானம் தந்தார் இயேசு -4
புது வாழ்வு தந்தார் இயேசு -4
விடுதலை தந்தார் இயேசு -4
வல்லமை தந்தார் இயேசு -4
அபிஷேகம் தந்தார் இயேசு -4

YESUVIN NAAMAM ELLAVATTERKUM

இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்

வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும்
இம்மையிலும் மறுமையிலும்

ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்

ARULE PORULE AARANAME

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி

சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்கு செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந் துதியுனக் கொரு கோடி

பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே!
பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச்சிறியேன் கழறுந் துதியுனக் கொரு கோடி,

பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,
நத்தும், இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொரு கோடி

ASIRVATHIKKUM DEVAN THAM ASIR

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்


பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்


1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு


2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு


3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

AAR IVAR AARAARO INDHA

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ ? 
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த 
மாவலரோ ? — ஆர்
2. மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ? 
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? — ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? — ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? — ஆர்
5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? — ஆர்

INDRU KANDA EGIPTHIYANAI

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

தண்ணீரை நீ கடக்கும் போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியால் கொடியேற்றிடுவார்

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
பாதையிலே காக்கும் படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்

சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்

UNGA MUGATHAI PAARKANUME YESAIAH

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2

6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

UN ITHAYA VAASAL THEDI VARUGIREN

உன் இதய வாசல் தேடி வருகிறேன் 
என் இதயம் உறைய என்னில் வாருமே 
நீ இல்லையேல் நானில்லையே – 2 
நான் வாழ என்னுள்ளம் வா

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் 
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் 
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா 
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா 

குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம் 
நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம் 
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா 
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா  

உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம் 
உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம் 
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா 
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா

UNNAIYANDRI VERAE KETHI ORUVARILLAIYE

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ!

அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ!

பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை, பரதவித்தேனே தேடி,
கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோதான்?
கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ!

அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வாஞ்சகண் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து க்ருபைவை யேசு ஸ்வாமீ

எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் அவ்வளவுக்கதி தோஷி,
பித்தனைப் போல பிதற்றிக் கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்கவை யேசு ஸ்வாமீ!

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன,
கல்லைப்போல் கடினங்கொண்ட கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமீ!

AZHAGANA YESUVAI ARADHIPPEN

அழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே
உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே
உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன்
உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன்

உலகம் தருமா உம் அன்பைப் போலவே
எதுவும் தருமா உம் அன்பு தரும் இன்ப சந்தோஷம்
உம் சிலுவையின் மகிமை என் மனதுக்கு இனிமை
உம் சிலுவையின் பெருமை என் மனதுக்கு வலிமை

உன் நாமம் பாடப் பாட மனம்
கோயிலாக உணர்ந்தேன் சந்தோஷமாய்
உன் வேதம் தேட தேட நித்தம்
வாழ்வின் பாதை அறிந்தேன் கொண்டாட்டமாய்
உம் பார்வை நாடி நாடி அலைந்தேன்
என் நேசர் நீர் தானே
உம் பாதை போக போக உணர்ந்தேன்
என் பாதை நீர் தானே-அழகான

உம்மோடு பேச பேச அருள் ஜீவ ஊற்றை
அறிந்தேன் அற்புதமாய்
உம் வார்த்தை கேட்க கேட்க இருள் ஓடி
போக உணர்ந்தேன் நித்தியமாய்
உம் பாதம் தேடி தேடி அமர்வேன்
என் ஜீவன் நீர் தானே
உம் நேசம் வாஞ்சையோடு துதிப்பேன்
தெய்வீகம் நீர் தானே - அழகான

ARUVIGAL AYIRAMAI PAAINDHU

1. அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
இருக்கிறேன்”என்றார்.

2. வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வோரே
ஓலத்தில் அடங்கும்.

3. அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
என் ஆன்மாவும் ஒன்றே.