Thursday, February 14, 2019

PIDHAAVAE NANDRI SOLGIROAM LYRICS


பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -2
1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே
2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே 
3. கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே
4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

JEBAME EN VAAZHVIN SEYALAGA LYRICS


ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே
1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே
2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே
3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே
4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

UN KARIYATHAI VAIKAPANNUM KARTHAR LYRICS


உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)
1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்
2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்
3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்
4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)

DEVAREER NEER SAGALAMUM SEIYA VALLAVAR LYRICS


தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது

ORU MAGIMAYIN MEGAM LYRICS


ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

RATCHANYA MAGIMAI THUTHI GANA LYRICS


இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா(2)
நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)
1. சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா
2. காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா
3. சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா
4. மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா