Friday, May 18, 2018

VARAM KAETTU VARUGINTREN IRAIVA LYRICS


வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2

பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன் 

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்
இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் - 2
ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2 - நல்
ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் - நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் - 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - 2 - உன்

அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்

No comments: