Tuesday, November 12, 2019

IDHAYAM PAADUM INIYA PAADAL



இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக 
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக 
நினைத்தேன் நினைத்தேன் நான் தர 
அனைத்தும் உந்தன் காணிக்கை 

பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு 
காய்த்து கனிந்த கனிகளும் - ஓங்கி 
உயர்ந்த மரங்களும் அதை சூழ்ந்து வளர்ந்த செடிகளும் 
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் 
இறைவன் தந்த கொடைகளே 

நினைத்தேன் நினைத்தேன் நான் தர 
அனைத்தும் உந்தன் காணிக்கை 

பறந்து திரியும் பறவைகள் - அவை 
பாடும் கடல் வாழ் விலங்குகள் 
காற்றும் கடலும் கார்முகில் 
வான வில்லும் நிலவும் விண்மீன்களும் 
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் 
இறைவன் தந்த கொடைகளே 
நினைத்தேன் நினைத்தேன் நான் தர 

அனைத்தும் உந்தன் காணிக்கை 

No comments: